2025ஆம் ஆண்டு உலகளாவிய போராட்டங்களும் Gen-Z சமுகம் ஏற்படுத்தியுள்ள நிலையற்ற மாற்றங்களும்! -ஐ.வி.மகாசேனன்-
சமகாலத்தில் தமிழ்ப்பரப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் தாக்கத்தில் ‘தற்குறி’ என்ற வசைபாடல் இளந்தலைைமுறையினர் மீது விரவி காணப்படுகின்றது. பெரும்பாலும் 2000இற்கு பின்பு பிறந்தவர்களை சமுகம் பற்றிய போதிய அறிவும் அக்கறையுமற்றவர்கள் என்ற தொனியிலேயே தற்குறிகள் என்ற வசைபாடல்கள் காணப்படுகின்றது. அதே பருவத்தினர் ‘Gen-Z போராட்டக்காரர்கள்’, ‘Gen-Z புரட்சியாளர்கள்’ என சமுக மாற்றத்தின் பிரதான பங்களிகளாக கொண்டாடும் சூழலொன்று சர்வதேச பரப்பில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் ஆரம்ப படிமங்கள் தென்னாசியாவில் குறிப்பாக 2022ஆம் ஆண்டு அரகலயவை மையப்படுத்திய இலங்கையின் போராட்ட சூழலே அடையாளப்படுத்தப்படுகின்றது. 2025ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் நெருக்குவாரங்களுக்கு பின்னால் முதன்மையான விவாதமாக Gen-Z ('Generation-Z’ தோராயமாக 1997-2012களுக்கு இடையில் பிறந்தோர்) என்ற சொல்லாடல் பரவலாக காணப்பட்டுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு எதிர்ப்பு போராட்டங்களை வடிவமைப்பதில் Gen-Z இயக்கத்தின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்ட...