Posts

Showing posts from 2025

ஜ.நா. மனித உரிமைப் பேரவையை ஈழத்தமிழர்கள் வினைத்திறனுடன் கையாண்டுள்ளார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச களத்திற்கு நகர்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கான நீதிக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையின் அரங்கிலேயே உயிர்ப்புடன் பேணப்பட்டு வருகின்றது. நீதிப் பொறிமுறை என்பது அதிகார போட்டியினுள் அரசியல் பலத்துடன் இணைக்கப்பட்டதொன்றாகும். அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தாத போது நிதிப் போராட்டத்தின் சாதகமான பக்கங்களை அடைய முடியாது என்பதுவே எதார்த்தமானதாகும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் களத்தில் ஈழத் தமிழர்களின் நீதிக் கோரிக்கையின் ஏற்ற-இறக்கங்கள் மைய அரசுகளின் நலன்களுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஈழத்தமிழர்கள் மைய அரசுகளுடன் எத்தகைய அரசியல் ஊடாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் தேடலுக்குரியதாகும். இக்கட்டுரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காணப்படும் வாய்ப்புக்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டு...

இனப்பிரச்சினை தீர்வுக்கான கூட்டு முயற்சியும் அரசியல் சமூகமயப்படுத்தலின் தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர் அரசியலில் அரசியல் கட்சிகளின் கூட்டு என்பது பிரதான உரையாடலை பெற்று வருகின்றது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டு எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபை அடிப்படையாய் கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்தியிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சி முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க பின்வாங்கியுள்ள நிலையில், கூட்டுச் செயற்பாட்டு முயற்சி நீர்த்து போய் உள்ளது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக கூட்டுச் செயற்பாட்டிற்கு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விட்டிருந்தனர். இக்கூட்டுச் செயற்பாட்டு முயற்சி, வெறுமனவே அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்த உரையாடலாகவே அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியதாகும். எனினும் அரசியல் சமுகமயப்படுத்துவதில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாகாவே பின்னடிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீ...

வரவு-செலவுத்திட்டத்தின் ஜனரஞ்சகம் ஈழத்தமிழர்களின் இருப்பை சிதைக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது முழுமையான வரவு-செலவுத்திட்ட அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நிதியமைச்சராகிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில், 'நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்து பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி செலுத்துவதால் இந்த வரவு - செலவு திட்டம் சிறப்புமிக்கதாக மாறும்' என்றவாறு தெரிவித்தார். பொதுவான பார்வையில் சுகாதாரம், கல்வி என்ற வரிசையில் வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை மக்களை கவரக் கூடியதாகவே அமைகின்றது. மாறாக ஆட்சி மாற்றத்தின் தாக்கம் வரவு-செலவுத் திட்டத்தில் முழுமையான பிரதிபலிப்பை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனம் பொருளாதார நிபுணர்களிடம் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நியமங்களின் வரைபுக்குள்ளேயே வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்கள் காணப்படுவதனை சுட்டிக்காட்டியுள்ளனர். வரவு-செலவுத்திட்டம் மீதான ஒருங்கிணைந்த பார்வை தேசிய மக்கள்...

தமிழ் மக்களின் போராட்டங்களில் எதிரிகள் யார்? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது. நீர்க்குமிழி போன்று விரைவாக பெருத்து எவ்வித நிலையாமை மற்றும் தொடர்ச்சி தன்மையற்று சிதறடிக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நாளாந்த பிரச்சினைகளுக்குள் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் இவ்வாறே நகர்த்தப்பட்டு வந்துள்ளது. கேப்பாபிலவு போன்ற காணி மீட்பு போராட்டங்கள் பகுதியளவில் தீர்வை பெற்ற போதிலும், எப்போராட்டங்களும் முழுமையான தீர்வற்று சிதறடிக்கப்பட்டு கிடப்பில் போடுவதாகவும் அல்லது திசை மாற்றப்படுவதுமாகவே அமைந்துள்ளது. சமகாலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி வடக்கில் தையிட்டி கிராமத்தில் இராணுவம் எதேச்சதிகாரமாக மக்கள் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரிய போராட்டம் விரிவாக்கம் பெற்றுள்ளது. எனினும் சமதளத்தில் நல்லிணக்கம் மற்றும் பேரினவாத அச்சுறுத்தல்களை முன்னிறுத்திய எதிரான விமர்சனங்களையும்...

டெல்லியில் ஈழத்தமிழர் ஆய்வு மாநாடு ஈழத்தமிழர்களின் நியாயப்பாட்டை விரிவுபடுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம், ஓர் அரசின் புவியியல் எல்லைக்குள் மாத்திரம் சுருக்கி விடக்கூடியதில்லை. பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நலன்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தில் இராஜீக தொடர்பு தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெறுகின்றது. அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கீசிங்கர், 'இராஜதந்திரம் என்பது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் கலை' என்கின்றார். இத்தகைய கலை ஈழத்தமிழரசியலில் வெகு குறைவாகவே அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழரசியலின் இராஜதந்திர செயற்பாடுகளும், தனியன்களாக செயற்பட்டுள்ள போதிலும் நிறுவனமயமாக்கப்பட்டதாவோ அல்லது தொடர்ச்சித் தன்மையுடையதாகவோ அமைந்திருக்கவில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அறிவியல் தளம் போதிய பங்களிப்பை வழங்க தவறியுள்ளது. இக்கட்டுரை அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தை இனங்காண்பதாவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி-27 (2025)அன்று இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தில், 'துன்பம் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய ம...

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

Image
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் பூதாகரமான பேசுபொருளாகியுள்ளது. வேண்டாத செயல் அல்லது இந்தியாவின் மாறாத பெரியண்ணா இயல்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் திருவள்ளுவரை வேண்டாதவராக விம்பப்படுத்தும் வாதங்கள் பொதுவெளியில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் தமிழுக்கு பெருமையாக உள்ள திருவள்ளுவரை எல்லைகடந்து கொண்டாடுவதில் ஈழத்தவர்கள் பின்நின்றதில்லை என்பதற்கான சாட்சியமும் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அரங்கேற உள்ளது. யாழ்ப்பாணத்தின் நீண்டகாலமாக சைவத்திற்கும் தமிழிற்கும் சமுகப்பணியாற்றி வரும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையிலான சிவபூமி அமைப்பின் மற்றொரு முயற்சியாக, மாவிட்டபுரத்தில் பெப்ரவரி-02 அன்று திருக்குறளுக்கான வளாகம் திறக்கப்படுகின்றது. இது ஈழத்தில் சிவபூமியின் கடந்தகால பணிகளின் தொடர்ச்சியாக ஒரு மைல்கல்லாகவே அமைகின்றது. இக்கட்டுரையும் திருக்குறள் வளாக உருவாக்கத்தை பற்றிய தொகுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையிலான சிவபூமி அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர் வாழும் திசையெல்லாம் சைவத்தினதும் தமிழினதும் இருப்பை பாதுகாப்பதற்கான ...

அயலக தமிழர்தின அரசியல் வாய்ப்புக்களும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத் தமிழர் அரசியலில் வெளியுறவு கொள்கை என்பது பெருமளவு பூச்சியமாகவே அமைகின்றது. உள்ளக அரசியலிலேலேயே தெளிவான அணுகுமுறையை கொண்டிராத போது, வெளியுறவை பற்றி சிந்திப்பது பயனற்றதே ஆகும். எனிலும் உள்ளக அரசியலைப் போல வெளியுறவை கையாள்வது, எதிர்காலத்தையும் நெருக்கடிக்கு தள்ளக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றது. ‘உதவி செய்யாவிடினும் பரவாயில்லை; உபத்திரம் செய்யக்கூடாதெனும்’ உரையாடல் பொதுவில் காணப்படுகின்றது. அது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமானதாகும். ஈழத்தமிழர் அரசியல்வாதிகளின் ஆளுமைக்குள் தமிழ்த்தேசிய அரசியலினை முன்னேற்றகரமாக நகர்த்த முடியாவிடினும், அதனை அழிக்காது இருப்பதே சமகாலத்தின் தேவைப்பாடாகும். கடந்தவாரம் இப்பகுதியில் இந்தியாவின் தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவை மையப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட போலி விளம்பரம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இன்னொரு தளத்தில் போலி விளம்பரம் தேர்தல் ஆசனத்தை மையப்படுத்திய போட்டியாக அமையலாம். தேர்தலை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இவ்இயல்பு எதார்த்தமானதாகும். மறுதளத்தில் அயலக தமிழர் தின விழாவில் போட்டி ப...

போலியான விளம்பர அரசியலில் மூழ்கியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் என்பது நலன்சார் விளையாட்டாகவே அமைகின்றது. இவ்நலன் தேசியத்தின் அடிப்படையிலோ அல்லது தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அடிப்படையிலோ கட்டமைக்கப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலன்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றது. விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் விடுதலைக்கான இயல்பை கொண்டிருக்க தவறியுள்ளது என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. அதனடிப்படையிலேயே 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட வேட்பாளர்களின் தோல்வியினூடாக உறுதி செய்யப்பட்டது. எனினும் அரசியல்வாதிகள் தோல்வி சார்ந்த தெளிவான படிப்பினையை உள்வாங்க தவறியுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய முலாமிற்குள் போலியான விம்பங்களையே கட்டமைக்கின்றார்கள். கடந்தவாரம் தமிழக அரசின் ஏற்பாட்டிலான அயலக தமிழர் தின விழாவில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நடத்தையும் போலி விம்பங்களின் தொடர்ச்சியையே தக்கவைத்துள்ளது. இக்கட்டுரை தமிழக அரசின் அயலக தமிழர் தின நிகழ்வில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் திணித்துள்ள போலியான விளம்பரங்களை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தமி...