Posts

Showing posts from March, 2022

இந்தியா-சீனாவுடனான உறவில் இலங்கையின் மூலோபாய கொள்கை சாத்தியமானதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் உதவிக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது. இச்சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் இந்தியா மற்றும் சீனா மும்மரமாக செயற்பட்டு வருகின்றன. இதில் இந்தியா தனது பாரம்பரிய உறவை நிலைப்படுத்தும் வகையில் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையிலேயே உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு வழிவகுத்த மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் மீட்புப் பொதியை இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது. மாறாக பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் அதிகம் நட்பு பாராட்டும் சீன அரசாங்கமும் இலங்கையில் தனது இருப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இலங்கைக்கான உதவியை அதிகப்படுத்தி வருகின்றனர். 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவியதில் இருந்து, சீனா இலங்கைக்கு 2.8 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இரண்டு ஆசிய ஆதிக்க போட்டியாளர்களும் இந்து சமுத்திர செல்வாக்கிற்கான போட்டியில், இலங்கையை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். இக்கட்டரை இலங...

ரஷ்சிய உக்ரைன் போர் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தை வலுவிழக்க செய்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இருபத்தொராம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் தந்திரோபாயமாக இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைத்த 'இந்தோ-பசுபிக் தந்திரோபாயம்' முதன்மை பெறுகிறது. இத்தந்திரோபாய நெறியில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா முகவராக இந்தியா செயற்பட்டு வந்தது. எனினும் ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு அமெரிக்காவின் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபடுவதாக காணப்படுகிறது. இதனை அவதானித்துள்ள சர்வதேச அரசறிவியலாளர்கள் அமெரிக்காவிண் இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள், மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் மிகப்பெரிய இராணுவங்களை கொண்டுள்ளதுடன், உலகின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மையமாக வெளிப்பட்டுள்ளது. இந்தப் பரந்த பிராந்தியமானது, 21ஆம் நூற்றாண்டின் உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியா...

ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேல் தனது புவிசார் அரசியல் நலனை தேடுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ரஷ்சியா-உக்ரைன் போர்ச்செய்திகளில் அண்மையில் இஸ்ரேலின் பெயர் அதிகமாக உரையாடப்படுகிறது. மார்ச்-06(2022)அன்று இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ரஷ்சியாவிற்கு விஜயம் செய்து ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து உரையாடினார். தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி  வொலோடிமிர் ஜெலன்ஸ்கி புடினுடனான சமாதானத்திற்கான உரையாடலை இஸ்ரேலில் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். எனவே இஸ்ரேல் ரஷ்சியா-உக்ரைன் போர்க்களத்தில் மத்தியஸ்த நிலையில் நுழைந்துள்ளது. வரலாற்றில் இஸ்ரேலின் நடத்தைகளை இலகுவில் கடந்து விடமுடியாது. இவ்வரலாற்று அனுபவத்தில் ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேலின் நாட்டம் சர்வதேச அரசியலில் அதிக தேடலுக்கு உட்படுத்தப்படுகிறது. இக்கட்டுரை ரஷ்சிய-உக்ரைன் போரில் இஸ்ரேலின் மத்தியஸ்த நிலைப்பாட்டுக்கான காரணங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கில் அமெரிக்கா தலைமையிலான மேற்கின் முகமாக செயற்பட்டு வருகின்ற இஸ்ரேல், ரஷ்சியா-ஊக்ரைன் போர்க்ககளத்தில் மேற்கின் நிலைப்பாடுகளிலிருந்து விலகி வேறுபட்ட பாதையில் பயணித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்சியா ஆக்கிரமிப்பிற்கு பின்னர் மேற்கு நாடுகள் முழுமையாக உக்ரை...

அமெரிக்காவின் அதிகாரத்தையும் ரஷ்சியாவின் அரசியலையும் வெளிப்படுத்தும் போர்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ரஷ்சியா-உக்ரைன் எனும் இரு தேசங்களுக்கிடையிலான புவிசார் அரசியல் மோதலே பெப்ரவரி இறுதி வாரங்களிலிருந்து முழு உலகையும் ஆக்கிரமித்துள்ளது. மேற்கு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ரஷ்சியா-உக்ரைன் போரினூடாக சர்வதேச வெளியில் ரஷ்சியாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை வீரியமாக முன்னெடுத்து வருகின்றார்கள். இதனோர் வடிவமாகவே ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினை நாஷிச தலைவர் கிட்லருடன் ஒப்பீடு செய்து அராஜகத்தின் முழுவடிவமாக மேற்கு ஊடகங்கள் பிரச்சாரப்படுத்துவதுடன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை மக்கள் நாயகனாக காட்சிப்படுத்துகிறார்கள். எனினும் மேற்கின் பிரச்சாரங்களுடன் நிகழ்நிலை விடயங்கள் முரண்படுவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புடினை அராஜகவாதியாக அடையாளப்படுத்தும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் உக்ரைன் களத்தில் அமையப்பெறவில்லை என்ற வாதமும் காணப்படுகின்றது. எனினும் ஊடகப்பரப்பில் அதுபற்றிய உரையாடல்கள் தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்சியா பற்றிய எதிரான கருத்துக்களை அதிகம் முதன்மைப்படுத்தும் அமெரிக்க களத்திலேலேயே ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்காவின் தூண்டுதல்களே காரணம் என்ற கருத்தும் ஒருசில யதார்த்தவ...

இலங்கையுடனான உறவை பலப்படுத்த முனையும் இந்தியா! -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா பேரனர்த்தம் உலகில் பொருளாதாரரீதியான அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில், ரஷ்சியா-உக்ரைன் போர் அதன் சுமைகளை அதிகரித்துள்ளது. பொருளாதார சுமை உலகிற்கு பொதுவானதாயினும், இலங்கையை பொறுத்தவரை 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அவர்களது பொருளாதார கொள்கைகளும் இணைந்து இலங்கையை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பொருட்களின் விலையேற்றம் என்பதற்கு அப்பால் பல அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. நாட்டின் திறைசேரியில் டொலர் இல்லாமையால் பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இலங்கை பல நாடுகளில் கடன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. எனினும் வரலாற்றுரீதியாகவே நெருக்கடி காலங்களில்  இலங்கைக்கான பொருளாதாரரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவதில் பிராந்திய பேரரசான இந்தியாவின் வகிபாகம் தனித்துவமானதாக காணப்படுகிறது. இக்கட்டுரை இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலப்பகுதிகளில் இந்தியாவினால்  இலங்கை அரசாங்கங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒத்துழைப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ந...

ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவாக ஆசியா நூற்றாண்டு எழுச்சி பெறுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உக்ரைன் மீதான ரஷ்சியாவின் ஆக்கிரமிப்பு போர் உலக அரசியலில் பல புதிய திருப்பங்களை உருவாக்கி வருகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டின் பிளவு தொடர்பான உரையாடல்கள் கடந்த ஆண்டுகளில் முதன்மை பெற்ற போதிலும் ரஷ்சியா-உக்ரைன் போரில் ஐரோப்பா சார்ந்த அச்சுறுத்தல் அமெரிக்க தலைமையிலான மேற்கு கூட்டை மீளவும் பலப்படுத்தி உள்ளதை சர்வதேச அரங்கில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அவ்வாறே ஆசிய நாடுகள் மேற்கிலிருந்து வேறுபட்டு சில முடிவுகளை சுயாதீனமாக மேற்கொள்கின்றமைiயும் வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வகையிலான ஆசியாவின் தனித்துவமான நகர்வுகள் சர்வதேச அரசியலில் மாறிவரும் ஆசியா மீதான அரசியலை உறுதி செய்யும் களமாக ரஷ்சியா-உக்ரைன் போர் அமைகின்றதா என்ற தேடவையும் சர்வதேசப்பரப்பில் உருவாக்கி உள்ளது. இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போரில் ஆசிய நாடுகளின் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பதற்கான விளாடிமிர் புடினின் பெப்ரவரி-24 அறிவிப்பானது, எல்லைகளின் புனிதத்தன்மை பற்றிய அனுமானங்களை உயர்த்தி உலகை ஒரு புதிய சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யாவின் படையெடுப்ப...

தென்னிலங்கை எதிர்த்தரப்புக்களின் ஜெனிவா பயணம்; போர்க்குற்ற நியாயாதிக்கத்தை வலுவிழக்க செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலானது முழுமையாக சர்வதேச அரசியலை மையப்படுத்தியது என்பது தமிழரசியல் தரப்பு வரித்து கொண்ட மூலோபாயமாக காணப்படுகின்றது. எனினும் குறித்த மூலோபாயத்திற்கான வழிவரைபடைத்தை வினைத்திறனாக வடிவமைத்துள்ளார்களா என்பதில் அதிகளவு சந்தேகங்களே காணப்படுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 22-மார்ச்,2012 கொண்டுவரப்பட்ட 19/2 தீர்மானத்தினூடாக ஈழத்தமிழர்களுக்காக அரசியல் களம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து வருடா வருடம் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் ஜெனிவாக்களத்தை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். எனினும் வினைத்திறனான பொறிமுறையை கட்டமைக்க தவறியுள்ளார்கள். எனினும் தமிழ்தேசிய அரசியல் தரப்பினர் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்கள் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான முன்னேற்றங்களை பெற்று வருவதாக புலகாங்கித பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இக்கட்டுரை 49வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஈழத்தமிழரசியல் நிலையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டு...

ரஷ்சிய-உக்ரைன் புவிசார் அரசியல் களம் ஈழத்தமிழரசியலிலும் பிரதிபலிக்குமா? -சேனன்-

Image
சர்வதேச அரசியலின் முதன்மையான உரையாடலாக ரஷ்சியா-உக்ரைன் போர் தாக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய கண்டம் போருக்கான பதட்டங்களுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் மக்கள் அமைதிக்கான போராட்டங்களையும், அரசாங்கங்கள் உக்ரைனுக்கான ஆயுத பொருளாதார உதவிகளூடாக உக்ரைனை பலப்படுத்தி போரிற்கான உத்வேகத்தையும் அளித்து வருகின்றார்கள். இரண்டாம் உலகப்போரின் பின் சர்வதேச பரப்பில் அமைதியை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்டு கட்டமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபையில் ரஷ்சியா போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு 11 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கப்பட்ட போதிலும் ஒற்றை வீட்டோ அதிகாரத்தினூடாக ரஷ்சியா தீர்மானத்தை வலுவிழக்க செய்துள்ளது. சர்வதேச அரசியலில் இத்தகைய ஆதிக்கம் செலுத்தும் ரஷ;சியா-உக்ரைன் போர் ரஷ்சியா மற்றும் உக்ரைனின் புவிசார் அரசியல் விளைவிலானதாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனடிப்படையில் புவிசார் அரசியல் நலன்களுக்கூடாக தங்கள் நலன்களை கட்டமைக்க முயலும் தேசங்கள் குறித்த நிகழ்வின் அரசியல் போக்கினை நுணுக்கமாக தேட வேண்டியுள்ளது...

ரஷ்சியா-உக்ரைன் போர் உலகளாவிய போருக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
பெப்ரவரி-24அன்று ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான போர் அறிவிப்பும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க தலைமையிலான நேட்டோவின் போருக்கான தயார்ப்படுத்தல்களும் முழு உலகையும் மூன்றாம் உலகப்போருக்கான பதட்டத்துக்குள் தள்ளியுள்ளது. மேலும் பெப்ரவரி-27அன்று புடின் தனது ஜெனரல்களுக்கு நாட்டின் அணுசக்தி தடுப்புப் படைகளை உயர் எச்சரிக்கையான காத்திருப்பு போர் கடமையில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்உத்தரவு உலக அழிவுக்கான எதிர்வுகூறலாக உலகம் அச்சத்துள் உறைந்துள்ளது. எனினும் ரஷ்சியா-உக்ரைன் போர் பற்றிய செய்திகள் அதிகம் மேற்கு சார்புடைய ஊடகங்களால் மேற்கின் எண்ணங்களை பிரச்சாரம் செய்யும் தளமாகவே காணப்படுகின்றது. இதனடிப்படையில் ரஷ்சிய-உக்ரைன் போர் தொடர்பிலே மேற்கு ஊடகங்கள் அதிகம் தவறான எண்ணப்பாங்குகளை பொதுவெளியில் உருவாக்குகிறார்களா என்ற சந்தேகமும் சர்வதேச அரசியல் அவதானிகளிடையே ஆராயப்படுகிறது. இக்கட்டுரை  இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போரின் சர்வதேச அரசியல் விளைவினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலின் பின்புலத்தில் பெப்ரவரி இற...