Posts

Showing posts from 2023

தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைமையாவது தமிழ்த்தேசியத்துடன் பயணிக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ்த்தேசியம் தனது உரிமைக்காக போராடிய செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் ஒழுங்கில், கட்சிகளுக்கிடையிலான போட்டிகள் முதன்மைப்படுத்தப்பட்டு, இன்று கட்சிக்குள்ளே இடம்பெறும் அதிகாரப் போட்டி முதன்மைப்படும் நிலைக்கு பரிணமிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியே இன்று ஈழத்தமிழரசியலில் முதன்மையான செய்தியாக காணப்படுகின்றது. ஜனநாயக அரசியலில் தேர்தலூடாக தலைமையின் தெரிவு சாதாரணமாயினும், தேசிய அரசியலில் கட்சித்தலைமையின் தெரிவுக்கு தேர்தலை நாடுவது ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணமாகிவிடுமென்பதுவே பலரதும் அச்சமாக காணப்படுகின்றது. தமிழ் சிவில் சமுகத்தினரால் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தலை தவிர்த்து புதிய தலைமையை தெரிவு செய்ய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சிக்குள்ளும் அத்தகைய கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தேசியம் என்பது மக்கள் திரட்சியால் கட்டமைக்கப்படும் ஓர் உணர்வுசார்ந்த விடயமாக காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக...

ராஜபக்ஷா குடும்பம் ஜனரஞ்சக அரசியலில் மீளெழுச்சி பெறுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் சர்வதேச அரசியலில் ஜனரஞ்சகவாத அரசியல் பற்றிய சொல்லாடல் ஜனநாயகத்தின் சுமையாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்தில் பொரிஸ் ஜோன்சன், இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சிகள் ஜனரஞ்சகத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. சமகாலத்திலேயே இலங்கையில் ராஜபக்ஷhக்கள் தவிர்க்க முடியாத ஜனரஞ்சக அரசியல் தலைவர்களாக எழுச்சி பெற்றார்கள். பொதுஜன பெரமுன கட்சியின் குறுகிய காலத்திலான பரந்த பரிமானமும் அதன் சான்றாகவே அமைந்தது. எனினும் ஜனரஞ்சக அரசியல் தலைமைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை, இலங்கை மக்கள் 2021ஆம் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியினூடாக பெற்றுக்கொண்டார்கள். ஜனரஞ்சக தலைவர்கள் அரகல்யா எனும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சியினூடாக ஆட்சியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார்கள். எனினும் மீள ஜனரஞ்சக அரசியலை முன்னிறுத்தி ராஜபக்ஷாக்கள் தலைமையில் பொதுஜன பெரமுன மீளெழுச்சி பெறுகின்றதா என்பதே தென்னிலங்கை அரசியலின் சமகால அரசியல் வாதமாக அமைகின்றது. இக்கட்டுரையும் பொதுஜன பெரமுனவின் அரசியல் மாநாடு ஏற்படுத்...

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகால உலக அரசியல், நாகரீகங்களின் ஆதிக்கத்துக்குள் பயணிக்க ஆரம்பித்துள்ளது. டிசம்பர் முதல் வாரம் தனது 100வது வயதில் மரணித்த அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கீசிங்கரும் பனிப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கை நாகரீகங்களின் மோதலாகவே அடையாளப்படுத்தியிருந்தார். இருபத்தொரம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் சீனாவின் எழுச்சியும், தற்போதைய இந்தியாவின் எழுச்சியும் நாகரீக அரசு (Civilization State) என்ற பெயரிடலிலேயே குறிப்பிடப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே இந்திய அரசியன் வெளியுறவுக்கொள்கையில் ஆதீக்கம் செலுத்தும் நாகரீக தொடர்புகளை அவதானிக்க வேண்டி உள்ளது. குறிப்பாக இலங்கையில் முதன்மைபெறும் மதங்களான பௌத்தம் மற்றும் இந்து ஆகிய இரண்டுமே இந்தியாவுடன் நாகரீகப்பிணைப்பில் இணைகின்றது. எனினும் இந்திய அரசிடமிருந்து உயரளவிலான நலன்களை அனுபவிப்பதாக இலங்கையின் பௌத்த மதமே காணப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழரசியலிலும் இந்து மதத்தை முன்னிறுத்தி, இலங்கையின் வடக்கு-கிழக்கில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிதைக்கப்படும் இந்து மதத் தொன்மைகளை பாதுகாப்பதற்கான கோரிக்கைகளை இந்தியாவை மையப்படுத்தி உரையாடுவதற்கான வாதம் மேலெழுந்த...

இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

Image
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற 5 மாநில தேர்தல்களில் மூன்றில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலே வலுப்பெறும் இந்தியாவின் இந்துத்துவ அரசியலுக்கூடாக இலங்கையில் பௌத்ததால் சிதைக்கப்படும் இந்து பண்பாட்டை பாதுகாத்துஇ தமிழ்த்தேசியம் மீதான ஆக்கிரமிப்புக்களை நிறுத்தலாம் என்ற வகையில் ஈழத்தமிழரசியல்  உரையாடவும் செயற்படவும் ஆரம்பித்துள்ளது. எனினும் மறுதளத்தில் இந்திய மத்திய அரசுடனான அணுகலை ஈழத்தமிழரசியலின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மத அரசியலை புகுத்தும் செயற்பாடாக அமையுமென்ற விமர்சனங்களும் சமகாலத்தில் ஈழத்தமிழரசியலில் வலுப்பெற்று வருகின்றது. இக்கட்டுரை இந்தியாவின் இந்துத்துவ அரசியலில் பௌத்தத்தின் நிலையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் காலத்துக்கு காலம் இந்தியாவின் அரசியல் ஆதிக்கங்கள் இலங்கை அரசியலில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. அத்தகையதொரு மாறுதலே கி.மு 3ஆம் நூற்றாண்டில் இந்தியப்பேரரசர் அசோகரின் பு...

தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் தேசியத்துக்கான திரட்சியை பயன்படுத்திக்கொள்ளுமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியத்தின் செல்நெறி தொடர்பில் பலமான சந்தேகங்கள் சமீபகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சியை சார்ந்தவர் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற போது ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய செல்நெறி பலவீனமடைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. எனினும் வலுவான போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களுக்கான ஒன்று கூடல்களில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது தமிழ்த்தேசியம் மீதான உறுதிப்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்தவாரம் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தலின் தமிழர் தாயக பதிவுகளும் அதனையே உறுதிசெய்கின்றது. எனினும், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய உறுதிப்பாட்டை பயன்படுத்தி வலுப்படுத்தக்கூடிய செயற்றிட்டங்களை தமிழ் அரசியல் கொண்டுள்ளனவா என்பதிலேயே அரசியல் அவதானிகள் வலுவான கேள்விகளை எழுப்புகின்றனர். இக்கட்டுரை தமிழ் மக்களின் மாவீரர் தின எழுச்சியின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க உருவாக்கத்தின் பின்னர் ஒப்...

தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை தமிழ்த்தேசியத்துக்கானதாக அமையுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கையில் வரவு-செலவுத்திட்டம் அதனை ஆதாரமாகக்கொண்டு 2024ஆம் ஆண்டுக்கான தேர்தலில் அரசியல் கட்சிகள் முட்டி மோதிக்கொண்டிருகின்றன. தமிழர் தாயகப்பகுதியில் தமிழரசியல் கட்சியின் திரட்சியும் நெடிய வரலாறும் தொடர்ச்சியாக சிதைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடந்த வருடம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்புடன் இரு தசாப்தங்களாக தமிழ்த்தேசியத்தின் ஏகபிரதிநிதித்துவத்தை தக்கவைத்து, தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதைக்கப்பட்டிருந்தது. தற்போது தலைமைத்துவ போட்டியில் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சிற்குள் நெருக்கடிகள் உருவாகியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் தொடர்ச்சியான முரண்பாடுகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கான ஆபத்தை அடையாளப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் எச்சரிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இக்கட்டுரை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிசார் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நான்கரை வருடங்கள் தாமதித்து எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி நடாத்துவதற்கு ந...

2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் கடந்த வாரம் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்காவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிக வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் கடந்த காலத்தின் பயனற்ற வரவு-செலவுத்திட்டத்தின் தொடர்ச்சியையே ரணில் விக்கிரமசிங்காவும் பின்பற்றியுள்ளாரென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. மாறாக ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில், 'அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக தேர்தல் வாக்குறுதிகளை நம்பியிருப்பது வரலாற்று ரீதியாக நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கு வழிவகுத்தது என்பதை நினைவு கூர்ந்து, ஒரு தேசத்தை முன்னேற்றுவதற்கு வெறும் விசித்திரக் கதைகளை விட அதிகமானதை 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக' தெரிவித்துள்ளார். இக்கட்டுரை 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தின் அரசியல் நலன்சார் நோக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நவம்பர்-13அன்று தனது அரசாங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கான தென்னிலங்கையின் முன்னகர்வுகளும் ஈழத்திழர் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கை அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் அதிகம் தேர்தலை மையப்படுத்தியதாகவே முதன்மைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் நீண்ட தோல்வி வரலாறுகளுளின் உச்சத்தில் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதி ஆசனத்தை தக்கவைப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்வீச்சான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கா தொடர்பான மக்கள் எண்ணங்களும் அதிக எதிர்விமர்சனங்களையே உறுதி செய்கின்றது. மறுதலையாக ஈழத்தமிழர்களும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வினைத்திறனான முடிவுகளை எடுக்க வேண்டிய காலப்பபகுதியில் காணப்படுகின்றனர். இக்கட்டுரை இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய தென்னிலங்கை மற்றும் ஈழத்தமிழரசியல் நகர்வுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர்-16ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவிடம், தற்போது நடைமுறையில் இருக்கும் சகல தேர்தல் சட்டங்களையும் ஒழுங...

வரவு-செலவுத்திட்டம் ரணில்-பெரமுன அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கை அரசியல் சிங்கள பௌத்த பேரினவாதத்தினூடாக சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைகளை தொடர்ச்சியாக நிலைநாட்டுவதில் வெற்றி பெற்றுள்ள போதிலும், இலங்கையின் அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தொடர்ச்சியாக நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. ரணில்விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்டம் நவம்பர் மத்தியில் சமர்ப்பிக்க உள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைத்திருப்பு தொடர்பில் அதிக வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது. தொடர்ச்சியாக எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களின் விலையேற்றங்கள் பொதுமக்களிடம் அரசாங்கம் தொடர்பிலான விசனத்தை எழுப்பியுள்ளது. மேலும், தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வைக்கோரிய போராட்டங்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தகைய நெருக்கடிகளுக்குள்ளேயே  2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்முயற்சிகள் இடம்பெறுகின்றது. இக்கட்டுரை வரவு-செலவுத்திட்டத்தை மையப்படுத்தி தென்னிலங்கையில் கட்டமைக்கப்படும் அரசியல் நெருக்கடிகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கடந்த ஒக்டோபர்-30அ...

கிழக்கு மீதான பேரினவாத ஆதிக்கமும் ஈழத்தமிழர் அரசியல் இருப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தினசரி புதிய பரிமாணங்களுக்குள் நகர்ந்து செல்கின்றது. 'அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்' என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஒக்டோபர்-25அன்று தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு, பிரச்சாரம், அச்சுறுத்தல் என சிங்கள பேரினவாதிகள் தமிழர் நிலங்கள், தமிழர்கள், தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீது பேரினவாத நடவடிக்கைகளை தினசரி அதிகரித்து வருகின்றனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் முழுமையாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வீச்சுப்பெறுகின்ற போதிலும், கிழக்கில் முதன்மையான தாக்கத்தை செலுத்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் கிழக்கில் தமிழர்களின் அரசியல் தலைமைகளில் சாணக்கியனை தவிர, வேறு அரசியல் தலைமைகள் தமிழர்களின் விடயங்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாட்டை அவதானிக்க முடியவில்லை. சாணக்கியனிடமும் முதிர்ச்சியான அரசியல் அனுபவமின்மை வினைத்திறனான செயற்பாட்டை நகர்த்துவதாக அமையவில்லை. குறிப்பாக கடந்த வாரங்களில் தமிழ் அரசியல் தரப்பின் போராட்ட ம...