Posts

Showing posts from September, 2024

இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசத்திலும் அரசியல் ரீதியாக அதிக விவாதங்களை உருவாக்கியுள்ளது. அநுரகுமார திசநாயக்காவின் வெற்றியும், இடதுசாரி மரபுடைய ஜே.வி.பி.யின் எழுச்சியும் அதிக கவனத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை ஆட்சி மாற்றம் தொடர்பான 'அமைப்பு மாற்றம்' எனும் விபரிப்புகள் சாத்தியப்படுத்தக்கூடியதா எனும் தேடல்களும் பொதுஆய்வு பரப்பில் உருவாகியுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் ஆட்சி மாற்றங்கள் சில சிறப்பு பெயரிடல்களால் விபரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1994ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் சந்திரிக்கா குமாரதுங்கா அமைதிப் புறாவாக சித்தரிக்கப்பட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக பெயரிடப்பட்டது. எனினும் ஆட்சிக்காலப்பகுதிகள் கருப்பன் வெள்ளையாக இருந்த நிலைமையினையே பிரதிபலித்திருந்தது. பெயரிடலுக்கும் ஆட்சி இயல்புகளுக்கும் பொருத்தப்பாடு இருந்ததில்லை. தற்போது 2024இல் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும், அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ஆகியுள்ளமையும் அமைப்பு மாற்றத்திற்கான (System Chang...

தமிழ்ப்பொதுவேட்பாளரின் தேர்தல் முடிவு தேசக்கட்டுமானத்திற்கு வாய்ப்பு வழங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் உயர்ந்தபட்ச ஜனநாயக திருவிழாவான ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி முழு இலங்கைத் தீவும் பரபரப்பாக காணப்பட்டிருந்தது. இது, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடி மற்றும் அரகலயவை தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது மக்கள் தேர்தலாக அமைகின்றது. இவ்அடிப்படையில் தென்னிலங்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம் முதலே எதிர்கூறப்பட்டது. அதேவேளை தமிழ் அரசியல் பரப்பும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இம்முறை அதிக குழப்பங்களையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தி இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக கருத்தியலாக மட்டுப்பட்டிருந்த தமிழ்ப் பொதுவேட்பாளர், தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. வெற்றி என்ற எண்கணிய இலக்குகளைக் கடந்து, தமிழ்த் தேசிய கட்டுமானம் என்பது தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியலில் முதன்மையான உரையாடலை பெற்றிருந்தது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தமிழ்ப் பொது வேட்பாளரின் தேச கட்டுமானத்துக்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளதா என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்-21அன்று நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் முழுமையாக செப்டம்பர...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடிகளும் புதிய அரசதலைவரின் முன்னுள்ள சவாலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டுக்கு பின்னர், மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கை அரசியலில் தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் ஈழத்தமிழ் அரசியல் கொதிநிலையாக காணப்படும். இக்கொதிநிலை ஈழத்தமிழ் அரசியலை பொறுத்தவரை மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு பின்னர் நீர்த்துப் போவதாக அமையும். அதேநேரம் இலங்கை அரசாங்கங்கள் அரசுடைய தரப்பாக அக்கொதிநிலையை நிரந்தரமாக நீர்த்துப்போவதற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதுண்டு. அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுவது போன்று, இக்காலம் ஜெனிவா திருவிழா காலப்பகுதியாகும். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் அரசியல் தரப்பினர் முட்டி மோதிக்கொண்டு இருப்பதனால், ஈழத்தமிழர்கள் ஜெனிவா திருவிழாவிற்கு அதிக அக்கறையை செலுத்த தவறியுள்ளார்கள். எனினும் இலங்கை அரசாங்கம் வழமை போன்றே ஐ.நா மனித உரிமைகள் பேரவையை உறுப்பு நாடுகளை கையாளவும், தீர்மானத்திற்கு எதிர்வினையாற்றவும் குழுவொன்றை ஜெனிவாவிற்கு அனுப்பியுள்ளது. இக்கட்டுரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கையின் உள்ளடக்கங்களை பரிசீலிப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்-22 புதிய அரசாங்கத்தின் தலைவராக தெரிவ...

பங்களாதேஷ் மாணவர் போராட்டமும் பங்களாதேஷின் தேசியவாத முரண்பாட்டு அரசியலும்! -சேனன்-

Image
பங்களாதேஷின் அரசியல் வரலாறு என்பது இந்திய உபகண்டத்தின் தொடர்ச்சியானதாகவே அமைகின்றது. பங்களாதேஷ் அரசு உருவாக்கம் 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போரின் விளைவிலானதாகவே சாத்தியமாகியது. 1947ஆம் ஆண்டு வரை இந்தியா புவிசார் எல்லையில் ஒரு பகுதியாகவே பங்களாதேஷின் அமைவிடம் அமைந்திருந்தது. பாகிஷ்தான் பிரிவினைக்கு பின்னர், பாகிஷ்தானின் புவிசார் எல்லைக்குள் கிழக்கு பாகிஸ்தானாக 1971ஆம் வரையில் காணப்பட்டது. இந்த பின்னணியில் பங்களாதேஷின் அரசியல் கலாச்சாரம், அரசியல் இயல்பு என்பன இந்திய இலக்கணங்களுக்குள்ளேயே பகுப்பாய்வு செய்ய வேண்டிய விடயமாக அமைகின்றது. அப்பிரதிமைகளே தென்னாசிய நாடுகளில் விரவி காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் புரட்சியினால் அகற்றப்பட்டுள்ளது. இது ஜனநாயக எழுச்சியாகவும், தேசியவாத மோதலாகவும் அரசியல் ஆய்வாரள்கள் மத்தியில் பல தரப்பட்ட ஆய்வுகள் மேலெழுந்துள்ளது. இதில் பங்களாதேஷின் ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றுடன், சுதந்திர போராட்ட வரலாற்றையும் அணுக வேண்டியுள்ளது. இக்கட்டுரை வரலாற்று பின்புலத்தில் பங்...

ஜனாதிபதி தேர்தல் 2024 : ஜனநாயக உரிமையான வாக்குரிமையை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இன்று உலகம் ஜனநாயகத்தை தேர்தல்களுக்கு உள்ளேயே சுருக்கியுள்ளது. அந்த அடிப்படையில் இலங்கையின் ஆட்சித் தலைவருக்கான ஜனநாயகத் திருவிழா அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் செப்டம்பர்-18ஆம் திகதியுடன் நிறைவுறுகின்றது. செப்டம்பர்-21ஆம் திகதி மக்கள் வாக்குச்சாவடிகளில் தங்களது தெரிவை நிகழ்த்த உள்ளார்கள். செப்டம்பர்-22ஆம் திகதி இலங்கை தேர்தல் ஆணைக்குழு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சித் தலைவரை தெரிவிக்க உள்ளது. கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலிருந்து வேறுபட்ட வகையில், ஈழத்தமிழர்கள் இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலை புதியதொரு போராட்டமாக பரிட்சித்து பார்த்து உள்ளார்கள். தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை திரட்சியாக வெளிப்படுத்தும் களமாக இலங்கை ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த முற்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் தேசிய திரட்சி, தமிழ் மக்களை பிரித்தாள்பவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆதலால் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் முரணான சதிக்கோட்பாடுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்கள். எனினும் மக்கள் எழுச்சி சதிக்கோட்பாடுகளை தகர்த்துள்ளதாகவே அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகின்...

இலங்கையின் பாரம்பரிய அரசியல் தரப்பின் தோல்வி; அநுரகுமார திசாநாயக்கவை பலப்படுத்துகிறதா? -சேனன்-

Image
இடதுசாரி விம்பத்தை கொண்டதொரு அரசியல் கூட்டணி, இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வலுவான போட்டியாளராக வெளிப்பட்டுள்ளது. ஜே.வி.பி புரட்சி குழுவாக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், 1982ஆம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தலை அதன் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜயவீர எதிர்கொண்டிருந்தார். எனினும், 4.19சதவீத வாக்குகளையே பெற்றியிருந்தார். இலங்கையின் முன்னோடியில்லாத அரசியல் பொருளாதார நெருக்கடி, பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றத்தை ஏற்படுத்திய போது, மில்லியன் கணக்கான மக்கள் அழைப்பு விடுத்த மாற்றத்தின் முகவராக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் விம்பத்தில் அறிவித்துக்கொண்டுள்ளார். அநுரகுமார திசாநாயக்க Associated Press ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், 'எங்கள் நாட்டு மக்கள் ஒரு மாற்றத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். நாங்கள் அந்த மாற்றத்தின் முகவர்கள். மற்ற அனைத்து வேட்பாளர்களும் பழைய, தோல்வியுற்ற, பாரம்பரிய அமைப்பின் முகவர்கள்' எனக்குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரமும் மாற்றத்தின் முகவர்களாகவே முதன்...

மக்கள் எழுச்சிபெறும் தமிழ்ப்பொதுவேட்பாளரும் ; நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியல் கட்சிகள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது . அதேவேளை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகள் அதிக முனைப்புடன் கண்காணித்து வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது . 1982 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தல்களில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் என்பது முழு இலங்கையிலும் பல குழப்பங்களையும் எதிர்பாராத மாற்றங்களையும் உருவாக்குவதாக அமைகின்றது . குறிப்பாக ஈழத்தமிழர் அரசியலில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய உரையாடலுக்கு சமாந்தரமாக உரையாடலைப்பெற்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் தேர்தலை அண்மித்து எழுச்சி பெற்று வருவதனை களச்சூழல்கள் வெளிப்படுத்துகின்றது . ஆகஸ்ட் -18 அன்று முல்லைத்தீவில் தமிழ்ப்பொதுவேட்பாளர் அறிமுக கூட்டத்தின் தமிழ் மக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தது . தற்போது செப்டெம்பர் -8 அன்று வவுனியாவில் இடம்பெற்ற தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றியிருந்த...