Posts

Showing posts from October, 2021

ஜனநாயக சவாலால் சூடானில் மீள துளிர்க்கிறது இராணுவ ஆட்சி? -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் என்பது அதிகாரத்தை மையப்படுத்திய அலகாகவே காணப்படுகிறது. இவ்அதிகாரப் போட்டிக்குள் வரலாறு தோறும் ஜனநாயகத்துக்கு முரணான அதிகார கைப்பற்றுகைகளும் பதிவாகியே வருகின்றது. எனினும் அண்மைய சர்வதேச அரசியல் பரப்பில் ஜனநாயகத்துக்கு முரணான அதிகாரக்கைப்பற்றுகையின் செய்தியிடல்கள் அதிகரித்து வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. அண்மைய ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பதிவுகளாய் மியான்மார், ஆப்கானிஸ்தான், கினியா எனும் வரிசையில் ஒக்டோபர்(2021) இறுதியில் சூடானும் இணைந்துள்ளது. இக்கட்டுரை சூடானில் ஏற்பட்டுள்ள இராணுவ சதிப்புரட்சி அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  சூடானின் நீண்ட கால அரசியல் வரலாறு இராணுவ அட்சியினுள்ளேயே காணப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியான ஒமர் அல் பஷீர் 1989இல் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். இவரது ஆட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு மக்கள் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொண்டு சிவிலியன்-இராணுவ கூட்டமைப்பு ஒன்று இடைக்கால அரசாங்கமாக பதவியேற்றது. சூடானின் இறையாண்மை சபை சிவிலியன்-இ...

கொழும்பு-புதுடில்லி உறவு புவிசார் பொருளாதார உறவாக வலுவடைகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொழும்பு-புதுடில்லி உறவானது கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான பிணைப்பை உருவாக்கி வருகிறது. குறிப்பாக குஷிநகர் விமானநிலைய திறப்பும் அதுசார் நிகழ்வுகளும் கலாசாரப்பிணைப்பின் வலுவையும், கொழும்பு துறைமுக மேற்கு முனைய ஒப்பந்தம் மற்றும் அதைத்தொடர்ந்தான அவ்ஒப்பந்த இந்திய நிறுவன முதலாளி கௌதம் அதானியினது இலங்கைக்கான விஜயங்களும்  வலுப்பெறும் இருநாட்டு உறவின் சாட்சியமாகின்றது. இக்கட்டுரை வலுப்பெறும் இருநாட்டு உறவின் தார்ப்பரியங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொடா, இலங்கை-இந்திய உறவை கலாசார மற்றும் பொருளாதார ரீதியிலான பிணைப்பினூடாக வலுப்படுத்துவது தொடர்பாகவே தனது செயற்றிட்டங்களை வகுத்துள்ளார். மிலிந்த மொறகொட தயாரித்துள்ள 2021/2023ஆம் ஆண்டுகளுக்காக ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விரிவான வழிவரைபடத்தில் அரசியல் உரையாடல் தவிர்க்கப்பட்டு, அதிகம் கலாசாரக்கூறுகளை அடையாளப்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரரீதியாக இந்திய-இலங்கை உறவை வலுப்படுத்துவதற்கான சாத்தியமான எண்ணங்களே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா சார்ந்த இலங்...

வடகொரியாவின் தொடர் ஏவுகணை பரிசோதனைகள் உலகளாவிய அரசியலின் மூலோபாய நகர்வா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் ஏவுகணை பரிசோதனைகள்  கனதியான அரசியலாய் நிலைபெற்று வந்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸிற்கு பின்னர் உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பனிப்போர் தோற்றம் ஏவுகணை அரசியலையும் முதன்மைப்படுத்திவருகிறது. ஆக்கஸ் ஒப்பந்தம், ரஷ்சியாவின் ஹைப்பர்சொனிக் ஏவுகனை பரிசோதனை, தைவான் நீரிணை பதட்டம் எனும் ஒழுங்கினிலே வடகொரியாவும் தொடர்ச்சியாய் நவீனரக ஏவுகணை பரிசோதனைகள் மூலம் மாறிவரும் உலக ஒழுங்கில் தனக்கான நிலையை உறுதிப்படுத்துவதில் மும்மரமாக உள்ளது. இக்கட்டுரை வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளின் உலகளாவிய அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர்(2021) மாதத்தின் ஆரம்பத்திலிருந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது. செப்டெம்பர் முன்னரை பகுதியில் வடகொரியா மேற்கொண்ட க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை தொடர்பில் கடந்த இதழ்களில் இப்பகுதியில் ஆழமாக உரையாடப்பட்டது. தொடர்ச்சியாகவும் வடகொரியா பல நவீனரக ஏவுகணை பரிசோதனைகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஒக்டோபர்-19அன்று வடகொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி...

ஈழத்தமிழர்-தமிழக உறவை பலவீனப்படும் முயற்சியில் தமிழரசியல் தரப்பு செயல்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை அரசியல்வாதிகள் அதிகம் நாடும் அரசியல் கலாசாரம் தென்னாசிய அரசியல் பரப்பிலோர் அடையாளமாக மாறியுள்ளது. தமிழ்த்தேசிய பரப்பில் மக்களின் உரிமைப்போராட்டங்களை அதிகம் வெறுப்பாக கடந்து சென்ற தரப்பினர்கள் அண்மைய நாட்களில் நேரசூசியை இட்டு சில போராட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். மக்களும் இதனை தேர்தல் அரசியல் நடாகமாக கடந்து செல்ல முற்படுகின்றார்கள். எனினும் தெரிவு செய்யப்பட்ட போராட்டங்கள் பல தளங்களில் அரசியல் விளைவுகளை கொண்டதாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் உரையாடல்களில் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக மீனவர்-ஈழத்தமிழ் மீனவர் சமூக நெருக்கடிகளை மையப்படுத்தி இடம்பெற்ற போராட்டம் அதிக காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் மீனவ சமூகங்களின் நெருக்கடிகளை மையப்படுத்தி இடம்பெற்ற போராட்டத்தின் அரசியல் தார்ப்பரியத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் வட இலங்கை கடற்பரப்புக்களில் நுழைவதும், இலங்கைத்தமிழ் மீனவர்கள் தமிழக கடற்பரப்புக்குள் நுழைவதும் இரு மீனவ சமூக மக்களிடையேயும் நீண்டகால பிரச்சினையாக காணப்படுகிறது. இந்நெருக்கடிகளுக்குள் தமிழக ம...

தமிழ்த்தேசிய அரசியல் தரப்புக்களும் மாகாணசபை தேர்தல் முனைப்புக்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் மீளவும் மாகாண சபை தேர்தல் விவகாரம் சூடான விவாத பொருளை உருவாக்கியுள்ளது.  மாகாண சபை தேர்தல் விவகாரம் இலங்கையின் இறைமைக்கு முரணான வகையில் சர்வதேச தலையீடு என்பதாக எதிரணிகளால் குற்றச்சாட்டுகள் நிரல்படுத்தப்படுகின்றது. ஆளுங்கட்சி தேர்தல் முறைமை தொடர்பான சிக்கல்களே மாகாண சபைத்தேர்தலின் தாமதத்துக்கு காரணமெனவும் விரைவில் அது பூர்த்தியடைய உள்ளமையால் மாகாண சபை தேர்தல் பற்றி சிந்திப்பதாகவும் தம்தரப்பு நியாயப்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அரசியல் முரண்நிலைகளுக்கு அப்பால் தென்னிலங்கை மாகாணசபை தேர்தலை இலங்கை தேசிய நலனுடன் தொடர்புறுத்தியே முரண்படுகிறார்கள். எனினும் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிடையே மாகாணசபை தேர்தல் தொடர்பான சிந்தனை அரசியல் அதிகார போட்டிக்கான களமாகவே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பு கவணத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வருகை மற்றும் அரசியல் சந்திப்புக்களில் 13ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலே அதிகமான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ...

ஆப்கானிஸ்தானை போல அமெரிக்கா தைவானை கைவிடுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக அரசியலில் சில நிலப்பரப்புகள் சிறிய தீவாக காணப்படுகின்ற போதிலும், அதன் புவியியல் அமைவிடம் அந்நிலப்பரப்புக்கு கணதியான பெறுமதியை வழங்குகின்றது. இதனை விளங்கிக்கொள்ளும் விதத்தில், கியூபா அரசியல் அமைவிடம் சார்ந்து பனிப்போர் காலத்தில் சர்வதேச ஈர்ப்பை பெற்றிருந்தது. அவ்வாறே இந்தோ-பசுபிக் மூலோபாய அரசியலில் இலங்கையும் சர்வதேச சக்திகளின் விருப்புக்குரிய நிலமாக அமைகின்றது. இவ்வாறே தென்சீனக்கடலில் தைவானும் சீனாவிற்கெதிரான அமெரிக்க தலைமையிலான மேற்கின் அரசியலுக்கு துணைபோவதால் ஒரு உலகப்போர் பற்றிய உரையாடல்கள் மற்றும் எதிர்பார்க்கைகளில்  தைவான் நிலப்பரப்பு முதன்மையாக உள்ளது. இக்கட்டுரை தைவான் நிலப்பரப்பில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதட்டம் மற்றும் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தைவான் ஜலசந்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அதன் செயல்பாட்டை அதிகரித்துள்ளது. தினசரி தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு ( ADIZ  ) போர் விமானங்களை அனுப்புதல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளில் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தி...

ரஷ்சியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனைகளை மையப்படுத்தி மூலோபாய ஆயுத போட்டி ஆரம்பித்துள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனாவிற்கு பின்னரான சர்வதேச அரசியல் களத்தில் உலக வல்லாதிக்க போட்டி நாடுகளாக அமெரிக்கா எதிர் சீனா என்பதே அதிக உரையாடலாக காணப்படுகிறது. எனினும், ரஷ்சியா அடிக்கடி தனது ஆயுத பலத்தை காட்ட தவறியதில்லை. உலக அரசியலில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க பிரிட்டன் அவுஸ்ரேலிய கூட்டில் உருவாக்கப்படும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பான ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் அமெரிக்கா எதிர் சீனா போட்டியாகவே அதிக சர்ச்சையை உருவாக்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ரஷ்சியா அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையும் ரஷ்சியா  மேற்கொண்டுள்ள ஏவுகணை பரிசோதனையை மையப்படுத்திய அரசியலை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர்-04(2021)அன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து முதல் முறையாக ஹைப்பர்சோனிக்(hypersonic) வகையிலான 'சிர்கோன் ஏவுகணையை'(Zircon Missile) வெற்றிகரமாகச் சோதித்ததாக ரஷ்சியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. மேலும், சிர்கோன் ஏவுகணை வெள்ளை கடலில் உள்ள அட்மிரல் க்ரோஷ்கோவ்(Admiral Groshkov) ...

ஒற்றுமை எனும் அரசியல் இராஜதந்திரத்தை தமிழ்தரப்பு பின்பற்றுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ்த்தேசிய பரப்பில் நீண்டகாலம் பிரச்சாரப் பொருளாகவே இருப்பது ஐக்கியம் ஆகும். 1976ஆம் ஆண்டு அன்றைய முதிர்ச்சியான தமிழ்த்தேசிய தலைமைகளின் விட்டுக்கொடுப்பின் விளைவான தமிழர் விடுதலைக்கூட்டணி உருவாக்கம் மற்றும் 2001ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டக்குழுவின் முனைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் எனும் இரு சந்தர்ப்பங்களில் தமிழ்த்தேசிய பரப்பில் ஐக்கியம் அடையாளம் காணப்பட்டது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சிதறல்கள் புதிய அரசியல் கட்சிகளின் உதயங்கள் தமிழ்த்தேசியத்தை பல கூறாக்கியது. அதன் பின்னர் சிவில் சமூக தலைவர்கள், மாணவர் ஒன்றியங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல முனைப்புக்களில் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒற்றுமைப்படுத்த முனைப்புக்கள் மேற்கொண்ட போதிலும் யாவும் இறுதியில் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. இக்கட்டுரையும் இந்திய வெளிவிவகார செயலாளரின் ஐக்கியத்துக்கான கோரிக்கை பற்றிய தேடலாக உள்ளது. தமிழ்த்தேசிய கட்சிகளிடையேயான ஐக்கியம் பற்றிய உரையாடல்கள் அதிகமாக தேர்தல்களை மையப்படுத்தியே எழுவதுண்டு. எனினும் தற்போது தமிழ்த்தேசிய பரப்பில் ஐக்கியம் ப...

தமிழர்களின் அரசியல்போராட்டமும் ஐரோப்பிய ஒன்றியமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச்சலுகை நீக்கம் ஆகிய இரண்டும் இலங்கை அரசாங்கத்திற்கான சமீபத்திய சர்வதேச நெருக்கடியாக காணப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஆணையாளரின் குறிப்புகளோடு கடுமையான நெருக்கடிகளின்றி கடந்து சென்றுள்ளது. அதேவேளை இலங்கையின் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் ஐ.நா வரை சென்று தமது உள்ளக பொறிமுறை பிராச்சரத்தை வீரியமாக முன்னெடுத்தும் இருந்தனர். இந்நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜி.எஸ்.பி+ வரிச்சலுகை தொடர்பான தீர்க்ககரமான முடிவுகளை மேற்கொள்வதற்கான களஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ளனர். இக்கட்டுரை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் இலங்கைக்கான வருகையும் சந்திப்புகளுக்கும் பின்னாலுள்ள அரசியலை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள், தொழிலாளர் நிலைமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி பற்றிய 27 சர்வதேச மாநாடுகளை ஒப்புதல் மற்றும் திறம்பட செயல்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஜி.எஸ்.பி+ வழங்கப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மனித ...

சீனாவுக்கு எதிரான இந்தோ-பசுபிக்கை மையப்படுத்திய அமெரிக்காவின் வியூகம் நெருக்கடியை எதிர்நோக்குகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் அதிகாரத்துக்கான போட்டி ஆகும். சர்வதேச அரசியல் தொடர்ச்சியாக வல்லாதிக்க அரசுளின் அதிகார போட்டிக்கான களமாகவே காணப்படுகிறது. வல்லரசு சக்திகள் அணிகளை திரட்டி அதிகாரத்துக்கான போட்டியை தொடர்கின்றன. குறிப்பாக, பனிப்போர் காலம் உலகை இருதுருவமாக்கியது. பனிப்போருக்கு பின்னரான ஒற்றை மைய அரசியல் காலப்பகுதியிலும் அமெரிக்கா தனது அதிகாரத்தை நிலைநாட்ட கூட்டணிகளையே தொடர்ந்து பேணி வந்தது. இந்நிலையில் தற்போது அதிகரித்துள்ள சீனாவுடனான அதிகார போட்டியில் கூட்டணிகளூடாக சீனாவை எதிர்கொள்வதில் அமெரிக்கா கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.  இக்கட்டுரையும் சீனாவிற்கு எதிரான கூட்டணிகளை உருவாக்குவதில் அமெரிக்கா முனைப்பு செலுத்தினாலும் அதற்குள் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றது என்பதனை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கடந்த 70ஆண்டுகளில் அமெரிக்க கூட்டணி வலையமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மிக வெற்றிகரமான மற்றும் நீடித்த அம்சங்களில் ஒன்றாகும். இந்த கூட்டணிகள், முதலில் பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் சோசலிச விரிவாக்கத்திற்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்...