Posts

Showing posts from September, 2020

ஜெயவர்த்தனாவின் நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் அரங்கேற்றும் இருபதாவது திருத்தம் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் 20வது சீர்திருத்தம் என்பது நீண்டதொரு விவாதத்தை பல்கோணத்தில் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்பால் ஆளுந்தரப்பினுள்ளேயே முரண்நகையான கருத்துக்களே 20வது சீர்திருத்தம் தொடர்பில் பொதுவெளியில் அலசப்படுகிறது. 20வது சீர்திருத்தத்தை எதிர்ப்போர் அதன் வடிவமாக, அது இலங்கையில் சர்வதிகாரத்தை கட்டமைக்கப்போவதாகவும், ஜனநாயகத்தின் புதைகுழியாகவும் சித்தரிக்கிறார்கள். இந்நிலையில்  இக்கட்டுரையானது 20வது சீர்திருத்தத்தின் வடிவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 20வது சீர்திருத்தம் பிரதானமாக கடந்த மைத்திரி – ரணில் தேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 19வது சீர்திருத்தத்தை நீக்குவதையே ஆழமான கருத்தியலாக கொண்டுள்ளது. இந்நிலையில் 19வது சீர்திருத்தத்திற்கு பிரச்சாரமாக வழங்கப்பட்ட ஜனநாயக மீட்பு என்ற வடிவமானது, 19வது சீர்திருத்தத்தை நீக்க 20வது சீர்திருத்தம் வடிவமைப்பதால் 20வது சீர்திருத்திற்கான வடிவத்தை பிரச்சாரம் செய்வதில் ஆழமாக செல்வாக்கு செலுத்துகிறது. அதனடிப்படையில் முதலில் 19வது சீர்திருத்தத்தை ஆதரித்தோரால் 19வது சீர்திருத்தம் ஜனநாயக மீட்பு என வடிவம் கொடுத்து செய்யப்பட்ட ...

ஐ.நா.வில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐ.நா. மன்றிலும் கொரோனாவிற்கு பின்னர் அமைய உள்ள புதிய உலக ஒழுங்கின் மாதிரியே உலக தலைவர்களின் பேச்சுக்களில் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முன்னணியில் வந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவுகையை மையப்படுத்தி சீனாவை குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் இக்கட்டுரையானது, 2020க்கான ஐ.நா. மன்றின் பொதுக்கூட்டத்தில் உலக தலைவர்களால் உரையாடப்பட்ட விடயங்களை தொகுப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு உலக தலைவர்களின் பொதுக்கூட்டமானது, பேரழிவு தரும் தொற்றுநோயால் தடுத்து உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட சூழலில், 2020 ஆகஸ்ட்-22 அன்று முன்னோடியில்லாத வகையில் உயர்மட்டக் கூட்டத்திற்கு மின்னணு முறையில் நியூயார்க்கில் கூட்டப்பட்டது. இது உலகின் மோசமான ஜூம் சந்திப்பு எனக் கூறப்படுகிறது. இது "பொது விவாதம்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், ஒரு ஜூம் கூட்டத்தைப் போலன்றி, இதில் எந்த விவாதமும் இருக்கவில்லை. இந்த ஆண்டு நியூயார்க்கில் ...

இஸ்ரேலுடனான மேற்காசிய அமைதி திட்டத்தில் அடுத்தது ஓமானா? -ஐ.வி.மகாசேனன்-

Image
அமெரிக்காவில் கோவிட்-19 பற்றி காரசாரமான உரையாடல் இடம்பெற்றுகொண்டிருக்கும் சமகால பகுதியில், இஸ்ரேலுடன் அரபு நாடுகளை இணைப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் மும்மரமாக உள்ளார். 2020ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் ஆகஸ்ட்-13அன்று இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சமாதான திட்டத்திற்கும், செப்டெம்பர்-15 அன்று இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் சமாதான ஒப்பந்தத்திற்கும் தரகு வேலையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் இஸ்ரேலுடன் அதிகரிக்கும் அரபு நாடுகளின் உறவை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவினுள் 1948ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளால் உருவாக்கப்ட்டு அங்கீகரிக்கப்பட்ட நாடே இஸ்ரேல் எனப்படும் யூத தேசமாகும். மேற்காசிய அரபு உலகில் ஏற்கனவே காணப்பட்ட பாலஸ்தீனத்தை கூறாக்கி இஸ்ரேலின் உருவாக்கம் அமைந்ததால், இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அதன் பிராந்தியமான அரபு நாடுகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை. குறிப்பாக 1948 மே-14அன்று நள்ளிரவில் பாலஸ்தீனத்திற்கான பிரிட்டிஷ் ஆணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

மொன்ரீநீக்ரோ அரசியல் மேற்கிலிருந்து கிழக்கிற்கு செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலின் சமீபத்திய நிகழ்வுகள் சில மீள பனிப்போர்க்காலத்தை ஒத்த பதிவுகளை நினைவுபடுத்தி செல்கிறது. அதாவது ரஷ்சியா சார்பு, மேற்குலகு சார்பு என்ற நிலைப்பாட்டில் ரஷ்சியா, ஐரோப்பிய எல்லையோர நாடுகள் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு குழப்பகரமான அரசியல் சூழலில் காணப்படுகிறது.   ஆகஸ்ட்-9 பெலாரஸ் தேர்தல் முடிவிற்கு பின்னரான மக்கள் போராட்டம் வல்லரசுகளின் மோதுகை பற்றி ஓர் ஆழமான செய்தி சொல்வது போன்றே,  ஆகஸ்ட்-31 மொன்ரீநீக்ரோ தேர்தல் முடிவுகளும் வல்லரசுகளின் மோதுகையில் மக்களின் விருப்பை ஆழமான செய்தியாக வெளிப்படுத்தியுள்ளது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் மொன்ரீநீக்ரோ தேர்தல் முடிவுகளையும் அதன் அரசியல் செல்நெறியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பலரும்  முன்னறியாத நாடாக மொன்ரீநீக்ரோ காணப்படுமாயின், அதுவும் ஈழத்தமிழர் தங்கள் சுயநிர்ணயஉரிமை போராட்டத்தில் இதுவரை வெற்றி பெறாமைக்கான காரணமாகவும் இருக்கலாம். சுயநிர்ணயஉரிமைக்காக போராடி கடந்த 2006ஆம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சுதந்திரம் பெற்ற அரசாக மொன்ரீநீக்ரோ காணப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவ...

போர் புரியாமல் இந்தியாவை தோற்கடிக்க முயலுகிறதா சீனா! -ஐ.வி.மகாசேனன்-

Image
 2020 ஆரம்பம் முதல் இயற்கை அழிவு, பிராந்திய நாடுகளிடையேயான மோதல், தொற்று நோய் எனப்பலதரப்பட்ட காரணங்களை மையப்படுத்தி தொடர்ச்சியாக உலகம் கொதிநிலையிலேயே காணப்படுகிறது. அந்தவகையில் நீண்டகால பகைமையுடைய ஆசியப்பிராந்திய நாடுகளான இந்தியா - சீனா நாடுகளுக்கிடையிலான மோதலும் 2020ஆம் ஆண்டு சர்வதேச கொதிநிலையின் ஓர் அங்கமாக மே மாதப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அணுவாயுத பலங்களையுடைய இரு நாட்டு இராணுவ வீரர்களும் கற்களை எறிந்தே மோதலை ஆரம்பித்திருந்தமை மோதலின் போக்கை சூசகமாக சொல்லும் விடயமாகும். மூன்று மாதங்களை தாண்டியும் இந்தியா - சீனா எல்லை மோதல், சீரான பதிலற்ற உரசல்களாகவே நீடித்து வருகிறது. அதனை மையப்படுத்தியே சர்வதேச அரசியலில் இந்தியா - சீனா எல்லை முரண்பாட்டின் போக்கை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை முரண்பாடு இன்று உரசல்களாக நீடித்தாலும், இந்தியா – சீனா எல்லை முரண்பாட்டில் கொடிய போரியல் பதிவுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையில் பெரும் போர் இடம்பெற்றது. 1988ஆம் ஆண்டில் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சீனத்தலைவர...

பாராளுமன்றமும் தமிழ்தலைமைகளின் வியூகமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் சமீபத்தில் பெரும் விவாதப்பொருட்களை உருவாக்கும் களமாக புதிய பாராளுமன்றம் அமைகிறது. அவ்வாறானதொரு அண்மைய விவாதப்பொருளே பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணமும் அதுசார்ந்து எதிர்க்கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளின் எதிர்ப்பும் அமைகின்றது. அதனை தழுவியே குறித்த கட்டுரை புதிய பாராளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதாயின் தமிழ் அரசியல் தலைமைகளின் பாராளுமன்ற நகர்வு எவ்வாறாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீளெழுச்சி பெற்ற ராஜபக்ஷாக்கள் அரசாங்கம் மீது தமிழர் தரப்பால் போர்க்குற்றவாளிகள்/ இனப்படுகொலையாளர்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. அதனை சுட்டிக்காட்டியே 9வது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் தரப்புகளால் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தே...

தேருநர் இடாப்பு சீரான பதிவு தமிழர்ஆசனத்தை பலப்படுத்தும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
 தமிழர்களின்  வாக்குச்சிதறலால் பிரதிநிதித்துவத்தில் பெரும் சரிவை சந்திக்கும் அவலமான சூழலியே தமிழர்கள் இன்று உள்ளனர். இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளும் அவ்உண்மையையே வெளிப்படுத்தி உள்ளது. வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்களில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் ஊசலாடியுள்ளது. அம்பாறை மாவட்டம் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை முழுமையாய் இழந்துள்ளது. வன்னித்தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டமும் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. இந்நிலையில் வடக்கு, கிழக்கின் பாராளுமன்ற ஆசனங்களும் குறைக்கப்படுமாயின் தமிழ்த்தேசியத்துக்கான பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாவதுடன் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்குரலும் முற்றாக முடக்கப்படும் சூழலே உருவாகும். இந்நிலையில் இக்கட்டுரை வடக்கு, கிழக்கு பாராளுமன்ற ஆசனத்தை உறுதிசெய்ய தமிழ் சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 96 – 98ஆம் உறுப்புரைகளில் தேர்தல் மாவட்ட தெரிவு மற்றும் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை ஒதுக்கீடு தொடர்பில் விபரமாக கூறப்பட்டுள்ளது. இலங்கை ...

புதிய பாராளுமன்றத்தில் கூட்டாக ஓங்கி ஒலிக்குமா தமிழரின் நியாயமான கோரிக்கைகள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
புதிய பாராளுமன்ற ஆரம்ப நாட்களில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற விவாத உரையாடல்கள் தமிழ் மக்கள் ஆழமாக தம் அரசியல் தொடர்பாக சிந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் சுயரூபங்களையும், தமிழரசியல் செல்ல வேண்டிய பாதை தொடர்பாகவும் ஆராய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. அதனை மையப்படுத்தியே குறித்த கட்டுரை தமிழர்களை வாக்குகளுக்காக ஏமாற்றும் தென்னிலங்கை கட்சிகளின் தேர்தலின் பின்னரான துரோகங்களை விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலப்பகுதிகளில் தமிழர் உரிமை சார்ந்த  அரசியலை வீரவசனங்களுடன் பிரச்சார மேடைகளில்  அள்ளி வீசி தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளும் தரப்புக்கு நிபந்தனையற்ற முண்டு கொடுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு  மாற்றாக தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும், செல்வராசா கஜேந்திரன் அவர்களையும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளனர். அத்துடன் அபிவிருத்தி அரசியலுக்காக அங்கயன் ...

வல்லரசுக்களின் பிடிக்குள் அகப்பட்டுள்ள பெலாரஸ் அரசியல் -ஐ.வி.மகாசேனன்-

Image
வல்லரசுகளின் போட்டிக்குள் பூகோள அரசியலில் பிராந்தியங்களின் மூலோபாய அரசுகள் நசுக்கப்படுவதே சர்வதேச அரசியல் களநிலவரமாகும். அவ்வாறானதொரு சூழலிலேயே பெலாரஸின்அரசாங்கத்துக்கு எதிரான ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டம் சூடுபிடித்துள்ளது. அவ்வகையில் இக்கட்டுரையும் பெலாரஸ் போராட்டத்தின் அரசியல் பின்புலத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் அரசியில் பின்புலத்தை தேட முயலுவமாயின், முதலிலே பெலரஸ் அரசின் அமைவிட முக்கியத்துவத்தை அறிதல் அவசியமாகும். பெலாரஸ், அதன் முந்தைய எஜமானும் தற்போதைய நட்பு நாடாகிய ரஷ்சியாவுக்கு கிழக்குப் பகுதியிலும்,  தெற்கில் உக்ரைனையும், வடக்கு மற்றும் மேற்கில் லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து என்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளையும் கொண்டுள்ளது. ரஷ்சியாவுடன் தோழமை கொண்டிருக்கும் ஜனாதிபதி லூகஷென்கோவை தலைமையாக கொண்ட கிழக்கு ஐரோப்பிய அரசாக பெலாரஸ் காணப்படுகிறது. 9.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, உக்ரேனைப் போல மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்சியாவுக்கு இடையிலான பகையில் சிக்கிக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் நீண்...