Posts

Showing posts from January, 2023

ரணிலின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடல் காலத்தை வீணடிப்பதற்கானதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகள் காலங்களில் சர்வதேச பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வை கடந்த காலங்களில் கையாண்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் உடன்பாடு, 1995களில் சந்திரிக்கா அரசாங்கத்தின் தீர்வு திட்ட பொதி, 2002இல் ரணில் விக்கிரமசிங்காவின் நோர்வே மத்தியஸ்த சமாதான உரையாடல், 2015 ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்க நகர்வுகள் என அனைத்தினதும் பின்புலத்திலும் இலங்கையில் அன்றைய கால நெருக்கடிகளை தவிர்ப்பதற்கும் சர்வதேச ஆதரவை திரட்டுவதற்குமான உத்தியாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வு உரையாடல்கள் கையாளப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உரையாடல்களும் அதிக சந்தேகங்களையே தமிழ்த்தரப்பினரிடையே ஆரம்பம் முதலே உருவாக்கி உள்ளது. அதனை உறுதிப்படுத்துவதாகவே ரணில் விக்கிரமசிங்காவின் சமகால நிகழ்வுகளும் அமையப்பெறுகிறது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்காவின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடலின் நடைமுறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்ட...

ஜனாதிபதியின் யாழ் வருகையும்; நல்லிணக்க நாடக பொங்கலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழர் திருநாளை வடக்கில் கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வருகையும், மக்கள் எதிர்ப்பு போராட்டம், தொடர் விசாரணை மற்றும் கைது என்பனவே கடந்த வாரத்தில் தமிழர் தாயகத்தின் முதன்மையான தேசிய அரசியல் செயற்பாடாக அமைகின்றது. இதனைத்தாண்டி தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தம் சார்பான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்மரமாக செயற்பாட்டார்கள். எனினும் இப்பத்தியின் கடந்த இரு வாரங்களும் உள்ளூராட்சி சபை சார்ந்து தமிழரசியல் கட்சிகள் முட்டி மோதும் சுயநல அரசியல் செயற்பாடுகளே விளக்கப்பட்டிருந்தது. எனவே இவ்வாரம் ரணில் விக்கிரமசிங்காவின் யாழ் வருகை மற்றும் அது ஏற்படுத்தியுள்ள அரசியல் தாக்கங்களை தமிழ்த்தேசிய அரசியல் பரப்பின் பார்வையில் முதன்மைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இப்பின்னணியில் இக்கட்டுரை ஜனாதிபதியின் யாழ் வருகை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வின் தொகுப்பில் உள்ள அரசியல் தாக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி-15(2022) அன்று பொங்கல் கொண்டாடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லூர் சிவன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வை ஆரம...

தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் வருகை; இஸ்ரேலின் ஜனநாயகத்தை சிதைக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலின் இயக்கத்தில் யூதர்களினதும் யூத அரசினதும் வகிபாகம் பிரதான நிலையை பெறுகின்றது. எனினும் யூத அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை சமீபகாலமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. 2019 ஏப்ரல் தொடக்கம் 2022 நவம்பர் வரையில் ஏறத்தாழ நான்கு ஆண்டு காலப்பகுதியில் ஐந்து பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டு நவம்பர் இறுதியாக இடம்பெற்ற தேர்தலிலும் அரசியல் கட்சிகள் எவையும் பெரும்பான்மையை பெறாத நிலையில் ஆட்சியமைப்பது தொடர்பதில் பெரும் இழுபறி நிலவியது. புதிய அரசை அமைப்பதற்கு இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக் ஹர்சொக் டிசம்பர்-25 வரை காலக்கெடு விதித்திருந்தார். காலக்கெடு விதிக்கப்பட்ட இறுதி தினத்தின் நள்ளிரவு முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போதே  இஸ்ரேலிய முன்னளாள் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தலைமையில் புதிய அரசாங்கத்துக்கான உடன்படிக்கை எட்டப்பட்டது. உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை காணாத தீவிர வலதுசாரி மற்றும் மதச்சார்புடைய அரசாங்கமாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கட்டுரை இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் அரசியல் த...

2022இல் ரஷ்யா-உக்ரைன் போர் முன்அனுபவம்; 2023இல் தைவான் மீதான சீனாவின் போர் அபிலாசையை தளர்த்துமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இருபத்தொராம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் முன்னரை பகுதியின் முதலிரண்டு ஆண்டுகளும் உலகுக்கு மிகவும் சவாலான காலமாகவே கடந்து சென்றுள்ளது. தசாப்தத்தின் ஆரம்பமே கொரோனா முடக்கம் உலகிற்கு ஏற்படுத்திய அரசியல் பொருளாதார நெருக்கடிகளுடனேயே ஆரம்பமாகியது. அதன் விளைவுகளைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு முன்னரே ரஷ்யா-உக்ரைன் போர் உலகை தொடர்ச்சியாக இறுக்கமான சூழலுக்குள் நகர்த்தி வருகின்றது. யதார்த்தவாதக் கோட்பாட்டாளர்கள் சர்வதேச நாடுகளுக்கிடையிலான உறவை வரையறைக்கும் அராஜக தோற்றங்களின் வடிவமே கடந்த ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போரினூடாக வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் அனுபவத்திலிருந்து உலகின் எதிர்கால போருக்கான முன்அனுபவங்களை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வரையறுக்க ஆரம்பத்துள்ளார்கள். குறிப்பாக உலகம் எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தும் போராக சீனா-தைவான் போரையே கருதுகிறது. இக்கட்டுரை ரஷ்யா-உக்ரைன் போரின் அனுபவம் சீனா-தைவான் போரில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கக்கூடியது எனும் தேடலை மையப்படுத்தியதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. போரின் எதிர்காலம் பற்றிய முன்னறிவிப்புகள் கதைகள் மற்றும் அறிவுசார் நாகர...

சிதைந்துள்ள தமிழ் அரசியலின் கூட்டணிகளும் தென்னிலங்கையின் படிப்பினையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் கட்சிகளின் நடத்தைகளின் உண்மையான வெளிப்பாடுகள் தேர்தல் காலங்களிலேயே புலப்படுகிறது. குறிப்பாக தமது தேர்தல் அரசியல் நலனுக்குள் அரசியல் கட்சிகள் சுருங்குவது அரசியல் கட்சிகளின் தேர்தல் கால நடத்தைகளில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை 2023ஆம் ஆண்டு தேர்தல் வருடமாகவே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக 2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. இலங்கையின் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் கூட்டுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் களமிறங்கியுள்ளன. ஒட்டுமொத்த இலங்கையிலும் பல புதிய கூட்டுக்கள் துளிர் விடுவதுடன், முன்னைய கூட்டுக்கள் பிளவுபடுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய கட்சிகளின் கூட்டு மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் கூட்டின் இயல்புகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமித்தேசிய பரப்பில் 2000களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல் திரளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலை கூட்டமைப்பாக சந்திக்காது தமிழரசு கட...

தமிழ் அரசியல்வாதிகள் உள்ளூராட்சி கட்டமைப்பை சுயலாப அரசியலுக்கா பயன்படுத்துகிறார்கள்? -ஐ.வி.மகாசேனன்-

Image
2023ஆம் ஆண்டு ,லங்கையில் தேர்தல் ஆண்டாக அமைய உள்ளது என்பதே பரவலான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி அதற்கு வாய்ப்பளிக்குமா என்பது தொடர்பிலும் பரவலான விமர்சனங்கள் பொதுவெளியில் காணப்பட்டது. இந்நிலையிலேயே இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிப்புக்களை தேர்தல் ஆணைக்குழு 2023இன் முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முழு இலங்கையளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு இது முதல் தீர்மானிக்கும் பரிசோதனை ( Litmus Test ) ஆகும். அதேவேளை தமிழரசியல் பரப்பிலும் தமிழரசு கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலை பரிசோதனை களமாக பயன்படுத்த முனைகிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற திரட்சியை நீக்கி தமிழரசு கட்சி தனித்து உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலாக உரையாடலை ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபையின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் தமிழரசியல் போக்கினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு நீண்ட சலசலப்பை நிறுத்தி, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு...

உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயமும் ரஷ்யா-உக்ரைன் போரின் பரிணாமமும்! -சேனன்-

Image
உலக அரசியல் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள ரஷ்யா-உக்ரைன் போர் நகர்வுகளை உலகம் உன்னிப்பாக அவதானித்து கொண்டுள்ளது. சர்வதேச அரசியலில் யதார்த்தவாதத்தின் பலத்தை உறுதிப்படுத்தி கொண்டுள்ள ரஷ்யா-உக்ரைன் போரின் அண்மைய நகர்வான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயம் தனித்துவமான உலக அரசியலை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய- உக்ரைன் போர் 300 நாட்களை கடந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். அமெரிக்கா ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் உக்ரைனுக்கான ஆதரவை வெளிப்படுத்திய போதிலும் சில வரையறைகளை பேணிவந்தது. எனினும் தற்போது உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் வரையறைகளை தாண்டும் சூழல் உருவாக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை அரசியல் ஆய்வாளர்களிடையே உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் தற்போதைய விஜயம் போரை முழு நீளப் போராக மாற்றுவதுடன், உலகளாவிய போராக மாற்றுமா என்ற சந்தேகத்தைத் தந்துள்ளது. இக்கட்டுரை உக்ரைன் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தந்துள்ள விளைவுகளைத் தேடுவதாக அமைந்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21.12.2022 அன்று அமெரிக்காவுக்கு விஜயம்...

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துக்கான தமிழரசியல் கட்சிகளின் கோரிக்கை செயலூக்கம் பெறுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுசார் உரையாடல் முதன்மையை பெற்றுள்ளது. அதன் செயற்பாட்டு விளைவுகள் தொடர்பில் சந்தேகங்கள் காணப்படினும், தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பொறிமுறைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தரப்பிடையேயான பிரச்சாரங்கள் ஊடகப்பரப்பில் வியாபித்தே காணப்படுகின்றது. குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தொடர்பான கருத்துநிலை  தமிழ் அரசியல் தரப்பினரிடையே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பான தமிழரசியல் தரப்பின் நிலைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான ஜனாதிபதியின் முயற்சிகள் தொடர்பில் தமிழ்த்தரப்பில் மாத்திரமின்றி தென்னிலங்கை சிங்கள கட்சிகளிடையும் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்க ஸ்திரத்தன்மை தொடர்பிலான கேள்விகளே தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நம்பிக்கையீனத்துக்கு காரணமாகின்றது. எனினும் தமிழரசியல் தரப்பினரிடையே தேசிய இனப்பிரச்சினை தொடர்பான கடந்த கால முயற்சிகளின் வி...