Posts

Showing posts from 2025

கூட்டுக்கான தேவையையே தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்பார்வையில், தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றியின் ஊடாக தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் மாறாக நாடளாவிய ரீதியில் ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சியும் அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் உள்ளார்ந்த பார்வையில் இரண்டு போக்குகளும் முழுமை பெறவில்லை என்பதே நிதர்சனமானதாகும். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி, தமிழ்த்தேசியத்தை அளவீடு செய்ய போதுமானதாக அமையவில்லை. தமிழ்ப்பரப்பில் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ள தமிழரசுக்கட்சி, கடந்த காலங்களில் தென்னிலங்கை கட்சிகளில் ஆதிக்கம் செலுத்திய பலரையும் இம்முறை தமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியிருந்தது. மேலும் தேசிய மக்கள் சக்தி தமிழர் சபைகளில் முன்னிலையை பெறாத போதிலும், தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையை உள்ளூராட்சி சபைகளில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் ஈழத்தமிழர்களின் அரசியல் வெளிப்பாட்டை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரான தமிழ...

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் - 2025 | தேசிய மக்கள் சக்தியின் தனியாதிக்கத்திற்கான சவாலும் வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசிய அலை மேலெழுகையும் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை, தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியாக மதிப்பிடப்பட்டது. அதனை சீர்செய்வதற்கான களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது. தமிழ்த்  தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் மத்தியில் பொது எதிரியாக ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்பட வேண்டும் எனும் பிரச்சாரமே முதன்மையாக காணப்பட்டது. தேர்தல் முடிவுகளிலும் அத்தகைய விளைவினையை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது. அவ்வாறே தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணிசமான சபைகளில் முன்னிலையை பெற்றுள்ள போதிலும், தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைகளது தேர்தல் முடிவுகளின் அரசியல் முக்கியத்துவத்...

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழகம்-ஈழத் தமிழர் உறவு தமிழ்த் தேசிய அரசியல் இருப்பில் அவசியமானதாகும். தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை இலங்கை இந்திய அரசுகள் பிரிவினைவாத சிந்தனையாக உருவகப்படுத்துவதனால், அவ்விரு நிலப்பரப்பின் இடைவெளியை மக்களுக்கிடையிலான இடைவெளியாகவும் பேணுவதில் விழிப்பாக உள்ளார்கள். சமகால நிகழ்வுகள், அரசுகளின் எதிர்பார்க்கைகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழக-ஈழத்தமிழ் மக்கள் குழுக்களிடம் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் தமிழ் மொழி உரையாடலை, தமிழகத்தின் இளையவர்கள் 'சிங்கள தமிழ்' என்ற அடைமொழிக்குள் அழைக்கும் சூழலே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கெதிரான முதல் எதிர்க்குரலும், மரண ஓலமும் தமிழகத்திலிருந்தே கிடைக்கும். ஆயினும் சமகாலத்தில் ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக தென்னிலங்கையையும் பொருத்தி பார்க்கும் நிலைமைகளையே தமிழகத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதில் கலை இலக்கிய வறுமையும் பாரிய செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமைகின்றது. இக்கட்டுரை தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர்களின் நிலையை தேடுவதாகவே ...

தேசிய மக்கள் சக்தியின் 'இனவாதமற்ற ஆட்சி' பிரச்சாரமும் சிங்கள பௌத்தமயமாக்கும் ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிராச்சரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன. இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்கள். தங்களின் கடந்த காலங்களுக்கு பொறுப்பு கூறாது, தங்களை மீட்பர்களாகவும் புனிதர்களாகவும், தங்கள் ஆட்சியை ஒளி நிறைந்ததாகவும் சித்தரிக்க முயல்கின்றார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஏழு மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் அடையப்பட்ட விகிதங்களையாவது பொதுவெளியில் சொல்ல திராணியற்ற நிலைமையிலேயே உள்ளார்கள்.  இக்கட்டு...

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் சனத்தொகை என்பது என்றும் கொதிநிலையான விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றது. மக்கள் தலையெண்ணப்படும் ஜனநாயகத்தில் சனத்தொகை விகிதாசரத்தின் அளவே தீர்மானமிக்க சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் நிலைமாறும் மோதல்களிலும் இவ்சனத்தொகை விகிதாசாரத்தின் மாறுபாடுகள் தொடர்பான அச்சங்களும் வலுவான செல்வாக்கு செலுத்துகின்றது. 2009ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான இனமுரண்பாடாக தமிழ்-சிங்கள முரண்பாடே விவாதிக்கப்பட்டு வந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் சிங்கள-முஸ்லீம் கலவரங்கள் பிரதான விவாதப்பொருளை உருவாக்கியிருந்தது. இதன் பின்னணியில் முஸ்லீம் சனத்தொகையின் அதிகரிப்பு தொடர்பில் சிங்கள பேரினவாதத்திடம் மேலெழுந்த அச்சங்களும் வலுவான காரணமாகியது. எனினும் மறுமுனையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் சனத்தொகை விகிதம் குறைவடைந்து செல்வது தொடர்பில் எவ்வித கரிசணையும் அற்ற நிலையே அச்சமுகத்தில் காணப்படுகின்றது. இதில் யாழ்ப்பாண வைத்தியத்துறை நவீன பாய்ச்சலை உள்வாங்கியுள்ளது. கரு வளர்ச்சி சிகிச்சை பணக்காரர்களுக்கு மாத்திரமே சாத்தியம் என்ற நிலையை மாற்றி ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கான நிறுவன ஒத...

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பெரும்பாலும் இலங்கை அரசியலின் ஜனநாயக இயல்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகின்றது. இலங்கை அரசு இயந்திரமானது குறைந்தபட்சம் காலத்திற்கு காலம் நீதியான தேர்தல்களை நடாத்துவதனூடாகவே ஜனநாயக விம்பத்தை பாதுகாத்து வருகின்றது. அவ்ஒழுங்கிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தது. எனினும் நடைமுறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கையாளும் முறைமை, தேர்தல் மீது நம்பிக்கையீனத்தையும் குழப்பத்தையும் உருவாக்கி வருகின்றது. சுயாதீன செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்களின் செயற்பாடுகளிலும் பொதுவெளியில் நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கு முழு அளவில் அரச இயந்திர பலத்தை இயல்பு நிலையில் பயன்படுத்துவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது இலங்கையின் தேர்தல் மீதும் ஜனநாயக பொறிமுறை மீதும் அவநம்பிக்கையை உருவாக்குகிறது. இப்பின்னணி இலங்கையர்களிடையே, சர்வதேச தளத்தில் இடதுசாரி...

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித்தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக அமைவதனால், அதன் பெறுமதிகள் உயர்வானதாகவே அமைகின்றது. அதனடிப்படையிலேயே ஆளும் தரப்பாகிய தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் யாவரும் தீவு முழுமையாக சூறாவளி பிரச்சார செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகப்பகுதியிலும் தேசிய மக்கள் சக்தி தமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ள அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முழுமையாக வடக்கில் தீவிர பிரச்சார செயற்பாட்டில் உள்ளார். இதனைவிட இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக வடக்கு-கிழக்கில் முகாமிட்டு பிராச்சர செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்கள். மறுமுனையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது இருப்பை உறுதி செய்ய உள்ளூராட்சி சபை தேர்...

அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பும் தாராள பொருளாதார தோல்வியின் எச்சரிக்கையும்! -சேனன்-

Image
'அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அமெரிக்காவின் நண்பனாக இருப்பது அழிவுகரமானது' ( 'It may be dangerous to be America's enemy, but to be America's friend is fatal . ’ ) -ஹென்றி கிஸ்ஸிங்கர்- கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உலக ஒழுங்கின் மாற்றம் அதிக விவாதத்தை உருவாக்கியிருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் ஒற்றைமைய அரசியல் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் சீனாவில் எழுச்சி மற்றும் பல்துருவ உலகிற்கான எதிர் கூறுகள் சர்வதேச அரசியலில் வியாபித்திருந்தது. எனினும் உலக ஒழுங்கின் அதிகார மாற்றம் அல்லது அமெரிக்காவின் நிலை மாற்றத்தை அடையாளப்படுத்தக்கூடிய எந்த ஒரு உறுதியான நிகழ்வையும் இனங் காண முடியவில்லை. சர்வதேச நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புக்களும் உலகமயமாதலுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் ஏற்படுத்தபப்பட்டு நெருக்கடிகளும், அமெரிக்காவை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் சூழலை சர்வதேச அரசியல் அறிஞர்கள் விபரிக்கின்றார்கள். இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கள் சர்வதேச அரசியலில் ஏற...

புதுடெல்லி-கொழும்பு உறவு அசோகப்பேரரசின் பௌத்த பண்பாட்டிற்கு நகர்த்தப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
'நாம் வரலாற்றை மாற்ற முடியும், ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது' -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை-இந்திய பண்பாட்டு உறவு தமிழக-ஈழத்தமிழர்கள் பண்பாட்டு உறவை மையப்படுத்தியே கடந்த காலங்களில் விபரிக்கப்பட்டது. இந்திய-இலங்கை அரசியலும் அதன்வழியேயே நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அண்மைக்காலத்தில் தமிழக-ஈழத்தமிழர் உறவில் விரிச ஏற்படுத்தப்படுகிறது. இதுதொடர்பில் கடந்த வார இப்பத்தியில் விபரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நரேந்திர மோடியின் விஜயத்தில், கொழும்பு-புதுடெ...