Posts

Showing posts from 2022

தீர்வு முயற்சி மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடல்கள் சமகாலத்தில் உயர்வீச்சில் இடம்பெற்று வருகின்றது. தேசிய இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தொரு நிகழ்வாகும். அடுத்த வருடம்(2023) பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெறப்பட்டிருக்கும் என்ற பிரச்சாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முன்னெடுத்து வருகின்றனர். எனினும், ஜனாதிபதி தீர்வு உள்ளடக்கம் தொடர்பிலான தெளிவான கருத்தினை முன்வைக்கவில்லை. தமிழ் அரசியல் தரப்பினர் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் அதேவேளை தென்னிலங்கையில் ஒரு தரப்பினர் 13ஆம் திருத்தத்திறகான ஆதரவை முன்னிறுத்துவதுடன் இன்னொரு தரப்பு அதிகார பகிர்வு எனும் விடயத்தையே முழுமையாக நிரகரிப்பவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையில் அதிகார பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர்-13அன்று ந...

நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடும் தமிழரசியல் தரப்பின் உத்திகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு, இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் எட்டப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உறுதியளித்தார். அதனை தொடர்ந்து தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளான தீர்வு தொடர்பாகவும், தமிழரசியல் தரப்பு ஜனாதிபதியின் உரையில் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தினர். எனினும் பொது தளத்தில் சமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் மத்திதியஸ்தம் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மீள மீள வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையிலேயே டிசம்பர்-13அன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சர்வகட்சி மாநாடொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளின் நடத்தைகளுக்கு பின்னாலான அரசியல் வெளிப்பாடுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு போர் இல்லாதது எதிர்காலத்தில் மற்றொரு போர் உருவாகாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. இந்தப் பின்னணியில், உண்மையான நல்ல...

தென்னிலங்கையால் முன்வைக்கப்பட்டதே சமஷ்டித்தீர்வு! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல்களே இலங்கை அரசியலில் சமகாலத்தின் மைய உரையாடலாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் கட்சிகளுடன் உரையாட உள்ளதாத அறிவித்துள்ளார். பிரதமர் சர்வ கட்சி கூட்டத்துக்கான அழைப்பை சபாநாயகரூடாக முன்னெடுப்பதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் கட்சிகள் சமஷ்டி பற்றிய உரையாடல்களையும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள் 13, 13பிளஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை பற்றியும் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள முரண்பாட்டு எண்ணங்கள் ஒரு தளத்தில் பயணிக்குமா? தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு 75வது சுதந்திர தினத்துக்குள் சாத்தியப்படுமா? என்பதில் சந்தேகங்களும் ஐயப்பாடுகளுமே மீதமாகிறது. இக்கட்டுரை தமிழர்கள் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கை தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதனை தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முன்னிலைப்படுத்தி உள்ளமையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அவர் மேலும் க...

சீனாவில் எழுச்சிபெறும் வெகுஜன போராட்டமும் சீனா அதிகார வர்க்கமும் -ஐ.வி.மகாசேனன்-

Image
2020களிள் ஆரம்பத்தில் உலகை நெருக்கடிக்குள் தள்ளிய கோவிட்-19இன் தாக்கங்கள் இன்றுவரை உலக நாடுகள் ஏதொவொரு வகையில் எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக பொதுமுடக்கத்தின் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளாயினும் சரி, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாயினும் சரி ஏதொவொரு வகையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கான ஆபத்துடனேயே நகருகின்றது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட சீனாவில் அதுசார் தாக்கங்களின் செய்திகள் பெருமளவில் பொது அரங்கிற்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும், சீனாவின் தேசியவாத செயற்பாடுகளினூடாக, அங்கு 'பூச்சிய கோவிட்'(Zero Covid) கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், அது சீனாவின் இனவாதத்தை வளர்ப்பதுடன் சீனா அதிகம் இரும்புதிரை அரசியலுக்குள் நகர்வதாக மேற்கு ஊடகங்கள் சுட்டிக்காட்டி வந்தன. இவ்வாறான பின்னணியில் நவம்பர் இறுதி வாரங்களில் சீனா முழுவதும், நாட்டின் கடுமையான 'பூச்சிய கோவிட் தொற்றுநோய்' கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகள் வளர்ந்துள்ளன. பல நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த தெருக்களில் இறங்கினர். இக்கட்டுரை சீனாவில் வளர்ந்துவரும...

தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களினை ஒன்றிணைத்து அரசியல் சமூகமாக செயற்பட தயங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடல்கள் முதன்மையான செய்தி தலைப்புக்களாக உள்ள. தென்னிலங்கையில் இனப்பிரச்சினை தீர்வாக பல மாறுபட்ட பொறிமுறைகள் பிரேரிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பிராந்தியங்களின் ஒன்றியம்,முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் மாவட்ட அதிகார சபை, 13ஆம் சீர்திருத்தம் மற்றும் மகிந்த ராஜபக்ஷா தரப்பினரால் 13பிளஸ் தொடர்பான விடயங்கள் முதன்மை பெறுகின்றன. யாவுமே கடந்த 74ஆண்டுகால இலங்கை சுதந்திர வரலாற்றில் இனப்பிரச்சினை தீர்வாக உரையாடி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்தவையாகவே காணப்படுகின்றது. தமிழ் தரப்பு வலியுறுத்தும் சமஷ்டியை தொடர்ச்சியாக நாட்டினை பிளவுபடுத்தும் பொறிமுறையாகவே பேரினவாத தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இம்முரணகையான நிகழ்வுக்குள் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பாக கொண்டுள்ள எண்ணங்களையும், தமிழ் அரசியல் தரப்பின் நகர்வையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது வருடத்திற்கு முன்னர் பிரச்சினையை பேசி தீர்த்துவைக்க அனைத்து தரப்பினரையு...

ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்க இராஜதந்திரம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
நல்லிணக்கம் என்பது உலக நாடுகளில் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள நாடுகளில் போருக்கு பின்னரான காலத்தை திறம்பட கையாண்டு பல்லின சமூக கட்டமைப்பிடையே சுமூக உறவை வளர்ப்பதற்கான பொறிமுறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான தேவைப்பாடு நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருப்பினும், 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு, அதன் வடுக்களை களைவதற்காக இலங்கையில் கொண்டுவரப்பட்ட சர்வதேச உரையாடலாகவே நல்லிணக்க வரவு அமைகிறது. எனினும் இலங்கையில் நல்லிணக்கம் என்பது சர்வதேச உரையாடலுக்கு அமைய இடம்பெறவில்லை. அரசியல் நெருக்கடியை கையாள்வதற்கான இராஜதந்திர பிரச்சாரமாகவே இலங்கை அரசாங்கங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கடந்த ஆட்சிக்காலங்களும் வேறுபட்டதாக அமைந்திருக்கவில்லை. இந்த பின்னணியிலேயே தற்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முதன்மைப்படுத்தும் நல்லிணக்கம் சார்ந்த உரையாடல்களும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக சந்தேகங்களை உருவாக்குகிறது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க உரையாடலின் அரசியல் பின்புலத்தை தேடுவதாவே உருவாக்க...

ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்டம் அரசியல் பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தை உருவாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக இலங்கை அரசாங்கங்கங்கள் பொருளாதார முதலீடுகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டையே அதிகமாக முதன்மைப்படுத்தி வந்துள்ளதுடன், அதிகம் சொல்லும் செயலும் வேறுபட்டிருந்தன. இது பொருளாதார நிபுணர்களாலும் அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்பின்னணியில் பொருளாதார நெருக்கடியை நீக்குவதாக கூறி அரசாங்கத்தை பொறுப்பெடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்காவின் 2023க்கான வரவு-செலவுத்திட்டம் அதிக எதிர்பார்க்கையை உருவாக்கியது. இப்பின்னணியிலேயே நவம்பர்-14அன்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கா தனது முழு ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்ட உரையின் முகப்பில் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் சீர்திருத்தமே பிரதான இலக்கு என ரணில் விக்கிரமசிங்கா முன்மொழிந்துள்ளார். எனினும், உள்ளடக்கங்கள் ஒப்பீட்டளவில் பெரிய புரட்சிகரமான சீர்திருத்தங்களை உள்ளடக்கி இருக்கவில்லை என்பதே பொருளியல் நிபுணர்களின் கருத்தாடலாக காணப்படுகின்றது. இக்...

ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிங்கள கட்சிகள் ஓரணியில் திரளுமா? -சேனன்-

Image
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான உரையாடல்கள், தென்னிலங்கை அரசியலில் சமகாலத்தில் முதன்மையான பிரச்சாரமாக காணப்படுகின்றது. எனினும் இதன் நம்பகத்தன்மை தொடர்பில் பல சந்தேகங்களை கடந்த கால அனுபவங்கள் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அரசுகளின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான பிரச்சாரமாகவே தென்னிலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த பிரச்சாரங்கள் அவதானிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பிலான பலவீனங்களை கூறி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை கிடப்பில் போடும் நகர்வே தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தென்னிலங்கை பிரச்சாரத்தின் இறுதி படிமுறையாக தமிழ் அரசியல் அவதானிகளின் கணிப்பு உள்ளது. எனினும் அண்மையில் தென்னிலங்கையில், ஈழத்தமிழரசியல் தரப்பில் உள்ள ஒற்றுமையின்மையை முதன்மைப்படுத்தி இடம்பெற்றுள்ள உரையாடல்கள் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினை தீர்வுக...

போதைக்கலாசாரத்திற்கு எதிரான போரிற்கு ஈழத்தமிழர்கள் தயாராவது வேண்டும் -ஐ.வி.மகாசேனன்-

Image
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பும் அதுசார்ந்த தாக்கங்களும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையையே போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதாகவே யாழ்ப்பாணத்து நாளிதழ்களின் செய்தி தலைப்புக்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாண பண்பாடு பாரம்பரியமாக கந்தபுராண கலாசார மரபுடையதென்ற உரையாடல் காலம் காலமாக தமிழ் மக்களிடையே ஆழமாக காணப்படுகின்றது. எனினும் போருக்கு பிந்தைய சூழலில் 2013ஆம் ஆண்டை அண்மித்த காலப்பகுதியில் வாள்வெட்டு கலாசாரம் தொடர்பான உரையாடல் யாழில் முதன்மை பெற்றது. தற்போது அதன் தன்மை குறைவடையவில்லையாயினும், அது பற்றிய உரையாடல் தளர்வுற்று, இளையோரிடையே வீரியத்தை பெற்றுள்ள போதைப்பாவனை அதிகமாக முதன்மை செய்திகளாக யாழ்ப்பாணத்து நாளிதழ்களில் இடம்பிடித்துள்ளது. எனினும் இதனைக்கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான செயற்பாடுகள் அத்தகையை முதன்மையை பெறத்தவறியுள்ளது. போதைப்பொருள் பிரயோகம் இளைஞர்களிடையே வீரியம் பெற்றுள்ளமை தொடர்பிலான அரசியல் தாக்கங்கள் பற்றிய சந்தேகங்கள் தமிழ் மக்களிடையே அதிகமாக காணப்படும் சமதளத்தில்,...

தமிழர்களை சித்திரவதை செய்த 'புனர்வாழ்வு' சட்டமூலம் அரகலய போராட்டக்காரரை பாதுகாக்க முயலுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை பேரினவாத எதேச்சதிகார சக்திகள் தமது நலன்களை ஈடேற்றிக்கொள்வதற்கு காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்களூடாக தமக்கு எதிரான செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு இயன்றளவு அரச இயந்திரத்தை தொடர்ச்சியாகவே பயன்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக சுதந்திர இலங்கையின் 74ஆண்டுகால அரசியலில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தேசவிரோதமாக மற்றும் பயங்கரவாதமாக காட்சிப்படுத்தி ஒடுக்குவதற்கும், தமிழ் மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் அரச இயந்திரத்தை வெகுவாக பயன்படுத்தி வந்திருந்தது. 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாக முஸ்லீம்களும் மாறிய நிலையில் முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறைகளை நியாயயப்படுத்தவும் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தை பயன்படுத்தி வந்தது. இலங்கையின் தமிழ், முஸ்லீம் தேசிய இனங்கள் அரச பயங்கரவாத செயல்களை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த போதிலும் சிங்கள தேசிய இனம் இலங்கை அரசை தமது அரணாக அதிகம் பாதுகாத்து வந்தது. எனினும் 2022ஆம் ஆண்டு அரகல்யாவுக்கு பின்னர் அரச பயங்கரவாதம் சிங்கள தேசிய இனத்தின் மீதும் தனது...