Posts

Showing posts from May, 2020

தேர்தல் வாக்குகளை கடந்து ஒற்றுமை இன்மை நிலவுமாயின்; வாழ்விடத்தை இழக்க நேரிடும். -மித்ரசகி-

Image
கொரோனா அபத்த காலத்தை சாதமாக பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டுக்குள் இலங்கையை ஒன்றினைப்பதில் மும்மரமாக ஈடுபடுவதனை கொரோனாவிற்கு பின்னரான இலங்கை அரசியல்  சூழல் தெளிவாக காட்டுகின்றது. சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்கலின் முக்கூட்டு ஆதிக்கம் அதீதமாக தமிழர்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கை மையப்படுத்தியே கட்டவிழ்த்து விடப்படுகின்றது. கொரோனா அபத்தத்தினுள் வாழப்பழகுவது என்பது இலங்கையில் தமிழர்களை ஒருங்கே சிங்கள - பௌத்த - இராணுவமயமாக்க முக்கூட்டுக்குள்ளும் வாழப்பழக திணிக்கப்படுகின்றது. கொரோனா பேராபத்தினுள், சிதைக்கப்படும் தமிழர் தாயகம் பற்றிய எச்சரிக்கையினை மற்றும் எதிர்வினையினை ஆற்ற முடியாத சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகின்றது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்பும் இலங்கையின் தமிழ்த் தலைவர்களும் ஒற்றுமைமையை சிதைக்கக்கூடிய திணிப்புகளுக்கு எதிராக பலமான எதிர்ப்பினை காட்டவும் முன்வருவதில்லை. அதனடிப்படையில் குறித் கட்டுரை தேர்தல் வாக்குகளுக்காக தமிழ் தலைமைகள் பிரிந்து செயற்படுவார்களாயின் தமிழர் தாயகத்தில் ஏற்படக்கூடிய தடுக்க முடியாத சிதைவுகளை விபரிப்பதாகவே உ...

தமிழ் சமூகம் வலுவான பொதுக்கட்டமைப்பாக உருவாக வேண்டிய தேவை எழுந்துள்ளது. -ஐ.வி.மகாசேனன்-

Image
மே18 இலங்கை அரசியலில் முக்கியமானதொரு நாளாக 2009இற்கு பிற்பட தோற்றம் பெற்றுள்ளது. மே18 இனை மையப்படுத்தி உரையாடப்படும் உரையாடல்களும் இலங்கை அரசியலில் மாற்றங்ளை ஏற்படுத்த கூடிய வல்லமை பொருந்தியனவாகும். இலங்கையில் மே18 ஐ மையப்படுத்தி இரு உரைகள் வழமையாக நிகழ்வதுண்டு. வடக்கில் தமிழர் தரப்பிலிருந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்தும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டியும் குறித்த உரை மேற்கொள்ளப்படும். அதேவேளை மறுபுறம் இலங்கை அரசாங்கத்தால் போரில் வெற்றியை பெற்று தந்த இராணுவ வீரர்களை நினைவு கூறியும் அவர்களுக்கான சலுகைகளை மையப்படுத்தியும் உரை மேற்கொள்ளப்படும். 2010ஆம் ஆண்டிலிருந்து இது வழக்கமாகி விட்டது. கொரோனா அபத்தம் உலக ஒழுங்கையே மாற்றி வருகையிலும் கூட இலங்கையின் ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனிலும் இம்முறை இலங்கை அரசாங்க தலைவரின் உரையின் உள்ளடக்கங்களும், சர்வதேச ரீதியாய் மே18 நினைவுகூறலில் உரையாடப்பட்ட உரையாடல்களும் தமிழர்களுக்கான வாய்ப்பு ஒன்று இருப்பதை சூட்சகமாக புலப்படுத்துவதாக காணப்படுகின்றது. ஆயினும் வாய்ப்பினை தமிழ் சமூகத்திற்கு திசை திருப்பக்கூடிய பலமான கட்டமைப்பொன்று தமிழ் சமூ...

பிரேசிலின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலும் போல்சனாரோவின் பலவீனமும் -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா தீநுண்மி தயவு தட்சணையின்றி உலகின் சகல கண்டங்களிலும் ஏதோவோர் வகையில் பாரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் சீனாவை மையமாய் கொண்டு ஆசிய கண்டத்தில் அழிவை ஆரம்பித்தது. பின்னர் இத்தாலியை மையமாய் கொண்டு ஐரோப்பா கண்டத்தில் ருத்ர தாண்டவமாடியது. தொடர்ந்து அமெரிக்காவை மையமாய் கொண்டு வடஅமெரிக்காவை சீர்குலைய வைத்தது. தற்போது பிரேசிலை மையப்படுத்தி தென்அமெரிக்காவில் அழிவிற்கான நகர்வை ஆரம்பித்துள்ளது. பிரேசிலின் கொரோனா பரவுகைக்கு பிரதான காரணியாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் தற்போதைய பிரேசில் சனாதிபதியுமான ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ இன் செயற்பாடுகளே காரணம் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை பிரேசிலின் அதிகரிக்கும் கொரோனா பரவுகைக்கு காரணமாகியுள்ள போல்சனாரோ இன் ஆட்சி செயற்பாடுகளை ஆராய்வதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2020 மே 20ஆம் திகதி தரவுகளின் படி உலகின் அதிக கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் அமெரிக்க மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து பிரேசில் மூன்றாம் நிலையில் உள்ளது. அண்மைய தரவுகளில் தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்...

வடக்கே மே18 தடைகளும் தெற்கே வெற்றிவிழா கொண்டாட்டங்களும் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் கொரோனாவை மையப்படுத்தி அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு நீக்கப்பட்ட போதிலும் கொரோனா அபத்தத்தின் வீரியம் இலங்கையில் தளர்வின்றியே காணப்படுகின்றது. 19 மே 2020 வரையில் 569பேர் கோவிட்-19 நோய் குணமாகி வெளியேறிய போதிலும் 442 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மே11ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த இலங்கையின் அனைத்து பிரதேசங்களும் இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டிருந்தது. எனிலும் இலங்கையில் பிரதேசங்களிடையே கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு நடைமுறை வேறுபாடுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. 2020 மே 18 மற்றும் 19ஆம் திகதிகளிலும் அதற்கு அண்மித்த ஒருவார காலப்பகுதிகளிலும் இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையின் செயற்பாடுகள் இலங்கை இரு தேசம் என்பதை கொடிய அபத்த காலத்திலும் உணர்த்துவதாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த கட்டுரை 2020ஆம் ஆண்டு நினைவுகூறப்பட்ட 11ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு மேற்கொள்ளப்பட்ட தடைகளுக்கும், வெற்றிவிழா கொண்டாட்டங்களிற்கும் பின்னுள்ள அரசியல் எதிர்காலத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.  ...

ஐ.நாவின் போர்நிறுத்த அறிவிப்பு உலகப் பாதுகாப்பை உறுதி செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐ.நா சபையின் சர்வதேச போர்நிறுத்த அறிவிப்பும் உலக போக்கும்! உலகில் சகல மக்களும் கொரோனா பீதியில் திளைக்கையில், ஓர் பக்கம் அரசாங்கங்களும் போராட்டக்குழுக்களும் தங்கள் இருப்பை பலப்படுத்துவதற்காக போர் நடவடிக்கைகளை தொடர்ச்சியாய்க் கையாண்டு வருகின்றனர். உளவியல் நிபுணர்கள் பலரும் கொரோனா பரவுகையை விழிப்பதற்காக பயன்படுத்தும் ‘போர்' என்ற சொல்லாடலின் பயன்பாட்டையே எதிர்க்கின்றார்கள். கொரோனாவை போரென விழிப்பது மக்களை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கின்றது என்றும், ‘ஒரு தொற்றுநோய் ஒரு தொற்றுநோய். ஒரு போர் ஒரு போர்’ என்ற கருத்தை ஆழமாக முன்வைக்கின்றனர். சொல்லாடலே பெரும் அபத்தங்களை ஏற்படுத்துகின்ற சூழலில், உலகில் கொரோனா காலத்தில் நிறைந்துள்ள போர்கள் மக்களை அரசாங்கங்களும் போராட்டக்குழுக்களும் உணர்வற்ற ஜடங்களாகவே பாHக்கின்றார்கள் என்ற யதார்த்த பார்வையையே வெளிக்காட்டுகின்றது. அதனடடிப்படையிலேயே குறித்த கட்டுரை கொரோனா காலத்திலும் தொடரும் போர் அவலங்களைத் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுகை உலக நாடுகள் யாவற்றிலும் ஏற்பட்டுள்ள நிலையில், நாடுகளிடையேயும் நாடுகளுக்குள்ளேயும் நடைபெறும் போர்களை நிறு...

பில்கேட்ஸை மையப்படுத்திய சதிக்கோட்பாடும் வைரஸ் சந்தை உருவாக்கங்களும் -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா வைரஸ் தொற்று பரவலானது முதன் முதலில் சீனாவில் அடையாளம் காணப்பட்டு 2020 மே மாதத்துடன் ஐந்து மாதங்கள் ஆகின்ற சூழலிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னால் உள்ள மர்மங்கள் அவிழ்க்க முடியாத முடிச்சாகவே நீள்கின்றது. கொரோனா வைரஸ் என்பது விஞ்ஞானரீதியிலான சொல்லாடல் என்ற அடிப்படையில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் உருவாக்கம் தொடர்பிலே விஞ்ஞானத்துக்கு உட்பட்ட தேடலை மேற்கொள்கின்றனர். எனிலும் கொரோனா வைரஸ் பரவுகை ஏற்படுத்தியுள்ள தாக்கம் அரசியலை குழப்பியுள்ளதால், அரசறிவியலாளர்களது தேடலாகவும் கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுகையால் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதட்டம் உலகப்போருக்கான முன்னாயர்த்தமாகவும், பனிப்போர் சூழலாகவும் அரசறிவியல் கட்டுரையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேவேளை மறுபக்கம் கொரோனா உருவாக்கம் தொடர்பிலே முன்வைக்கப்பட்டுள்ள சதிக்கோட்பாடுகளை ஆய்வு செய்வதிலும் அரசறிவியல் கட்டுரையாளர்கள் மும்மரமாக நிற்கின்றனர். அதனடிப்படையில் இக்கட்டுரை கொரோனா வைரஸ் பரவுகை தொடர்பில் பில்கேட்ஸை மையப்படுத்தி சூழலும் சதிக்கோட்பாட்டை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதற்தர செல்வந்தர...

சர்வதேச அனுபவத்தில் கொரோனாவிற்கான இரண்டாவது அலையிலிருந்து இலங்கையர்கள் தற்பாதுகாத்து கொள்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா அபத்தம் முடிவற்ற வகையில் ஒவ்வொரு நாடுகளா மாறி மாறி இழப்பீடுகள் அதிகரித்து கொண்டு வரும் சூழலில் உலகின் பல நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இழப்பு வீதம் குறைந்து வருகையில் ஏப்ரல் மாத இறுதிப்பகுதியிலிருந்து முடக்கத்தை நீக்கி பாதுகாப்புடனான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயலுகின்றனர். எனிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கான இரண்டாவது அலையும் ஐரோப்பாவை உரசும் சூழலும் காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையும் 2020 மே மாதம் 11ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிந்த அனைத்து மாவட்டங்களினதும் சமூக முடக்கத்தை நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் தங்களதும், தங்கள் சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இக்கட்டுரை சமூக முடக்க தளர்வுக்கு பின்னரான மக்கள் வாழப்போகும் வாழ்க்கையில் தற்பாதுகாப்பின் தேவையை விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் ஒரு மாதமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தளர்த்தப்பட்டது. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்...

கொரோனா ஐ.நாவை பிளவுபடுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கிற்கான மாற்றம் இன்னுமோர் உலகப்போர் ஏற்படுமாயினேயே சாத்தியம் எனப்பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. சமகாலத்தில் உலக நாடுகள் யாவிலும் பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கமும் பெரும் போராகவே யாவராலும் அவதானிக்கப்படுகின்றது. இந்நிலையில் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட உலக ஓழுங்கை முழுமையாய் மாற்றுவதற்கான வாய்ப்பை கொரோனா வைரஸின் தாக்கம் உருவாக்கியுள்ளதோ என்பதே சமகால சர்வதேச அரசறிவியலாளர்களின் தேடலாக காணப்படுகின்றது. அதற்கு வலுச்சேர்ப்பதாகவே சர்வதேச அமைப்புக்களின் அதிகார நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களும் நோக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் சமீபகால அறிக்கைகள் யாவும் சீனா நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றமை அதற்கான சான்றாகும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திலும் கொரோனா பரவுகைக்கு முன்னதாகவே சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு பின்னரான உலக ஓழுங்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் அமெரிக்காவின் அதிகார நிலையினை சீனா கைப்பற்றுமா? என்பதை தேடுதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ...

உலக நாடுகளின் கொரோனா கால தேர்தல் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா? ஐ.வி.மகாசேனன்

Image
கொரோனா உலகம் பூரா நாடுகள் இடையேயும் நாடுகளுக்குள்ளேயும் அரசியல் பிணக்குகளை விதைத்து வருகின்றது. சனநாயகத்தை மையப்படுத்திய தேர்தல்களை நடாத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பிலும் நாடுகளுள்ளே கொரோனா வைரஸ் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. நாடுகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று வருகின்றனர். இலங்கையிலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலே பிணக்குகள் நீண்டு கொண்டே செல்கின்றது. அதனடிப்படையில் உலக நாடுகளின் உதாரணங்களை கொண்டு இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பான சர்ச்சைக்கு விடை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் உலக நாடுகள் கண்ணுக்கு புலப்படாத மற்றும் முடிவு தெரியாத ஒரு  தீநுண்மத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். குறித்த கொரோனா தீநுண்மத்திற்கு எதிரான போரில் அரசாங்கங்கள் அவசரகால அரசாங்கங்களாய்; பிரகடனப்படுத்தி செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே நிரல்படுத்தப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான சனநாயகத்தை மையப்படுத்திய தேர்களை நடாத்துவது என்பது அரசியல் ரீதியிலான சிக்கலை ஏற்ப...

சுயகற்றலை வளர்க்க இணையவழி கற்றலை ஓர் சாதனமாக கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா வைரஸ் பரவுகையும் அதுசார்ந்த பாதுகாப்பை மையப்படுத்தி அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளும் இலங்கை மக்களில் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. அன்றாட கூலி வேலை செய்து உழைத்த மக்கள் வேலையின்றி பெரும் சிரமப்படுகின்றார்கள். நிறுவனங்களில் வேலை செய்தவர்களின் நிலைப்பாடும் ஊரடங்கின் பின் வேலை தொடருமா என்ற கேள்விக்குறியில் காணப்படுகின்றது. இதை தாண்டி சில அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை என இணையவழி முறையூடாக வேலையை மேற்கொள்ளும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துகின்றார்கள். இவ்வாறான பொறிமுறையிலேயே இணையவழி கல்வி முறைமையை மாணவர்களுக்கும் மேற்கொள்ள அரசாங்கம் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆயினும் இதன் சாத்தியப்பாடு தொடர்பிலே பல எதிர்மறையான விமர்சனங்கள் சமூக பரப்பில் நிறைந்து காணப்படுகின்றது. அதனடிப்படையில் எம்சமூகத்துக்கு பொருத்தமான சுயகற்றல் வழிமுறையை தேடுவதாகவே குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா பரவுகை அடையாளங்காணப்பட்டதும் முதலில் முடக்கப்பட்ட நிறுவனமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலான கல்விசார் நிறுவனங்களே ஆகும். அது த...