Posts

Showing posts from 2020

தடுப்பு மருந்தை அரசியலாக்குவது கோவிட் தொற்றை அதிகரிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
முழுமையான உலகிலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என அனைத்து துறைகளிலுமே 2020ஆம் ஆண்டு முழுமையாக தவிர்க்க முடியாத சொல்லாக கொரோனா வைரஸ் வியாபித்திருந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிறைவடைகின்ற சூழலிலும் கொரோனா வைரஸின் தாக்கம் முற்றுப்பெறாத தொடராகவே நீள்கிறது. உலக நாடுகள் யாவற்றிலுமே இரண்டாம், மூன்றாம் அலைகள் என கொரோனா இடைவிடாது அழிவுகளை ஏற்படுத்தி கொண்டே உள்ளது. மறுபுறம் உலக நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் கொரோனா வைஸால் ஏற்படுத்தப்படும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் பரிசோதனைகளிலும் மும்மரமாக உள்ளனர். ஓராண்டு காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக தடுப்பு மருந்தை பூரண பரிசோதனை முறைகளினை பின்பற்றி கண்டுபிடிக்க முடியுமா என்பது தேடலாக காணப்படுகின்ற போதிலும் உலகின் பல நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். எனிலும் தடுப்பு மருந்து பிரயோகத்திலும் சர்வதேச அரசியல் போட்டி கடுமையாக தாக்கத்தை செலுத்தி வருகின்றது. அதனடிப்படையிலேயே இக்கட்டுரையும் கோவிட்-19 தடுப்பு மருந்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்வதேச அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 த...

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் மீதான ஆதிக்கம்; ஓபாமா காலத்திலேயே வலுவிழக்கப்பட்டதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச செய்திகளில் முதன்மையாக உலாவிய பெயரொன்று மீள சமீபத்தில் பேசுபொருளாகி வருகிறது. அமெரிக்காவின் கறுப்பின தங்கம் பராக் ஒபாமா எனும் முன்னாள் வல்லாதிக்க அதிபதியின் பெயரே மீண்டும் சமீபத்திய சர்வதேச செய்திகளில் அவரது எழுத்துக்களால் பரபரப்பாக பரபரப்பாக பேசப்படுகிறது. பல அறியப்படாத சுவாரஸ்யமான அரசியல் நடப்புக்களை அரசியல் தலைமைகளின் சுயசரிதை நூல்களூடாக அறியலாம் என்ற எதிர்பார்க்கையுடன் அரசியல் தலைமைகளின் நூல்களுக்கு என்றும் தனி ஆவல் வாசகர்களிடையே காணப்படும். அதிலும் முன்னாள் உலக வல்லாதிக்க அதிபதியின் நினைவுக்குறிப்பு சார் நூல் என்கையில் பல சுவாரஸ்ய அரசியல் நினைவுகள் சர்வதேச வெளியில் புதிதாக உலா வரும் என்ற எதிர்பார்க்கை சர்வதேச அரசியல் வாசகர்களிடையே அதீதமாக காணப்பட்டது. அதற்கு தீனி போடும் வகையிலேயே பராக் ஒபாமாவின் நினைவு குறிப்பு நூலும் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பராக் ஒபாமாவின் நினைவுக்குறிப்பையும், அது வெளிப்படுத்தும் அமெரிக்க அரிசியலை உள்பார்வையாக தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைமையை 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்...

கிர்கிஸ்தான் அரசியல் குழப்பத்தால் ரஷ்சியாவின் உறவு சீர்குலையுமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
மத்திய ஆசியா என்பது சமீபத்திய சர்வதேச அரசியலில் போராட்ட களமாகவே உருவகப்படுத்தப்பட்டு வருகிறது. முடிவில்லா போர்க்களமாக மாறியுள்ளது ஆர்மீனியா எதிர் அஜர்பைஜான் மோதல். மறுபக்கம் பெலாரஸ், மொன்ரிநீக்ரோ, வரிசையில் தற்போது கிர்கிஸ்தானிலும் நடைபெற்று முடிந்த தேர்தலை மையப்படுத்தி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளது. எனிலும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளின் போராட்ட பின்னனியிலிருந்து கிர்கிஸ்தான் போராட்ட பின்னனி வேறுபடுகிறது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டம் ஜனநாயகத்துக்கான மக்கள் புரட்சியாகவே சர்வதேச அரசறிவியலாளர்களால் நோக்கப்படுகிறது. அதனடிப்படையில், இக்கட்டுரையும் கிர்கிஸ்தான் போராட்ட பின்னனிகள் மற்றும் நிலைமைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டத்தை தேடுவதாயின் அதன் புவியியல் அமைவிடமும் அவசியமாகிறது. கிர்கிஸ்தான் நாடு வடக்கே கஜகஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், மற்றும் தெற்கிலும் கிழக்கிலும் தஜிகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையாக உள்ளது. 1876ஆம் ஆண்டில், இது ரஷ்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறியது, ரஷ்சிய புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் கிர்கிஸ் சோவியத் சோசலிச குடிய...

சீனா சார்பு நிலைக்குள் 'சூகி'யின் தலைமையில் மியான்மர் நகருமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையை ஒத்த அரசியல் சூழமவை கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடாகிய மியான்மர் நவம்பர் முற்பகுதியில் தனது மூன்றாவது பொதுத் தேர்தலை ஆறு தசாப்தங்களில் நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில் நடாத்தி முடித்துள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும், தற்போது தென்கிழக்கு ஆசிய அரசு அதன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலை நடாத்தி உள்ளது. இது சர்வதேச அரசியல் நிபுணர்களால் உற்றுநோக்கப்பட்டதொரு பொதுத்தேர்தலாக அமைகிறது. ஏனெனில் நீண்ட கால இராணுவ ஆட்சிக்கு பின்னராக 2015ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை மீளத்திருப்பிய ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் பன்மடங்கு சவால்களை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ள மியான்மரின் எதிர்கால அரசியல் போக்கினை கடந்த கால மியன்மரின் அரசியல் அனுபவத்திலிருந்து தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ஆம் திகதி மியான்மர் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் 7 மாநில சட்டப்பேரவைகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 92 அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன பிரச்சாரங்களைச் சேர்ந்த 6,900க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 1,171 இடங்களில் தேர...

அஜர்பைஜான், ஆர்மீனியா விவகாரம்; நகர்னோ - கரபாக் மையப்படுத்தி மூளும் பிராந்திய மோதல்? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் போர் என்பது தவிர்க்க முடியாத தொடர்கதையாகவே நீள்கிறது. ஒருபோர்ப்பதட்டம் தணியும் சூழலில் ஏதோவொரு மூளையில் இன்னொரு போர்ப்பதட்டம் ஏற்படவே செய்கிறது. அது சார்ந்து உலகமும் இருதுருவமாவதும் சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத பதிவாகிறது. சமகாலத்தில் சர்வதேச அரசியலில்உன்னிப்பாக அவதானிக்கப்படும் போராக அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையில் மூண்டுள்ள போரே காணப்படுகிறது. அதனடிப்படையில் இவ் சர்வதேச அரசியல்கட்டுரையும் அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையிலான போரை மற்றும் போரின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜானினதும், ஆர்மேனியாவினதும் எல்லையில் காணப்படும் ‘நகர்னோ கரபாக்’ என்ற பிரதேச உரிமம் தொடர்பான விவகாரமே, அஜர்பைஜானிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையில் நீட்ச்சியான போரியல் வரலாற்றை உருவாக்கியுள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பிளவுபடுவதற்கு முன்னர், இரண்டு நாடுகளும் அதன் அங்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியத்தின் இருப்பின் கீழேயே இவ்நாடுகளிடையே நகர்னோ கரபாக்-ஐ மையப்படுத்திய முரண்பாடு ஆரம்பிக்கப்பட்டு விட்டது.  சோவியத் ஒன்றியத்தின் கீழ், ஜோ...

கருத்துக்கணிப்புக்களை கடந்து ட்ரம்ப் இரண்டாவது தடவை அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா இடைவிடாது உலகை உலுக்கி வருகின்ற போதிலும் கடந்த ஒரு மாதங்களாய் சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மையான இடத்தை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலே கைப்பற்றியது. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ( Donald Trump ) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் ( Joe Biden ) களமிறங்கியிருந்தார்கள். கடந்த நம்பர்-03ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது.  வழமைக்கு மாறாக இம்முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெரும் சர்ச்சைகளை சர்வதேச செய்திகளில் உலாவ விட்டுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சர்ச்சைகளின் தார்ப்பரியங்களையும், தேர்தலின் ஆரம்ப முடிவுகள் வெளிப்படுத்தும் எதிர்பார்க்கைகளையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவுகை அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு தபால்மூலமான வாக்களிப்புக்கள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர்-03 வாக்களிப்பு தினத்திற்கு முன்னரும்  9.5 மில்லியன் அமெரி...

கொரோனா பரவலை தடுக்க மக்களே விழிப்பாக இருக்க வேண்டும். -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா பதற்றம் உலகை கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உலுக்கும் சமகாலப்பகுதியில் கொரோனாவிலிருந்து மழுமையாக விடுதலை பெற்ற நாடாக 'Corona Free' பலகையை மாட்டி தெம்பா இருந்த இலங்கையை செப்டெம்பர்-04 முதல் கொரோனா வைரஸ் மீளவும் பதட்டத்துக்குள் தள்ளியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை இலங்கையில் காணப்படும் கொரோனா வைரஸ் சூழல் மற்றும் அதுசார் மக்கள் விழிப்புணர்வு பற்றி தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா அபாயம் பற்றிய உரையாடல் மற்றும் அதுசார் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே உயரளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக மார்ச்-13ஆம் திகதி இலங்கையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச்-20 இலிருந்து கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதற்காய் சமூக இடைவெளியை ஏற்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் போடப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் பேண அது பெரிதும் உதவியது. 16 ஏப்ரல் 2020 நிலவரப்படி, வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய 16வது அதிக...

ஐ.நா. 75வது பொதுச்சபை விவாதங்கள்; இருதுருவ உலக ஒழுங்குக்கு வித்திடுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டதன் இலக்கு 75 ஆண்டுகளாகியும் அடையப்படவில்லை என்பதையே, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட காணொளி பேச்சு தெளிவாக புலப்படுத்துகிறது. ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆதங்க உரையும் 75ஆம் ஆண்டுக்கான சிறப்புரையாக அமையவில்லை என்ற விமர்சனமே மேலோங்கி காணப்படுகிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை ஐ.நா.வின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெற்ற அரச தலைவர்களின் உரையை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் அழிவு முதலாம் உலகப்போரின் முடிவில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கத்தின் தோல்வியை வெளிப்படுத்தி நின்றது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் பேரழிவின் பின்னர் மீள ஓர் போர் மூண்டு விடக்கூடாது என்பதை உலகம் இலக்காக்கியது. அவ்இலக்கை நிறைவேற்றுவதற்காக கட்டமைக்கப்பட்ட நிறுவனமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமாகும்.   1945ஆம் ஆண்டில், 50 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைப்பு தொடர்பான மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை வரைந்தனர். இந்த சாசனம் 26 ஜூன் 194...

அமெரிக்கா மற்றும் சீனா; வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த போரை நாடுகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா வைரஸ் உலக ஒழுங்கில் ஓர் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுதலிக்க முடியாத நிதர்சனமாகும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மாறுதலின் பின்னரான புதிய உலக ஒழுங்கில் தம்மை நிலைநிறுத்துவதற்கான மோதுகையையே உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. செப்டெம்பர் இறுதியில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் அரச தலைவர்களின் உரைகளும் அதனையே உறுதி செய்கின்றன. மாறும் உலக ஒழுங்கில் தம் மேலான நிலையை முன்னிறுத்த வல்லாதிக்க போட்டி அரசுகள் எடுத்துள்ள ஆயுதமும் போரே ஆகும். அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் போரினூடாக தம் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முற்படும் அரசுகளின் செயற்பாடுகளை தேடுவதாக உருவிக்கப்பட்டுள்ளது. சமகாலம் கொரோனா வைரஸை மையப்படுத்தி கட்டமைக்கப்படவுள்ள உலக ஒழுங்கு பற்றியே அதிகம் உரையாடுகின்றது என்பதற்கு சான்றுபயிர்க்கும் விதத்திலேயே உலக தலைவர்கள் யாவருமே ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கொரொனா வைரஸை மையப்படுத்தியும் அதுசார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரசியல் சூழல் சார்ந்துமே தமது கருத்தாடல்களை பதிவு செய்துள்ளனர்.  குறிப்பாக நேரடியாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராகவும்,...

ஜெயவர்த்தனாவின் நிறைவேற்றதிகாரத்தை மீண்டும் அரங்கேற்றும் இருபதாவது திருத்தம் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் 20வது சீர்திருத்தம் என்பது நீண்டதொரு விவாதத்தை பல்கோணத்தில் உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அப்பால் ஆளுந்தரப்பினுள்ளேயே முரண்நகையான கருத்துக்களே 20வது சீர்திருத்தம் தொடர்பில் பொதுவெளியில் அலசப்படுகிறது. 20வது சீர்திருத்தத்தை எதிர்ப்போர் அதன் வடிவமாக, அது இலங்கையில் சர்வதிகாரத்தை கட்டமைக்கப்போவதாகவும், ஜனநாயகத்தின் புதைகுழியாகவும் சித்தரிக்கிறார்கள். இந்நிலையில்  இக்கட்டுரையானது 20வது சீர்திருத்தத்தின் வடிவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 20வது சீர்திருத்தம் பிரதானமாக கடந்த மைத்திரி – ரணில் தேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 19வது சீர்திருத்தத்தை நீக்குவதையே ஆழமான கருத்தியலாக கொண்டுள்ளது. இந்நிலையில் 19வது சீர்திருத்தத்திற்கு பிரச்சாரமாக வழங்கப்பட்ட ஜனநாயக மீட்பு என்ற வடிவமானது, 19வது சீர்திருத்தத்தை நீக்க 20வது சீர்திருத்தம் வடிவமைப்பதால் 20வது சீர்திருத்திற்கான வடிவத்தை பிரச்சாரம் செய்வதில் ஆழமாக செல்வாக்கு செலுத்துகிறது. அதனடிப்படையில் முதலில் 19வது சீர்திருத்தத்தை ஆதரித்தோரால் 19வது சீர்திருத்தம் ஜனநாயக மீட்பு என வடிவம் கொடுத்து செய்யப்பட்ட ...

ஐ.நா.வில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐ.நா. மன்றிலும் கொரோனாவிற்கு பின்னர் அமைய உள்ள புதிய உலக ஒழுங்கின் மாதிரியே உலக தலைவர்களின் பேச்சுக்களில் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் முன்னணியில் வந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரவுகையை மையப்படுத்தி சீனாவை குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் இக்கட்டுரையானது, 2020க்கான ஐ.நா. மன்றின் பொதுக்கூட்டத்தில் உலக தலைவர்களால் உரையாடப்பட்ட விடயங்களை தொகுப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு உலக தலைவர்களின் பொதுக்கூட்டமானது, பேரழிவு தரும் தொற்றுநோயால் தடுத்து உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட சூழலில், 2020 ஆகஸ்ட்-22 அன்று முன்னோடியில்லாத வகையில் உயர்மட்டக் கூட்டத்திற்கு மின்னணு முறையில் நியூயார்க்கில் கூட்டப்பட்டது. இது உலகின் மோசமான ஜூம் சந்திப்பு எனக் கூறப்படுகிறது. இது "பொது விவாதம்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், ஒரு ஜூம் கூட்டத்தைப் போலன்றி, இதில் எந்த விவாதமும் இருக்கவில்லை. இந்த ஆண்டு நியூயார்க்கில் ...

இஸ்ரேலுடனான மேற்காசிய அமைதி திட்டத்தில் அடுத்தது ஓமானா? -ஐ.வி.மகாசேனன்-

Image
அமெரிக்காவில் கோவிட்-19 பற்றி காரசாரமான உரையாடல் இடம்பெற்றுகொண்டிருக்கும் சமகால பகுதியில், இஸ்ரேலுடன் அரபு நாடுகளை இணைப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் மும்மரமாக உள்ளார். 2020ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் ஆகஸ்ட்-13அன்று இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சமாதான திட்டத்திற்கும், செப்டெம்பர்-15 அன்று இஸ்ரேலுடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் சமாதான ஒப்பந்தத்திற்கும் தரகு வேலையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் இஸ்ரேலுடன் அதிகரிக்கும் அரபு நாடுகளின் உறவை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவினுள் 1948ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளால் உருவாக்கப்ட்டு அங்கீகரிக்கப்பட்ட நாடே இஸ்ரேல் எனப்படும் யூத தேசமாகும். மேற்காசிய அரபு உலகில் ஏற்கனவே காணப்பட்ட பாலஸ்தீனத்தை கூறாக்கி இஸ்ரேலின் உருவாக்கம் அமைந்ததால், இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அதன் பிராந்தியமான அரபு நாடுகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை. குறிப்பாக 1948 மே-14அன்று நள்ளிரவில் பாலஸ்தீனத்திற்கான பிரிட்டிஷ் ஆணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல்...