Posts

Showing posts from August, 2020

காணமலாக்கப்பட்டோருக்கான உறவுகளின் நீதிக்கோரிக்கை -ஐ.வி.மகாசேனன்-

Image
 ஆகஸ்ட்-30 ஆம் திகதி உலகளவில் காணாமலாக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இலங்கையில் 1500 நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வீதியில் இறங்கி போராடி வரும் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகஸ்ட்-30 அன்று வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஒழுங்குகளை செய்துள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பனவும் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் ஆகஸ்ட்-30 காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் கீழ் காணமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி வரும் போராட்டங்களின் எதிர்காலம் பற்றி தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் 2010இல் இருந்து தங்கள் உறவுகளுக்கான நீதி கோருவது தொடர்பாகச்செயற்பட்டு வரினும், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்பே நீதி கோரும் செயற்பாடு நீதிக்கான போராட்டமாக பரிணமித்தது. 2017இல் இருந்து வடக்கு, கிழக்கில் சுழற்சி முறையிலான உண்ணா வி...

எதிர்காலத்தை இழக்கும் 13ஆம் திருத்த சட்டம்? -ஐ.வி.மகாசேனன்-

Image
9வது பாராளுமன்ற தேர்தலூடாக 2/3 பலத்துடன் தனிப்பெரும்பான்மை ஆட்சியமைத்துள்ள பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆரம்பம் முதலாகவே தேர்தல் காலங்களில் அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எனக்கூறியவற்றை முதன்மையான செயற்பாடுபாய் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதில் முதல் கட்டமாக முதலாவது பாராளுமன்ற அமர்வு கூடுவதற்கு முன்னர் கூடப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் ராஜபக்சாக்களுக்கு பெருந்தடைகளை போட்ட ரணில் – மைத்திரி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19க்கு மறுசீர்திருத்தமான 20க்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.  அவ்வாறே இனப்பிரச்சினை தீர்வாக 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் சிபார்சு செய்யப்பட்ட 13வது சீர்திருத்தமும் பெரும் இழுபறியாகவே உள்ளது. அதனடிப்படையில் குறித்த கட்டுரை இலங்கை இனப்பிரச்சினை தீர்வாக இந்திய அரசாங்கத்தால் சிபார்சு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆம் திருத்த சட்டத்தின் எதிர்கால இருப்பை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 13ஆம் திருத்தச்சட்டம் என்பது முழுமையாக இந்திய அரசாங்கத்தின் இலங்கை மீதான செல்வாக்காகவே காணப்படுகிறது. எனிலும் மறுதலையாய் ஈழத்தமிழர் போராட்டாக்குழுவிற்கும...

கன்னி உரையில், தமிழ்மக்களது ஆணையை முன்னிறுத்தியோர்; இணைந்து மக்கள் ஆணையை வெல்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் இமாலய வெற்றியோடு, கடந்த 6ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் நேரடிதேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 196 பேரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். மேலதிகமான 29 தேசியப்பட்டியலில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள்  சக்தி கட்சியின் தலா ஒரு ஆசனங்களை தவிர, மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட 223ஆசனங்களுடன் 9வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு உத்தியோகபூர்வமாக கடந்த ஆகஸ்ட்-20அன்று இடம்பெற்றது. அதனடிப்படையில் தமிழ் அரசியல் தலைமைகளின் கன்னி உரைகளையும் அதுசார்ந்த தமிழர்களின் எதிர்கால எதிர்பார்ப்பை தேடுவதாக இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஈழத்தமிழரின் அரசியல்தீர்வு என்பது வரலாற்றில் முரணான தொடர்புகளையே பேணி வந்துள்ளது. இம்முறை பாராளுமன்றமும் அதற்கு விதிவிலக்கானதல்ல என்பதையே கன்னி அமர்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா ஆற்றிய சிம்மாசன உரை தெளிவுபடுத்துகிறது. பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, 'பௌத்த மதத்தை பேணிப் பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்துள்ளேன்' என .சிம்மாசன உர...

'ஸ்பூட்னிக் V' இன்னொரு பனிப்போருக்கான ஆரம்ப குறிகாட்டியா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முதலில் அறிமுகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 2.16 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 7.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 11, செவ்வாயன்று, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'ஸ்பூட்னிக் வி' என்ற பெயரில் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். புடினின் அறிவிப்பு, பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி நிபுணர்களிடமிருந்து பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. அதனடிப்படையில் ரஷ்சியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியும் அதனுடன் முட்டிமோதும் அரசியலை தேடுவதாகவும் குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பரவ தொடங்கிய நாள்முதலாய் கொரோனா அரசியல் சர்வதேச அரசியலில் பிரதான புள்ளியாக காணப்படுகிறது. சீனா எதிர் அமெரிக்கா என்ற புதிய உலக ஒழுங்கிற்குள் உலகை மாற்றுமோர் போக்கை கொரோனா அரசியல் ஏற்படுத்தியிருந்தது. இந்ந...

இஸ்ரேல் - ஐக்கிய அரபுடனான உடன்பாடு; அமெரிக்க - இஸ்ரேல் தரப்பின் கூட்டு உபாயமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
 இஸ்ரேல் மேற்காசிய பிராந்தியத்தில் முளைத்த நாள் முதலாகவே பிராந்திய நாடுகளை அச்சுறுத்தி தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியே வருகிறது. இடையிடேயே தனது இருப்பை பாதுகாக்கும் வகையில் பிராந்திய நாடுகளுடன் சமாதான முன்னெடுப்புக்களையும் நகர்த்தியுள்ளது. அவ்வகையிலேயே ஈரான், லெபனானுடன் அச்சுறுத்தும் உறவை பேணிக்கொண்டே, ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (யு.எ.ஈ) கடந்த 13.08.2020 அன்று அமெரிக்காவின் நடுவாண்மையுடன் இஸ்ரேல் ஒரு சமாதான ஒப்பந்த நகர்வை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில் இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு  இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் அரசியல் உள்ளடகத்தை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஐக்கிய அரபும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான  வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 13.08.2020 அன்று தெரிவித்தார். இது தொடர்பாக ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, அபுதாபிபட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், 'இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்தியகிழக்கில் அமைதியை மேம்படுத்தும்'...

சிதைவடைந்துள்ள தமிழ் தேசியம் -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இலங்கையின் 9வது பாராளுமன்றத் தேர்தலில், இலங்கை மக்கள் 70 வீதத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்து, தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளார்கள். வடக்கு, கிழக்கிலும் கணிசமான அளவில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையில் வாக்களிப்பு சிங்கள – பௌத்த பேரினவாத அலைக்குள் சிறிலங்கா nபொதுஜன பெரமுனா வசம் குவிந்துள்ளது. மாறாக வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு சிதறிப்போயுள்ளது. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் சிதறிப்போயுள்ளது. இது தமிழ் சமூகத்தின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் பலவீனமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இக்கட்டுரையானது தேர்தலுக்குப் பின்னரான தமிழ் சமூகத்தின் நிலைப்பாட்டை ஆராய்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் தெரிவுசார் சிந்தனை இல்லாத போதும், சிறிலங்கா பொதுஜன பெரமுன அணியை நிராகரித்து தங்கள் நிராகரிப்பை சரியாக அடையாளங்காட்டி தமிழ் தேசியம் மீதான பற்றுதலை உறுதிப்படுத்தி இருந்தார்கள். ஆயினும் குறுகிய கால இடைவெளியில் 10 மாதங்களின் பின்னர் நடைபெற்றுள்ள பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் பிரத...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்க வேண்டும்! ட்ரம்பின் ஆலோசனை சாத்தியமானதா?? -ஐ.வி.மகாசேனன்-

Image
 உலக வல்லரசான அமெரிக்காவிற்கு 2020ஆம் ஆண்டு ஓர் இருண்ட காலமாகவே காணப்படுகிறது.  உலக நாடுகள் பலதும் கொரோனாவோடு வாழப்பழகி இயல்பு நிலைக்கு திரும்பக் கூடிய சூழல் காணப்படுகின்றபோதிலும், அமெரிக்காவில் 2020இன் ஆரம்பத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவால் முடியவில்லை. அரையாண்டு கடந்தும்  அமெரிக்காவால் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதுதான் ஆச்சரியப்படத்தக்க விடயம் எனலாம்.  இந்நிலையில் 2020 நவம்பர் அமெரிக்காவின் 59வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியலும் சூடு பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமான சமூக இடைவெளியை மையப்படுத்தி மின்னஞ்சலூடாகத் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்னஞ்சல் முறைமையானது, அமெரிக்காவின் உயர் ஜனநாயகத்தை பாதிக்குமெனவும், அதில் சர்வதேசத் தலையீடுகள் அதிகம் காணப்படலாமெனவும் காரணங்கூறி அமெரிக்கத் தேர்தலை பிற்போட வேண்டுமென்ற கோரிக்கையை அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். எனவே அமெரிக்க ஜனாதிபதிக்கு தேர்தலை பிற்போடக்கூடிய அதிகாரம் காணப்படுகிறதா? இல்லைய...

வடக்கில் போலி ஜனநாயகம்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் கடந்த ஆகஸ்ட்-05ஆம் திகதி கொரோனா பீதிகளுக்கு மத்தியிலும் கொரோனா சுகாதார நடைமுறைக்குள் இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தல் இனிதே நடைபெற்று முடிந்தது. அவ்வாறே வாக்கு எண்ணிக்கையும் மறுநாள் ஆகஸ்ட்-06 காலை ஆரம்பிக்கப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் நள்ளிரவுக்கு முன்னரே மக்கள் தங்கள் பிரதிநிதிகளை அறிந்து கொண்டனர். எனிலும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்கள் மாத்திரம் தூக்கத்தை துறந்து காத்திருந்து மறுநாள் ஆகஸ்ட்-07ஆம் திகதி அதிகாலை 3மணியளவிலேயே தங்கள் பிரதிநிதிகளை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் பின்னால் வந்த பல சர்ச்சைகளும் இன்றுவரை(8.8.2020) உரிய தரப்புக்களால் நிவர்த்தி செய்ய முடியாமலேயே உள்ளது. அதனடிப்படையே இக்கட்டுரையும் வடக்கு தேர்தலில் எழுந்துள்ள சர்ச்சையும் அது சொல்லும் செய்தியை தேடுவதாகவுமே உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் வடக்கு தேர்தலுக்கு பின்னாலான சர்ச்சையை தெளிவாக மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையில் கொழும்பு, கம்பஹா போன்ற வாக்காளர் தொகை கூடிய தேர்தல் மாவட்டங்களிலெல்லாம் தேர்தல் முடிவுகள் விரைவாக வந்த போதிலும் நான்கு லட்சத்துக்கும் உட்பட்டவர்களே வாக...

நஜீப் மற்றும் அவரது ஊழல் கூட்டாளிகளை மலேசிய அரசு பாதுகாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2020ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து கொரோனா தாக்குதலும் அதனை மீறிய அரசியல் பிணக்குகளும் மலேசியாவை சர்வதேச செய்திகளில் முதன்மைக்கு கொண்டு சென்றுள்ளது. 2020 மார்ச் மாத காலப்பகுதியில் ஆளும் கூட்டணியில் மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தின் மாற்றம்; என்று தொடர்ச்சியான செய்திகளில் மலேசியாவின் அரசியல் இழுபறிக்குள் சிக்கி திணறியது. பின்னர் கொரோனாவின் வீரியம் மலேசிய அரசியல் சர்ச்சைகளை மறைத்து பூதாகார செய்தியாக உலாவியது. இன்று '1எம்டிபி' ஊழல் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, மீண்டும் மலேசியாவின் மீது சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனடிப்படையில், மலேசிய ஊழல் வழக்கு விவகாரத்தை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் (28 ஜூலை 2020) மலேசிய நீதிமன்றம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் 2009இல் ஆரம்பித்த '1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாத்' ('1எம்டிபி' ) எனும் அரசு நிறுவனத்தில் ஊழல் செய்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என நி...

அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆளநேரிடும் - பிளோட்டோ -ஐ.வி.மகாசேனன்-

Image
ஆகஸ்ட்-05இல் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களிடையே குழப்பகரமான முடிவுகளே காணப்படுகிறது. தேர்தலுக்கான நாட்கள் ஒற்றை எண்ணிலேயே மீதமுள்ள போதிலும் தமிழ் மக்கள் கடந்தகால அரசியல் அனுபவங்களால் அரசியல் சார்ந்ததொரு விரக்தி நிலையிலே தமது அரசியல் பிரதிநிதிகளை இன்னும் உறுதியாக தெரிவு செய்யாத நிலையையே காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலே தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்கையில் சிறந்ததொரு பிரதிநிதியை தெரிவு செய்ய எவ்வகையில் சிந்திக்க வேண்டும் என்பதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களிடையே அரசியல் சார்ந்து காணப்படும் விரக்தி களையப்படவேண்டியதாக காணப்படுகிறது. அரசறியவில் தத்துவஞானி பிளேட்டோ கூறிய, 'அரசியலை நாம் தவிர்ப்போமானால் நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆளநேரிடும்.' என்ற கருத்தையே இன்றைய சூழலில் தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. தமிழ் மக்களுக்கு இன்று தெரிவுகள் அதிகமாக உள்ளது. கடந்த கால அரசியல் அனுபவங்கள் ஏமாற்றங்களாய் காணப்படினின் அவர்களுக்கான மாற்றீட்டை தெரிவு செய்ய இன்று தமிழ்த்தேசிய பரப்பில் பயணிக்கும் மாற்று சக்திகள...