Posts

Showing posts from 2025

இளையோர் அரசறிவியல் பங்குபற்றலை ஊக்குவிக்கும் IFES திட்டம்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஈடுபாடு வரவேற்கத்தக்கது! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக அரசியலில் இளையோர் தாக்கமிகு சக்தியாக எழுச்சியடைந்து வருகின்றார்கள். ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் அரகலய முதல் நேபாளத்தின் Gen-z போராட்டம் வரையில் அதனை நிருபிக்கிறது. இதுவொரு வகையில் இளையோரின் தன்னார்வ அரசியல் ஈடுபாட்டை அடையாளப்படுத்துகிறது. எனினும் அதிகரிக்கும் இளையோர் அரசியல் ஈடுபாடு கருத்தியல் இல்லாது வெறுமனவே கலகங்களாகவும், யாரோ ஒரு தரப்புக்கு மாத்திரம் நன்மைபயப்பதாகவுமே மாறி விடுகின்றது. இதன் பின்னணியில் சமுக வலைத்தள யுகத்தில் இளையோரிடையே ஆழமான கருத்து செறிவாக்கமின்மையும் ஒரு மையக் காரணமாகும். நடைமுறை அரசியலோடு தெளிவான அரசியல் சிந்தனையோட்டமும் இணைகையிலேயே ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்க முடியும். அண்மையில் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் (IFES) இலங்கை கிளையின் PAVE (பங்கேற்பு, பரிந்து பேசுதல், குரல் மற்றும் ஈடுபாடு) செயற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் சிந்தனையும் நடைமுறை அரசியலும் ஒன்றிணைக்கும் வகையிலான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்களிடையே PAVE செயற...

அநுரகுமார திசநாயக்க ஒருவருடத்தில் தூசு தட்டியுள்ள நிர்வாக மாற்றங்களும் ஆழப்புதைத்துள்ள பேரினவாத அரசியல் கலாசாரமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
செப்டெம்பர்-21, 2024அன்று அநுரகுமார திசநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அவ்அலையின் தொடர்ச்சியாகவே நவம்பர்-2024இல் நடைபெற்ற 16வது பாராளுமன்றத்துக்கான தேர்தலிலும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. செயல்களை கடந்து ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாகவும் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னராகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தம்மை இலங்கை அரசியல் கலாசார மாற்றத்தின் அடையாளமாகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஒரு சில தளங்களில் குறிப்பாக நிர்வாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கடந்த கால நிர்வாக சலுகைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், போதைப் பொருட்களுக்கு எதிரான நடடிவடிக்கைகள் என சில மாறுதல்களை பொதுமக்களாலும் இனங்காணக்கூடியதாகவே உள்ளது. எனினும் அரசியல் கலாசார மாற்றத்திற்குரிய இயல்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஓராண்டுகளில் கொண்டுள்ளதா என்பதில் அரசியல் ஆய்வுத்துறை மத்தியில் பலமான கேள்விகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை அநுரகுமார திசநாயக்கவின் கடந்த ஓராண்டு கால ஆட்சி இயல்பை தேடுவதா...

ஈழத்தமிழரசியலை பலவீனப்படுத்தும் அரசியல் கட்சிகள்; இறந்த என்புகளும் நினைவுகளுமே போராடுகின்றது! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் ஈழத்தமிழர் தியாக தீபம் திலீபனின் 38து ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனமாக ஈழத்தமிழர் அரசியலில் நினைவேந்தல்கள் கனதியான நிலையைப் பெறுகின்றது. அடுத்த அடுத்த தலைமுறைகளிடம் வரலாற்றை கடத்தி செல்வதிலும், இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு கடந்து வந்த வரலாற்றுப் பாதையினை மீள் நினைவுபடுத்துவதற்கும் நினைவேந்தல்கள் அவசியமாகின்றது. எனினும் ஈழத்தமிழர்களிடம் நினைவேந்தல்கள் சரியாக வினைத்திறனாக கையாளப்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் முரணான வாதங்களே காணப்படுகின்றது. குறிப்பாக அரசியல் கட்சிகள் நினைவேந்தலின் வரலாற்றை கடத்தும் பணிக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க தத்தமது அரசியல் கட்சி நலன்களை முன்னிறுத்துவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளார்கள் என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. இவ்அவலம் தியாக தீபத்தின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலிலும் தொடர்வதனை செய்திகளில் அறியக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை நினைவேந்தல் அரசியலை ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை பலப்படுத்துவதில் பயன்படுத்தக்கூடிய முறையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண...

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கமும் ஜே.வி.பியின் கடந்த கால ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ள விவகாரமே கடந்த ஓரிரு வாரங்களாக இலங்கை செய்திகளில் பிரதான பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக யுத்த வெற்றியூடாக தென்னிலங்கையில் நட்சத்திர நாயகனான, மகாவம்ச மனநிலையின் தொடர்ச்சியாக துட்டகைமுனுவின் பிரதிமையாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச விஜேயராமவிலிருந்து தங்கலக்கு இடம்பெயர்ந்தமை முதன்மையான செய்தியாகவும் அரசியல் விவாதமாகவும் மாறியிருந்தது. இதுவொரு வகையில் பேரினவாத தரப்புக்களை மீள மகிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றுதிரட்டக்கூடிய வாய்ப்ப்புக்களை பொதுஜன பெரமுன தேட வழிவகுத்துள்ளது. மறுமுனைமுனையில் தேசிய மக்கள் சக்தி தமது இயல்பான வினைத்திறனான விளைவற்ற விளம்பர அரசியல் யுக்தியை தொடருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜனத விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) உட்பட இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலுக்குரிய பல விடயங்கள் இலங்கை அரசியலில் நிரவி காணப்படுகின்றது. எனினும் கடந்;த ஓராண்டுகளில் அதற்குரிய வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்காது வெறுமனவே ஜனரஞ்சக ரீதியாக ஈர்க்கக்கூடிய விடயங்கை முன்னிற...

சுயாதீனமற்ற ஐ.நா சபையும் மனித உரிமைக்கு தடையான நில ஆளுகை அரசுகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
காசாவிலும் உக்ரைனிலும் இனப்படுகொலை மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை பற்றிய விவாதங்களின் மத்தியிலேயே, கடந்த பதின்மூன்று வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிடலில் ஈழத் தமிழர்கள் நீதிக்காக காத்துக் கொண்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கடந்த 80 ஆண்டுகளில் உலகில் மலிந்த போர்களை தடுக்க திராணியற்ற நிறுவனம் என்பதைக் கடந்து, பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சமுகத்திற்கு துணையாக அல்லது அரணாக கூட செயற்பட தவறியுள்ளது என்ற விமர்சனம் காணப்படுகிறது. வலிமையான நாடுகளின் நலன்களுக்கு பின்னால் ஐ.நா ஒழிந்து இருந்துள்ளது. ஐ.நா-வின் பலவீனமான தன்மையை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) புத்தகத்திலும் பதிவு செய்திருந்தார். இது தமிழில் காணப்படும் 'சாத்தான் வேதம் ஓதுது' என்ற முதுமொழியை பிரதிபலிப்பினும், சாத்தானின் வேதம் சில நிஜயங்களை உறுதி செய்துள்ளது என்பதே எதார்த்தமாகும். இக்கட்டுரை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நிறுவனங்கள் மீதான நில ஆளுகை உள்ள நாடுகளின் தலையீடுகள் ஏற்படுத்ததும் நெருக்கீடுகளை தேடுவதாக உர...

ஜனாதிபதியின் கச்சதீவு விஜயமும் விளைவற்ற ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
செப்டெம்பர் முதல் வாரம் வடபுலத்திற்கான ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் விஜயம், உள்ளூர் அரசியலை மாத்திரமின்றி பிராந்திய அரசியலையும் நொதிப்படைய செய்துள்ளது. பிராந்திய நாடாகிய இந்திய செய்திகளிலும் அநுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடைவதை மையப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டெம்பர்-01அன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அநுரகுமார திசநாயக்க, அதனோர் பகுதியாக இந்தியாவோடு கடல் எல்லையை பகிரும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியான கச்சதீவுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அண்மைக்காலமாகவே தமிழக அரசியலில் கச்சதீவு மீட்பு மைய விவாதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கச்சதீவுக்கான திடீர் விஜயமும் கச்சதீவை மையப்படுத்திய அரசியல் உரையாடலும் இந்திய அரசியல் தரப்புக்கான எதிர்வினையாகவே அவதானிக்கப்படுகின்றது. இக்கட்டுரை கச்சதீவுக்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மையப்படுத்திய அரசியலை தேடு...

ரணில் விக்கிரமசிங்கவின் கைதும்-பிணையும் உள்ளக நீதிப்பொறிமுறையின் பலவீனமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த வாரம் இலங்கை அரசியலில் மீளவும் ரணில் விக்கிரமசிங்க பிரதான தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். இலங்கை மாத்திரமின்றி சர்வதேச செய்திகளிலும் முதன்மையாக அமைந்திருந்தது. சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் நிறைவேற்றுத்துறை ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார். ஒருவகையில் இவ்சீர்திருத்தத்தின் பின்னணியிலும், கைது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான விசாரணைக் குழு உருவாக்கத்திலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்து செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இக்கைது தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகளிடையே கூட்டுச்செயற்பாட்டை ஊக்குவித்துள்ளதுடன், ஆளுந்தரப்பு இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எனினும் குறைந்தபட்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியை ஒரு நாள் கூட சிறைக்குள் அனுப்பமுடியவில்லை என்ற விமர்சனமும் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் நீதிப்பொறிமுறை உள்ளக நீதிப்பொறிமுறையின் உறுதிப்பாட்டை...

அமெரிக்க வரிவிதிப்பு கொள்கையும் இந்திய-சீனா கூட்டாண்மையும் ஆசிய நூற்றாண்டை வேகப்படுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா உச்சநிலை பெற்ற காலத்தில் புதிய உலக ஒழுங்குக்கான உரையாடல், குறிப்பாக ஆசிய நூற்றாண்டுக்கான வாய்ப்புக்கள் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது. சீனா சார்ந்த பொருளாதார வளர்ச்சி பிரதான நிலையை பெற்றிருந்தது. எனினும், இந்திய – சீன முரண்பாடு ஆசிய நூற்றாண்டினை நோக்கிய உலக ஒழுங்கின் மாற்றத்தின் இடைத்தடங்கலாக விவாதங்களும் காணப்பட்டது. பின்னாட்களில் ரஷ;சிய-உக்ரைன் போர் மற்றும் காசா யுத்தத்தில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடுகள் வன்சக்தி ஊடாக அமெரிக்கா தனது மேலான்மையை பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. சமகாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைள் மீள ஆசிய நூற்றாண்டுக்கான விவாதத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கை சீன-இந்திய-ரஷ்சியா ஆகிய நாடுகளிடையே தவிர்க்க இயலாத இணைப்பை உருவாக்கும் தூண்டலாகவும் அமைகின்றது. இக்கட்டுரை அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கையால் தூண்டப்படும் இந்திய-சீன உறவின் ஸ்திரத்தன்மையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1924ஆம் ஆண்டில், ஜேர்மன் இராஜதந்திரி கார்ல் ஹவுஷோபர் ( Karl Haushofer ) 'பசிபிக் யுகம்...

தமிழரசு கட்சியின் தனியாதிக்கத்தை நிராகரிப்போர் கூட்டான போராட்டத்தை ஒருங்கிணைப்பார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அரசியல் கோரிக்கைகளை பலமாக வெளிப்படுத்துவதும், உள்ளூர் - பிராந்திய – சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதும் அவசியமான முன்நிபந்தனையாகும். அரசியல் கோரிக்கைகள் மலினப்படுகையில், தேசிய இன விடுதலைப் போராட்ட முன்நிகழ்வுகளும் நீர்த்துப்போகும் வரலாற்றினையே சர்வதேச அரசியலில் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் துருக்கி குர்துக்களின் ஆயுதப் போராட்டக்குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) ஆயுதக்களைவும் பின்வாங்கலும் எடுத்துக்காட்டாக அமைகின்றது. பி.கே.கே தலைவர் அப்துல்லா ஒகலன் 1999ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், துருக்கி குர்துக்களின் அரசியல் கோரிக்கைகளும் மெல்ல மெல்ல மலினப்பட ஆரம்பித்தது. அதன் உயர்ந்தபட்ச விளைவாக 2025இல் குர்துக்களின் விடுதலைப் போராட்டம் முழுமையாக நீர்த்துப்போகும் நிலைக்கு நகர்ந்துள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் 2009களுக்கு பிற்பட பெருமளவில் வலிமையான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துவதும் தக்கவைப்பதுவும் அரிதாகவே காணப்படுகின்றது. உள்ளகரீதியிலான முரண்பாடுகளால், குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் நலன்சார் சு...