Posts

Showing posts from May, 2021

சுயமதிப்பீட்டுக்கு உட்படுமா கூட்டமைப்பு? -ஐ.வி.மகாசேனன்-

Image
2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய வாக்குகளின் சரிவில்,  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளே பிரதான காரணமாகும். அதன் விளைவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அனுபவித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றிருந்த கூட்டமைப்பினர், 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 10 ஆசனங்களையே பெற்றிருந்தனர். இச்சரிவு 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளிலேயே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதனை சீராக பகுப்பாய்வு செய்ய தவறியதன் விளைவையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்ற தேர்தலில் அனுபவித்திருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்கள் சரிவுக்கான காரண காரியங்களை தற்போதும் சரியான பகுப்பாய்வை மேற்கொள்ள தவறியுள்ளார்களோ என்ற எண்ணத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில செயற்பாடுகள் ஏற்படுத்துகிறது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தொடரும் பலவீனங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சரிவை ஒர் அரசியல் கட்சியின் சரிவாய் மக்கள் மாற்று அரசியலை நாடுகின்றார்கள் என புறந்தள்ளி தமிழ்த்தேசிய அரசியலை நேசிப்பவர்களால் விலக...

இஸ்ரேல் - பலஸ்தீன போர் நிறுத்த அறிப்பு நிரந்தரமாகுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் கொரோனா அழிவு மற்றும் மீழ்ச்சி பற்றி உரையாடலை முன்னிலைப்படுத்துகையில், மேற்காசியா என்பது போர் வலயம் என்பதை மீளவும் நிரூபித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசாவில் உள்ள ஹாமாஸ் அமைப்பினருக்கு இடையில் கடந்த மே-12ஆம் திகதி பெரும் அழிவுப்போர் ஆரம்பிக்கப்பட்டது. இவ்அழிவுப்போரை மையப்படுத்தி உலக நாடுகளும் இருதுருவங்களாக ஆதரவு, எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. சில நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஹாமாஸ் அமைப்புக்கு இராணுவ, ஆயுத உதவிகளையும் மேற்கொண்டிருந்தனர். அரசியல் ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உயிரிழப்பின் போக்குகளை அவதானித்து கவலைகளை தெரிவித்து கொண்டனர். உலக சமாதானத்துக்காக நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பொதுச்செயலாளரும் கவலையை தெரிப்பதுடன் கடந்து சென்றார். இரண்டாவது வாரமாக தொடர்ந்த இஸ்ரேல் - பலஸ்தீன கொடும் போர் கடந்த மே-21 அன்று அதிகாலை அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தால் நிறைவுக்கு வந்தது. போர் நிறைவுற்ற பின்னர் இஸ்ரேல், பலஸ்தீனிய இருதரப்பு அரசியல் தலைமைகளும் போரில் தாமே வெற்றி பெற்றதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எதிர்த்தரப்புக்களை சீண்டும் கரு...

புலம்பெயர் தமிழர் அரசியல் செல்வாக்கை ஒருங்கிணைக்க தவறுகிறது இலங்கை தமிழர் தரப்பு? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழர் உரிமைசார் அரசியல் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் ஓர் யுகசந்தியாகும். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் தமிழர் உரிமைசார் போராட்டமும் பரந்த அடிப்படையில் விரிவடைந்து விட்டது. அதன் செயற்பாட்டாளர்கள் இலங்கைக்குள் தனித்து மட்டுப்படாது வெளியேயும் பரந்த பரப்பில் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை ஒருங்குசேரத்து தமிழர் உரிமை போராட்டத்தை வலுப்படுத்தி நகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கையில் செயற்படும் செயற்பாட்டாளர்களிடமே காணப்படுகிறது. புலம்பெயர் பரப்பில் தமிழர்களின் செயற்பாடு ஆரோக்கியமான முன்னேற்றத்தை அடைந்து வருகின்றது. அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிராக எழுந்த ஆதரவுக்குரல்கள், யாழ்ப்பாண நகர மேயர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக எழுந்த கண்டனங்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் திடலில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தூபி உடைக்கப்பட்டமையை கண்டித்து புலத்தே எழுந்த ஆதரவு குரல்கள் என்பன புலத்தில் வீரியம் பெறும் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்துகிறது. எனினும் இலங்கையில் தமிழ் அரசியல் செயற...

ஸ்கொட்லாந்து தனி அரசாகுமா? ; நிக்கோலா ஸ்ரேஜன் மற்றும் போரிஸ் ஜோன்சன் மோதல் -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனநாயக உரையாடல்கள் அதிகமாக இடம்பெறும் ஐரோப்பிய தேசங்களில் சமீப காலங்களில் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டு கோரிக்கைகளும் அதற்கெதிரான ஆதிக்க அரசசுகளின் செயற்பாடுகளும் அதிகமாகவே இடம்பெற்று வருகிறது. மே-6 ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற தேர்தலின் பின்னர் ஸ்கொட்லாந்து அரசியல் வெளியல் சுதந்திரம் பற்றிய உரையாடல்கள் மேலெழுந்துள்ளது. 2014ஆம் ஆண்டிலும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திர கோரிக்கையை ஸ்கொட்லாந்து முன்னெடுத்து பொதுவாக்கெடுப்பையும் நிகழ்த்தியது. எனினும் அன்று ஸ்கொட்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் ஐக்கிய இராச்சிய முடிக்குள்ளேயே வாழ்ந்திட விருப்பத்தை தெரிவித்து பொதுவாக்கெடுப்பை தோற்கடித்தனர். அதனை தொடர்ந்து ஸ்கொட்லாந்து சுதந்திர உரையாடல்களும் சிறிது மௌனித்திருந்தது. மீள தற்போது ஸ்கொட்லாந்து சுதந்திர கோரிக்கை அதிகமாகவே பொதுவெளியில் உரையாடப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்கொட்லாந்து தொடருமா என்பதே தற்போதைய உலக அரசியல் உரையாடலாக ஆரம்பித்துள்ளது. அவ்உரையாடலை மையப்படுத்தியே இக்கட்டுரையும் ஸ்கொட்லாந்து சுதந்திர கோரிக்கையை அதன் வரலாற்றிலிருந்து தேடுகிறது. 'ஸ்கொட்லாந்தின் மக்கள் ...

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராக ஆளுநர் செயற்படுவாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரச உயர் அதிகாரிகள், அரச முகவர்கள் எனப் பலரும் தங்கள் பதவி உயர்வுகளுக்காகவும், சுகபோக  வாழ்வுக்காகவும் தம் சமூகத்தினை மலினப்படுத்துவதனூடாக ஆளுந்தரப்பைக் குளிர்விப்பதென்பது காலம் காலமாக நடந்தேறிவரும் விடயமாகவே காணப்படுகின்றது. குறிப்பாகத் தமிழ் சமூகத்தில் அது அதிகளவிலேயே நிறைந்துள்ளது. அண்மையில் தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்றுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அளித்த நேர்காணலில், அதிகளவில் வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே கேள்வி எழுப்பப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது.  அதில், வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ள கருத்துக்கள் வடக்கின் நிர்வாகங்களுக்கு பொறுப்புடமையாக உள்ள ஆளுமையின் வினைத்திறனான கருத்தாடலா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது, சிவில் நிர்வாகத்தில் அதிகளவு அனுபவத்தை கொண்டு இன்று வடமாகாணத்தின் ஆளுநராக, ஜனாதிபதியின் வடமாகாணத்திற்குரிய நேரடிப்பிரதிநிதியாக உயர்ந்துள்ள ஆளுமையான பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி ஆவா...

கொரோனா பரவுகையை கட்டுப்படுத்த மக்களே விழிப்படைதல் வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் தற்போது தினசரி செய்தித்தாள்களில் வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கைகளும், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கைகளும் நாம் மிகவும் ஆபத்தான சூழலிலே வாழ்கிறோம் என்ற செய்தியையே புலப்படுத்துகிறது. இலங்கை செய்தித்தாள்களில் 90%மான செய்திகள் கொரோனா பற்றிய உரையாடல்களாகவே காணப்படுகிறது. எனிலும் சற்றே வீதிகளில் இறங்கி பார்க்கையில் மக்களின் செயற்பாடுகளில் கொரோனா வைரஸ் அபாயம் சார்ந்த எவ்வித பாதுகாப்பும் எச்சரிக்கை உணர்வும் காணப்படவில்லை. மக்களோடு உரையாடுகையில் அரசாங்கம் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் அச்சத்தை காட்டி தமது நலன்களை பூர்த்தி செய்தது போன்ற செயற்பாடாகவே தற்போதைய கொரோனா வைரஸ் செய்திகளையும் அவதானிக்கின்றார்கள். இதுவோர் அபத்தமான எண்ணமாகும். இந்நிலையில் இலங்கையின் தற்போதைய கொரோனா ரைஸ் சூழ்நிலையை விபரமாக தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் மீண்டும் உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்று அலை தற்போது தீவிரமான பரவல் நிலைமையில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் நாளாந்தம் நூறுகளாக இருந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையானது, கடந்த வாரங்க...

இந்திய தேர்தல் வியூக நிபுணர் குழு; தேர்தல் ஜனநாயகத்தை சிதைக்கின்றனவா? -ஐ.வி.மகாசேனன்-

Image
02.05.2021 அன்று இந்தியாவின் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. இந்தியாவில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு உட்பட்ட தேர்தல்கள் அரசியல் கட்சிகள், தொண்டர்களை நம்பியிருந்த நிலை மாறி, தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அரசியல் ஆலோசனை கூறுவோரை நம்பும் நிலை உருவாகி உள்ளது. ஒரு தலைவரை, நல்லவராக மக்களிடம் உருவகப்படுத்துவதும், கெட்டவராக மாற்றுவதும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் எளிதாகிறது. இந்நிலை மக்களாட்சி எனப்படும் தேர்தல் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் அவலமாகும். இந்நிலையில் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் தேர்தல் வியூக நிபுணத்துவம் என்ற போர்வையில் இடம்பெறும் ஜனநாயக படுகொலையை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அப்பால் அதிகமாக உரையாடப்பட்டதாக தேர்தல் வியூகங்களை மேற்கொண்ட நிபுணத்துவர்களையும் அவர்களது நிறுவனங்களை பற்றிய உரையாடல்களே அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பிரசாந்த் கிசோர் மற்றும் அவருடைய நிறுவனமான ஐ-பக்(I-PAC) பற்றிய உரையாடல் தேர்தல்...

சுதந்திரமற்ற சூழலில் ஊடக சுதந்திர தினம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் மே-03ஆம் திகதியை ஊடக சுதந்திர தினமாக ( World Press Freedom Day ) சிறப்பிக்கிறது. ஜனநாயக வெளியில் ஊடகத்தின் வகிபாகம் கனதியான நிலையை பெறுகிறது.  ஜனநாயக இருப்பில் ஊடகம் பெறும் முக்கியத்துவத்தினாலேயே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் ஊடகம் சிறப்பிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க முற்படும்  இலங்கை அரசியல் பரப்பில் பத்திரிகை ஊடகங்களின் சுதந்திரம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது என்பது துயரமான பதிவாகவே காணப்படுகிறது. இந்நிலையிலேயே இக்கட்டுரை ஊடக சுதந்திரம் பற்றிய உரையாடல் காலப்பகுதியில், இலங்கை அரசியலில் ஊடக சுதந்திரத்துக்கு காணப்படும் அச்சுறுத்தலை தேடுவதாக இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினத்தின் மையக்ககருத்தாக 'ஒரு பொது நன்மையாக தகவல்' ( Information as a Public God)   என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தகவல்களை ஒரு பொது நன்மையாக மதிப்பிடுவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான அழைப்பாகவும், பத்திரிகையை வலுப்படுத்த உள்ளடக்கத்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் வரவேற்பு ஆகியவற்றில் என்ன செய்ய முடியும் என்பதை ஆ...

சீனாவின் காலனியாகிறதா இலங்கை? -ஜ.வி.மகாசேனன்-

Image
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய்கையில், இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியா  தவிர்க்க முடியாத நிலையை பெற்று வந்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக பரிணமிக்கையில் ஆரம்பம் முதல் முடிபு வரை இந்தியா கொண்டிருந்த வகிபாகம் ஆழமானது. எனிலும் சமீபத்திய 2009இற்கு பின்னரான இலங்கை பற்றிய அரசியலை ஆராயுமிடத்து தெற்காசிய பிராந்திய அரசாகிய இந்தியாவை ஓரங்கட்டி சீனா தவிர்க்க முடியாத நிலையை பெற்றுவருகிறது. கடந்த ஏப்ரல்-28 அன்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் செய்திருந்த போது, சமூகவலைத்தளங்களில் 'சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தனது மாநிலத்தின் பாதுகாப்பு விடயங்களை மேற்பார்வை பார்க்க வருகை தந்தார்' என கேலியான பதிவுகள் அதிகம் காணப்பட்டது. எனிலும் இலங்கையின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அவதானிக்கையில் இதனை நகைச்சுவை பதிவாக கடந்து விட முடியாது. இலங்கை சீனாவின் காலனியாக மாறுகிறதா? என்பதே இலங்கை அரசியல் தரப்புகளிடையே இன்றைய காரசாரமான விவாதமாகவும் காணப்படுகிறது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் இலங்கை சீனாவின் காலனியாக மாறுகின்றது என்பதற்கு சான்றாக முன்வைக்...

அரசியல் தலைமைகளின் தவறால்; இந்தியாவில் கோர தாண்டவமாடும் கொரோனா! -ஐ.வி.மகாசேனன்-

Image
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சீனா, அமெரிக்க மற்றும்   ஐரோப்பிய தேசங்களில் உயிர்  வேட்டையை ஆரம்பித்த கொரோனா மெல்ல மெல்ல ஆசிய, ஆபிரிக்காவென முழு நாடுகளையும் வியாபித்தது. 2020ஆம் ஆண்டின் பெருவாரியான காலம் முழு உலகத்தையும் முடக்கியது. உலகம் கொரோனாவோடு வாழப்பழக தயாராகியது. தடுப்பூசி தயாரிப்புக்களையும் பல நாடுகள் மேற்கொண்டது. மறுமுனையில் கொரோனா வைரஸிம்  தன்னுள் பரிணமித்துள்ளது.  இரண்டாம் கட்டம் உலகை முடக்க தயாராகி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பொது முடக்க அறிவித்தல்கள் விடப்பட்டுள்ளது. இம்முறை ஆசியாவில் இந்தியாவில் கொரோனாவின் தாண்டவம் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் இழப்போடு வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆஹ்சிசன் தட்டுப்பாடுகளாலும் இந்தியா திணறி வருகிறது. உலகளவில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பல்தேசிய நிறுவன தலைவர்களும் இந்தியாவின் துயர் நீங்க பிரார்த்தனை செய்தி விட்டுள்ளதுடன், உதவி திட்டங்களையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் இவ்சொல்லேணா துயர நிலைமையில் இந்திய அரசியல் தலைமையின் நடவடிக்கைகளை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்...

அரசியல்மயமாக்கத்திலிருந்து மீட்சிபெறுமா தொழிலாளர் சமூகம்? -ஐ.வி.மகாசேனன்-.

Image
இலங்கையில் தொழிலாளர் தினம் பற்றிய உரையாடல்கள் சமகாலத்தில் அரசியல்வாதிகளின் அரசியல் நலன்சார்ந்த வார்த்தைகளாகவே அதிகம் உரையாடப்படுகின்றது. தொழிலாளரை அவர்களது உழைப்பை கொண்டாடும்  தினமே தொழிலாளர் தினம் என்பதனையே மறந்து தான் தொழிலாளர் தினத்தை பல அரசியல்வாதிகளும் பார்க்கிறார்கள். தொழிலாளர் தின பேரணிகளும் அரசியல் கட்சிகளின் பலங்களை நிரூபிக்கும் களங்களாகவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதனையே அண்மைக்கால தொழிலாளர் தின பேரணிகளின் செய்திகளில் தெளிவாக அவதானிக்க முடிகிறது. தொழிலாளர் தின பேரணிகளை நடாத்துவதில் முட்டி மோதி கொள்ளும் அரசியல் கட்சிகள் தொழிலாளர் தின வரலாற்று கடமையினை நிறைவேற்ற எத்தகு செயற்பாட்டு வரைபுகளை கொண்டுள்ளார்கள்? கோவிட்-19 தொற்று காலத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எத்தகு தீர்வை அடையாளப்படுத்தினார்கள்? என்பதெல்லாம் விமர்சனமான பார்வையாகவே காணப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு கட்டுரையாக உருவாக்கப்படும் இக்கட்டுரை தொழிலாளர் தின வரலாற்றையே முழுமையாய் விளக்காதுஇ தொழிலாளர் தினத்திற்கான சுருக்கமான வரலாற்று பின்னணியை தொட்டுக்கொண்டு, சமக...