Posts

Showing posts from June, 2020

தமிழர் அரசியல் பரப்பில் மாற்றுத்தலைமை உருவாக்கத்திற்கான தேவைப்பாடு -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் தேர்தல் நிலவரங்கள் கடுமையாக சூடுபிடித்துள்ளது. வடக்கு – கிழக்கிலும் தேர்தல் பிரச்சாரங்கள் கொரோனா அபத்தத்தையும் தாண்டி வேகமாக நடந்து கொண்டுள்ளது. காப்பெற் தெருக்கள், மதில்களிலெல்லாம் வேட்பாளர்கள் புள்ளடிய போராட ஆரம்பித்துவிட்டார்கள். வடக்கு – கிழக்கில் மொததமாக உள்ள 29 ஆசனங்களுக்காக 1768 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர். இதில் முதன்மையான அணிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பனவே காணப்படுகிறது. தமிழ் அரசியலில் மாற்றுத்தலைமையை பற்றிய உரையாடல் இம்முறை கோலோச்சிக்காணப்படுகிறது. 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே அரசியலில் ஏகபிரதிநிகளாய் இருந்து வந்துள்ளனர். எனிலும் இம்முறை குறித்த ஏகபிரதிநிதித்துவம் என்பது சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மாற்று அணிகள் மாற்றுத்தலைமைகளாக உருவாகக்கூடிய வல்லமைகளை பெற்று வருகின்றமை வெளிப்படையாய் தெரிகிறது. எனிலும் தொடர்ச்சியாய் தேர்தல் பிரச்சாரங்களில் மாற்றுத்தலைமை என்பது தமிழர் அரசியலின் அழிவுப்...

சீனா - இந்திய எல்லைப் பிரச்சினை வல்லரசுப் போட்டிக்கான ஒத்திகையா? -ஐ.வி.மகாசேனன்-

Image
21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பது 18ஆம் நூற்றாண்டில் காலத்திலிருந்தே உரையாடப்பட்டு வருகிற போதிலும், கொரோனா அபத்தமும் அது ஏற்படுத்திவரும் மாறுதல்களும் 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாய் சடுதியாக உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இதனைத்தொடர்ந்து சர்வதேச அவதானிப்பு ஆசியாவில் சூழந்துள்ள நிலையில் சீனா - இந்தியா எல்லை முரண்பாடு சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பல வினாக்களையும் ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது.இந்த நேரத்தில் சீனா ஏன் இந்தியாவை விரோதமாக தேர்வு செய்துள்ளது? அமெரிக்காவுடனான சீனாவின் உறவு வீழ்ச்சியடைந்து வருகிறது; சீனா ஏற்கனவே கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக சர்வதேச சமூகத்திடமிருந்து ஒர் எதிர்ப்பை பெற்று வருகிறது; தென் சீனக்கடலில் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது, மற்றும் முன்னோடியில்லாத சமூக அமைதியின்மைக்கு மத்தியில், குறிப்பாக ஹாங்காங்கில். இந்தியாவுடனான தற்போதைய நெருக்கடியைத் தூண்டுவதற்கு அல்லது தீவிரப்படுத்துவதற்குப் பின்னால் சீனாவின் நோக்கம் அல்லது நோக்கங்கள் என்னவாக இருக்கும்? எனப்பல கேள்விகள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலை...

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் கைகோர்க்க வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் கொரோனாவோடு வாழப்பழகிக்கொண்டுள்ளது என்ற தோற்றப்பாட்டையே சமீபத்திய சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அடையாளப்படுத்துகின்றது. உலகில் கொரோனாவின் வீரியம் முழுமையாக கட்டுப்படாத சூழலிலே, அமெரிக்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளும் அதற்கு எதிரான மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டங்களும் சர்வதேச அரசியலின் சமீபத்திய பேசுபொருளாக காணப்படுகின்றது. கொரோனா பரவுகை அதனை கட்டுப்படுத்துதல் என்ற சர்வதேச நிலைமை அமெரிக்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதாகவே சர்வதேச அரசியல் நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. இது நிறவெறிக்கு எதிராக உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இதிலிருந்து ஈழத்தமிழர்களும் தங்களுக்கான படிப்பினையை பெற வேண்டிய கடமைப்பாட்டிலும், இவ்போராட்டங்கள் ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெறக்கூடிய வழிவகைகளை தேடவேண்டியோராயும் உள்ளனர். அதனடிப்படையிலேயே இக்கட்டுரை நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளில் வியாபித்துள்ள போராட்டத்திலிருந்து ஈழத்தமிழர்கள் பெறவேண்டிய அனுகூலத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாய் கேட்டுக்கொண்டிருந்த ஒரு இனத்தின் குரல் இந்த ஆண்டு 2020 மே மாதம் 25ஆம்...

மீண்டும் பதட்டத்துக்குள்ளாகும் கொரிய தீபகற்பம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரிய தீபகற்பம் என்றுமே சர்வதேச அரசியலில் தனக்கான தனித்துவத்தை பெற்று வந்துள்ளது. பனிப்போர் காலமாயினும், இன்றைய கொரோனா அபத்த காலமாயினும் ஏதோவோர் வடிவில் கொரிய தீபகற்பம் தொடர்பான செய்தி முதனிலை பெறுவது தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. பனிப்போர் காலத்தில் இருதுருவ அரசியல் ஒழுங்கிற்குள் சிக்குண்ட கொரியா போர், முதன்மை பெறலாயிற்று. கொரோனா அபத்த காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய தேசங்களில் முதன்மையாய் கொரிய தேசங்கள் பேசுபொருளாயின. இன்று கொரோனா அபத்தம் உலகளவில் முழுமையாய் கட்டுப்படாது அமெரிக்க மற்றும் தென்னாசிய நாடுகளை உலுக்கி கொண்டிருக்கையில் கொரிய தீபகற்பம் போருக்கான முன்னாய த்தங்களை இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டு;ள்ளது.  அதனடிப்படையிலே கொரிய தீபகற்ப போரியல் வரலாற்றையும், போருக்கான முன்னாயர்த்த காரணங்களை தேடுவதாகவும் குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா அபத்த காலத்திலும் கொரிய தீபகற்பத்துக்குள் சூழ்ந்துள்ள போர் மேகத்துக்கான உடனடி காரணியாக கொரிய தீபகற்பத்தின் பலூன் அரசியல் காணப்படுகிறது. ஹைட்ரஜன் பலூன்கள் உலகின் மிக அதிக பாதுகாப்புடன் இருக்கும் எல்லையில் மிதக்கின்றன. வட ...

பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிரான போராட்டம்; யூததேசியத்தின் இன்னோர் வடிவமே! -ஐ.வி.மகாசேனன்-

Image
மேற்கு ஆசியாவில் போராட்டங்களும் துயரங்களும் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் நிகழ்வாக மாறி விட்டது. மேற்கு ஆசியாவின் பல போராட்டங்களுக்கும் துயரத்துக்கும் பின்ணனி காரணியாக மேற்கு ஆசியாவில் முளைத்த யூத தேசமாகிய இஸ்ரேலின் அரசியல் அபிலாசைகளே காணப்பட்டு வந்துள்ளது. எனிலும் கடந்த சனிக்கிழமை (06.06.2020) சற்று மாறுதலாய் இஸ்ரேல் போராட்ட களமாக வடிவம் பெற்றிருந்தது. கொரோனா அபத்தத்தின் நடுவே கொரோனா சாரந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர் கூடி நெத்தன்யாகு - கான்ட்ஸ் கூட்டணி அரசாங்கம் ஜூலை 01ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இஸ்ரேலுடனா மேற்குகரை இணைப்புக்கு எதிராக போராட்டம் நடாத்தி இருந்தனர். இது மேற்கு ஆசியாவின் அரசியல் மறுபட்டதோர் நிகழ்வாகவே காணப்படுகின்றது. அதனடிப்படையில் இக்கட்டுரை இஸ்ரேலியர்களின் போராட்ட காரணியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 'இணைத்தல்' என்பது காலனித்துவ சகாப்தத்தின் ஆக்கிரமிப்பின் உருவங்களை வரவழைக்கக்கூடிய ஒரு சொல். இணைத்தல் என்ற சொல்லாடலில் இன்றும் நவீன சகாப்தத்தில் ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. இந்தோனேசியா 1975இல் கிழக்கு திமோ...

இயலாமைக்குள் தமிழர் அரசியல்! செயலணிக்குள் முடங்கும் வடக்கு, கிழக்கு. -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா அபத்தம் உலக அளவில் பல நடைமுறைக்கோட்பாடுகளை சிதைத்து வருகின்றது. ஆட்சியாளர்கள் பலரும் நெருக்கடியை பயன்படுத்தி தங்கள் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதனையே முதன்மைப்பபடுத்துகிறார்கள். இலங்கையின் ஆட்சியாளர்களும் உலக ஒழுங்கில் தங்களது அரசியல் நலனை முதன்மைப்படுத்தியே கொரோனா நெருக்கடி காலத்தை நகர்த்தி செல்கின்றார்கள். இந்நிலையிலேயே செயலணிகள் என்ற வடிவில் சிங்கள - பௌத்த - இராணுவ முக்கூட்டு வாதத்தை இலங்கையின் ஆட்சி அணியாக உருவாக்கும் ஓரு நிலை உருவாகி வருகிறது. இலங்கையில் முக்கூட்டுவாதம் தொடர்பிலே இலங்கையினுள் எதிர்க்கட்சிகளாலும் உலகளவில் பொது அமைப்புக்களாலும் பரந்துபட்ட எதிர்ப்பு அறிக்கைகள் காணப்படுகின்ற போதிலும், செயலணி உருவாக்கங்களால் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் ஆக்கபூர்மான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதனடிப்படையிலே செயலணிகள் உருவாக்கம் அதனை மையப்படுத்தி கட்டமைக்க வேண்டிய சனநாயக போராட்டங்கள் தொடர்பிலே தேடுவதாவே குறித்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி சந்திப்பினை மேற்கொள்ள...

சீனா – அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கு ஒடுக்குமுறையின் மாறுபட்ட வடிவங்களே! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்டுள்ளது என்ற தோற்றப்பாட்டையே சமீபத்திய சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அடையாளப்படுத்துகின்றது. உலகில் கொரோனாவின் வீரியம் முழுமையாக கட்டுப்படாத சூழலிலே, கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் சக்கரவர்த்தி மகுடம் தரிக்க போகும் நாடுகள் என்ற போட்டியில் காணப்படும் சீனாவிலும், அமெரிக்காவிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளே சர்வதேச அரசியலின் சமீபத்திய பேசுபொருளாக காணப்படுகின்றது. கொரோனா பரவுகை அதனை கட்டுப்படுத்துதல் என்ற சர்வதேச நிலைமை மாறி சீனா மற்றும் அமெரிக்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோருவதாகவே சர்வதேச அரசியல் நிலைமை மாற்றம் பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை சீனா மற்றும் அமெரிக்காவில் நிகழும் மனித உரிமை மீறல்களையும் இதன் பின்னணியில் எதிர்கால உலக ஒழுங்கின் வடிவத்தையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவை மையப்படுத்தி உரையாடப்படும் மனித உரிமை மீறலானது சீனா - ஹொங்கொங் பிரச்சினையோடு தொடர்புடையதாகும். சீனா - ஹொங்கொங் பிரச்சினை என்பது நீண்டகால முரண்பாட்டு வரலாறாகும். கொரோனா அபத்தம் சிறு ஓய்வைக்கொடுத்த போதிலும் சீனாவில் கொரோனா...

சீனாவுக்கு எதிரான பனிப்போரில் ஆசியாவை நோக்கிய அமெரிக்காவின் விஸ்தரிப்பு -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனாவுக்கு பின்னரான உலக ஒழுங்கு மாற்றம் தவிர்ப்பட முடியாதது என்பது உர்ஜிதமாகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னராக அமெரிக்க மற்றும் ரஷ்சியாவை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டதோர் பனிப்போர் சூழலே கொரோனாவிற்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்க மற்றும் சீனாவை மையப்படுத்தி கட்டமைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் அமெரிக்க மற்றும் சீனாவை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பனிப்போர் சூழல் அமெரிக்க - ரஷ்சியாவிடையே காணப்பட்டதான கருத்தியல் மோதலாக காணப்படாது என்பதுவும், பொருளாதார நலனுக்கிடையிலான போட்டித்தன்மேயே இங்கு பிரதான நிலை பெறும் என்பதுவே ஆய்வாளர்களது கருத்தாக காணப்டுகின்றது. பனிப்போருக்கான கட்டமைப்பை, அமெரிக்க தன் கூட்டு நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக ஆசியாவில் இராணுவ கட்டமைப்பு ரீதியாய் ஓரு கூட்டை உருவாக்குவதற்குரிய முயற்சியிலிருந்து காணலாம்.  அதனடிப்படையில் இக்கட்டுரை சீனாவை தவிர்த்து ஆசியாவில் அமெரிக்க மற்றும் அமெரிக்க நட்பு நாடுகள் கட்டமைக்கும் இராணுவ கட்டமைப்புக்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க இந...