Posts

Showing posts from January, 2022

சந்திரிகா-சிராணி கூட்டின் பொது எதிரணி உருவாக்கம் சாத்தியமாகுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கை அரசியலில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான உரையாடல்களே முதன்மையாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களிடையே அரசாங்கம் தொடர்பில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் ஆளும் ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியிடையே பிளவுகள்சார் உரையாடல்கள் அதிகரித்து வருகின்றது. அவ்வாறே எதிரணி கூட்டணிக்குள்ளும் தலைமைத்துவ போட்டிகள் நீடிக்கிறது. இந்நிலையிலேயே தென்னிலங்கை சிவில் சமூக தரப்பினரிடையே புதியதொரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி புதிய கூட்டணிக்கான உரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். புதிய கூட்டணிக்கான பொது வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அடையாளப்படுத்துவதாக செய்திகள் முதன்மைப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் சந்திரிக்கா-சிராணி-தென்னிலங்கை சிவில் சமூக கூட்டு இணைந்து அடையாளப்படுத்தும் புதிய கூட்டணியின் வாய்ப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி அதுசார்ந்து மக்களிடம் அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையை சாதகமாக பயன்படுத்தி கொள்ள, எதிரணியிடையே மும்மரமா...

ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனி ரஷ்சியா பக்கம் சாருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியல் ரஷ்சிய-உக்ரைன் நெருக்கடியிலேயே முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ரஷ்சியா கிழக்கு ஐரோப்பாவில் மீள தன் பலத்தை கட்டியெழுப்பும் எண்ணத்துக்கான முன்முயற்சியாகவே உக்ரைன் விவகாரம்  அவதானிக்கப்படுகிறது.  இந்நிலையில் ரஷ்சியாவின் கிழக்கு ஐரோப்பா மீதான கரிசணையை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா,  ரஷ்சியாவிற்கு எதிராக ஐரோப்பிய அணிதிரட்டும் களச்செயற்பாடுகளில் இறங்கி உள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பலமான சக்தியாக உள்ள ஜேர்மனி ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடுகளுக்கு உடன்படாத போக்கு காணப்படுகிறது. இக்கட்டுரை ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தில் ஜேர்மனியின் அரசியல் நிலைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்சியா-உக்ரைன் பதட்டத்தில் ஜேர்மனியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தேடல்களுக்கு ஆரம்பப்புள்ளியாக ஜேர்மன் கடற்படைத் தளபதியின் கருத்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி-21(2022) அன்று இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜேர்மனிய கடற்படைத் தளபதி கே-அச்சிம் ஷொன்பாக், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான மனோகர் பாரி...

பொருளாதார நெருக்கடி பிரச்சாரத்திற்குள் புதைந்துள்ள இலங்கை அரசாங்கத்தின் அரசியல்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கொள்கைகளற்று செயற்படுகின்ற போதிலும் வருடாவருடம் இடம்பெறும் அரசாங்க கொள்கை விளக்க உரைகள் தொடர்பில் தமிழரசியல் தரப்பு ஒருவகை பிரம்மையை ஏற்படுத்துவதுடன் தமிழ் மக்களும் அதிக எதிர்பார்ப்புகளை திரட்டி காத்திருப்பாது இயல்பாகி உள்ளது. இம்முறை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயம் உரையாடப்படும் என்ற எதிர்பார்க்கை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தளத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளிடையே ஒரு மாதத்திற்கு மேலே இடம்பெற்ற உரையாடல்கள் மற்றும் அதுதழுவி இந்தியா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மறுமுனையில் இந்தியா அரசாங்கம் இலங்கையின் கடன்சுமையை குறைக்கும் வகையில் உதவி வழங்க உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் செய்தி வெளியிட்டிருந்தார். இதனடிப்படையில், இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உரை...

சீனா-ரஷ்சிய விரிசலைத்தூண்டிவிடும் மேற்குலகத்தின் உபாயங்கள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கோவிட்-19இற்கு பின்னரான நிலைமாறுகால உலக ஒழுங்கை தமதாக்கி உலக அதிகாரத்தை பலப்படுத்தி கொள்வதில் வல்லாதிக்க அரசுகள் கடும்பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.  பிராந்தியரீதியில் அதிகார போட்டிகள் உக்கிரம் பெற்று வருகிறது. குறிப்பாக மத்திய ஆசியா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்சியாவின் காலூன்றலுக்கான எத்தனங்களே 2021இன் இறுதியிலிருந்து சர்வதேச அரசியல் பரப்பை நிரவி உள்ளது. எனினும் மென்அதிகாரத்தினூடாக உலக அதிகார போட்டியில் முன்னிலையிலுள்ள சீனாவின் செயற்பாடுகளையும் கவனிக்காது செல்ல இயலாது. சீனாவின் இரும்புத்திரை அரசியலுக்கு பின்னாலான நகர்வுகளை நுணுக்கமாக கவனிக்க தவறியதன் விளைவே அதன் அபரிவித சடுதியான வெளித்தோன்றல் வளர்ச்சியாகும். இந்நிலையில் இக்கட்டுரை சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மைபெறும் மத்திய ஆசியாவை மையப்படுத்தி இடம்பெறும் அமெரிக்க-ரஷ்சிய முரண்பாட்டில் சீனாவின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆழமான அரசியல் கூட்டாண்மை மூலம் சீனாவும் ரஷ்சியாவும் சமீபத்திய ஆண்டுகளில் நெருக்கமாக வளர்ந்து வருகின்றது. உலக அதிகாரத்திற்கான போட்டியில் ரஷ்சியா-சீனா கூட்டாண்மையும் அமெரிக்காவிற்கு ...

ரஷ்சியா-நேட்டோ மோதலும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஏற்பட்டுவரும் மாற்றமும்! -சேனன்-

Image
2021ஆம் ஆண்டின் இறுதியில் போருக்கான முன்முனைப்புடன் தொடங்கி 2022ஆம் ஆண்டிற்கு கடத்தப்பட்ட போருக்கான எத்தனங்களில் சர்வதேச அரசியலில் முக்கியத்துவப்படுவது ரஷ்சியா-உக்ரைன் விவகாரமாகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி யுரேசியா பகுதியில் நேட்டோவின் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில் வரைபு ஒப்பந்தத்தையும் வெளியிட்டிருந்தார். அதனை முன்னிறுத்தி புடின், 'ரஷ்சியா உக்ரைன் போரை விரும்பவில்லை, ஆனால் உடனடி உத்தரவாதம் தேவை' என்று வலியுறுத்தி இருந்தார். இவ்ஒப்பந்த வரைபு மற்றும் ரஷ்சிய-உக்ரைன் விவகாரம் தொடர்பிலே ஆராய ஜனவரி(2022) முதல் வாரத்தில் நேட்டோ மற்றும் ரஷ்சிய இராஜதந்திரிகளிடையே சந்திப்பு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்சியாவிற்கும் 30 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணிக்கும் இடையே நான்கு மணிநேர வெளிப்படையான மற்றும் தீவிரமான விவாதம்  நடைபெற்ற போதிலும், ரஷ்சியா இராஜதந்திரத்தையா அல்லது போரையா தேர்ந்தெடுக்க உள்ளது என்பது தொடர்பில் பதிலளிக்கப்படவில்லை. முடிவற்ற ரஷ்சிய-நேட்டோ மோதல் முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகு...

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உள்முரண்பாடு தேசிய அரசாங்க உருவாக்கத்திற்கு வழிவகுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலின் சமீபத்திய போக்கு சமகால அரசாங்கம் குழப்பங்களின் கூடாரமாக பரிணமித்துள்ளது. பொருட்களின் விலைகளின் உயர்வும், தட்டுப்பாடும் மக்களுக்கு நெருக்கீட்டையும், தரமாக வாழ இயலாத நாடு இலங்கை என்ற எண்ணப்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இதற்கு சமாந்தரமாக இலங்கை அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் அரசாங்கத்தின் ஸ்திர தன்மை தொடர்பிலும் கொள்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை உருவாக்கி வருகிறது. நாளடைவில் அதிகரித்துக்கொண்டே செல்லும் அரசாங்கத்தின் உள்ளக முரண்பாட்டின் உச்சக்கட்டமாகவே கல்வி இராஜாங்க அமைச்சராக காணப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப்பதவி நீக்கப்பட்டுள்ளது. இதனை ஆளுங்கட்சிக்குள் உள்ள ஏனைய சிறுகட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தலைமைகள் தமது முடிவில் உறுதியாக உள்ளனர். இதனை மையப்படுத்தி ஆளுங்கட்சியில் காணப்படும் சிறுகட்சிகள் வெளியேறி புதிய கூட்டுக்குள் பரணமிக்க வாய்ப்புள்ளதா என்ற தேடல் இலங்கை அரசியல் ஆய்வு பரப்பில் முதன்மையான விடயமாக காணப்படுகிறது.  இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஏற்படுத்...

விளாடிமிர் புட்டின் தலைமையில் ரஷ்சியா சோவியத் யூனியனாக மீளமைக்கப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட 30வது ஆண்டு நிறைவை அண்டிய காலப்பகுதியில், ரஷ்சியா உக்ரைனுடனான தனது எல்லையில் துருப்புக்களை குவித்து, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அதன் படைகளை சோவியத் குடியரசுகளுக்குள் விரிவுபடுத்துவதை தடுக்கும் வகையில் வரைவு ஒப்பந்தங்களை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாய், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மாஸ்கோவுடன் ஜெனீவாவில் ஜனவரி-9(2022) முதல் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு முதல் வாரத்தில் கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள வெகுஜன எதிர்ப்பினை கட்டுப்படுத்த கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவின் வேண்டுகோளின் பேரில்  ரஷ்சியா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு ( CSTO  ) இராணுவ ரீதியாக தலையிட்டது. இக்கட்டுரை மத்திய ஆசியாக்குடியரசுகளில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளுக்கு பின்னாலுள்ள ரஷ்சியா-அமெரிக்க அதிகார மோதுகையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மாதங்களில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ரஷ்சிய துருப்புக்கள் உக்ரேனிய எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் சமீபத்திய நாட்கள...

சீனா வெளியுறவு அமைச்சரின் இந்துசமுத்திரத்திற்கான சுற்றுப்பயணம் பாரம்பரியத்தை உருவாக்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய அரசியல் போட்டிகளே இன்று சர்வதேச அரசியலின் முதன்மை செய்திகளாக உள்ளன. சீனாவின் இந்து சமுத்திரம் மீதான அதீத ஈடுபாடு மற்றும் அதற்கு எதிராக அமெரிக்க-இந்திய-மேற்கு கூட்டுகளின் மூலோபாய தந்திரோபாய நடவடிக்கைகளென இந்து சமுத்திரம் தொடர்ச்சியாக கொதிநிலையிலேயே காணப்படுகிறது. இக்கொதிநிலையை அதிகரிக்கும் வகையிலேயே 2022ஆம் ஆண்டு தொடக்கத்துக்கான சீன வெளியுறவு அமைச்சரின் இந்து சமுத்திரத்திலுள்ள தீவு நாடுகளை பிரதானப்படுத்திய பயணமும் அமைகிறது. இக்கட்டுரை சீன வெளியுறவு அமைச்சரின் இந்து சமுத்திர நாடுகளை மையப்படுத்திய அரசியல் பயணத்தின் அரசியல் தாக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள ஐந்து கரையோர அரசுகளுக்கு ஜனவரி(2022) முதல் வாரம் விஜயம் செய்து புத்தாண்டைத் தொடங்கி உள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் ஜனவரி 4 முதல் 7 வரை எரித்திரியா, கென்யா மற்றும் கொமோரோஸ் ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றிருந்தார். தொடர்ச்சியாக, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளார். சீனா ஆபிரிக்க நாடுகளை கவரத் தொட...

உலக வல்லரசுகளின் போட்டி அரசியலுக்குள் எதியோப்பிய உள்ளக மோதல் மாறுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலானது, யதார்த்தவாதம் சார்ந்த கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. அதன் நவீன வடிவத்தை அரசறிவியலாளர் கெனத் வொய்ஸ் வழங்கியுள்ளார். அவர் அரசியலை எழுமாத்திரமாகவும் வெறும் மனித உணர்வுகளுக்குள் பார்க்காமல் இராணுவ மற்றும் சமூக கட்டமைப்பு யதார்த்தத்தினூடாக பார்க்க வேண்டுமென குறிப்பிட்டார். இன்று பெரும்பாலான தேசிய அரசுகளிலும் அதன் இணைப்பாக சர்வதேச அரசியலையும் கட்டமைப்பு யதார்த்தவாத சிந்தனைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக கொரோனா அரசியல் நகர்த்தும் உலக ஒழுங்குக்கான மாற்றத்துக்கான நிலைமாறுகால பகுதியில் உலக அரசியல் தேசிய அரசுகளை நிரப்பியுள்ள போர்களையே அதிகமாக உரையாடுகிறது. இக்கட்டுரையும் எதியோப்பியாவில் 2021ஆம் ஆண்டு முழுமையாக தொடர்ந்த உள்நாட்டுப்போரின் 2022ஆம் ஆண்டுக்கான போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர்-04, 2020அன்று, எதியோப்பிய இராணுவத்தின் வடக்குக் கட்டளையின் இராணுவத் தளங்களை டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி(TPLF) கிளர்ச்சிப்படை தாக்கிய பின்னர், அதற்கு எதிராக இராணுவ பதிலடிக்கு எதியோப்பிய பிரதமர் அபி அஹ்மட் உத்தரவிட்டதை தொடர்ந்து உள்ளக மோதல் தொடங்கியது. தற்போதைய அபி அஹ்மட் தலைமைய...

டெஸ்மாண்ட் டுட்டுவின் மறப்போம் மன்னிப்போம் சித்தாந்தம் இலங்கைக்கு பொருந்தமானதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக அமைதிக்கான குரலாக ஓங்கி ஒலித்த தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு அடக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனங்களுக்கு பேரிழப்பேயாகும். இனிவரும் காலங்களில் டெஸ்மாண்ட் டுட்டுவின் குரல் உரிமைக்காக போராடும் இனங்களின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஒலிக்காவிடினும், அவரது நல்லிணக்க பயணம் எதிர்கால தலைமுறையினருக்கு படிப்பினையாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இருபத்தியோராம் நூற்றாண்டில் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் வெற்றிகரமாக செயற்பாட்டுக்கு தென்னாபிரிக்கா மாதிரி முன் உதாரணமாக சுட்டிக்காட்டப்படுவதற்கு குறித்த ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட டெஸ்மாண்ட் டுட்டுவின் பங்களிப்பு கனதியானது. இக்கட்டுரை நல்லிணக்க பொறிமுறையின் அடையாளமாக டெஸ்மாண்ட் டுட்டு திகழுவதற்கான காரணத்தை இலங்கைப்பரப்பில் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் வலிந்து உரையாடப்படும் விடயமாக நிலைமாறுகாலநீதியும் நல்லிணக்க பொறிமுறையும் காணப்படுகிறது. நல்லிணக்க பொறிமுறையின் உரையாடலோடு அதன் அடையாளமாக திகழும் டெஸ்மாண்ட் டுட்டுவின் உரைய...

அமெரிக்க-சீன மென் அதிகாரபோக்கும் தேசிய அரசுகளில் இராணுவ அணுகுமுறையும்? -ஐ.வி.மகாசேனன்-

Image
கோவிட்-19 பெருந்தொற்று உலகை சூழ்ந்து முழுமையாக ஈராண்டை கடந்துள்ளது.  2020ஆம் ஆண்டு நிலையான முடிவுகளை வெளிப்படுத்தாத போதிலும், 2021இன் அரசியல்நிகழ்வுகள் கோவிட்-19க்கு பின்னரான உலக ஒழுங்கின் செல்நெறியை அடையாளப்படுத்துவதாக அரசறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக அதிகாரத்திற்காக போட்டியிடும் அரசுகள் மென் அதிகாரத்திற்குள்(Soft Power) நகர முற்படுகையில் தேசிய அரசுகள் சுயாதீனமாக இராணுவ அதிகாரத்திற்குள்(Military Power) நகரும் போக்குகள் அவதானிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை 2021ஆம் ஆண்டின் தொகுப்பாக இக்கால சர்வதேச அரசியல் போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  கோவிட்-19 பெருந்தொற்று உலக நாடுகளிடையே பாரபட்சமின்றி இழப்புகளை அதிகரித்து கொண்டே செல்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளாயினும் சரி, வளரும் நாடுகளாயினும் சரி, வளர்ச்சி குன்றிய நாடுகளாயினும் சரி கொரோனா வைரஸினாலும் அதன் உருமாற்று திரிபுகளாலும் தொடர்ச்சியாக அழிவுகளை சமச்சீராக எதிர்கொண்டு வருகிறன. எனினும் பாதிப்பின் தாக்கம் வளர்ச்சியடைந்த நாடுகளை விட ஏனைய நாடுகளுக்கு அதிக சுமையை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாத...