Posts

Showing posts from April, 2020

கொரோனா தொற்றை தவிர்க்க புத்தரின் போதனை வழியில் செயற்படுமா இலங்கை? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை ஏதோ ஓர் சுழலில் கொரோனா வைரஸ் அபாயத்துக்குள் சென்று கொண்டுள்ளது என்பதையே அண்மைய தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. சடுதியாக 3 நாட்களுல் 200இற்கும் மேற்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுகாதார சபை செஞ்சிலுவைச்சங்கத்திடம் 1000 பிரேத பைகளை கேட்டுள்ளமையும் இலங்கை மக்களை மேலும் பீதிக்குள்ளும் தள்ளியுள்ளது. இன்றைய சூழலில் தீர்க்கமான வகையில் இலங்கையில் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே பரந்த மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டி உள்ளது. இலங்கையின் இயல்பில் விரும்பியோ விரும்பாமலோ மதரீதியான செல்வாக்கு அதீதமாக காணப்படுவதனால் கொரோனா பரவுகையை கட்டுப்படுத்துவதில் மதரீதியான பங்களிப்பினையும் ஆராய வேண்டி உள்ளது. இலங்கை அரசியலமைப்பு ரீதியாகவே புத்த பகவானின் பின்தோன்றலான பௌத்தத்தை இறுக்க கட்டி கொண்டு விட்டது. புத்த பகவானின் சித்தாந்தத்தையும் இறுக பின்பற்றினேயே இலங்கையின் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக காணப்படும். ஆயினும் பௌத்தத்தை இறுக அணைத்துள்ள இலங்கை அரசு பௌத்த சித்தாந்தத்தை தள்ளியே வைத்துள்ளமை துர்ப்பாக்கியமே ஆகும். கொரோனா பரவுகையின் பின்னர் தமி...

ஹிட்லர்: புதிர்களின் புதல்வன் -ஐ.வி.மகாசேனன்-

Image
வரலாறு உருவாக்கிய தலைவர்களுள் வரலாற்றை உருவாக்கிய தலைவர்களும் காணப்படுகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரையில் புதிராய் நிறைந்தவரே அடோல்ப் ஹிட்லர் ஆவார். ஆஸ்திரியாவில் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அலோய்ஸ் ஹிட்லருக்கும் கிளாராவுக்கும் மகனாக பிறந்து 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மரணத்தை வரவழைக்கும் வரையில் செய் அல்லது செத்து மடி என வாழ்ந்தார்.  இன்று 75ஆம் ஆண்டு நினைவவு நாள் கடக்கின்ற போதிலும் முடிச்சுக்கள் அவிழ்க்க முடியாத மர்மமாகவே ஹிட்லரின் வாழ்க்கை காணப்படுகின்றது. ஹிட்லர் என்ற தனிஒருவன் இல்லை என்றால் இன்றைய உலக ஒழுங்கு குறித்த வடித்தில் இருந்திராது. இரண்டாம் உலகப்போரின் உருவாக்கம், யூத இனப்படுகொலை என்ற இரு தவறுகளுக்குள் ஹிட்லரின் பல வெற்றிகள் மற்றும் குணங்கள் மறைக்கப்பட்டுவிட்டது. ஒரு வரலாற்றாசிரியரின் கடமை தீர்ப்பு எழுதுவதல்ல. புரிந்து கொள்வது தான். ஆயினும் ஹிட்லரின் வரலாற்றில் புரிதல் கடினமே. ஹிட்லரை வேறு எப்படியும் பார்க்க முடியாது எனும் அளவிற்கு மிகக்கறாராகவும் மிக வலுவாகவும் ஹிட்லரை நாம் மதிப்பிட்டு முடித்துவிட்டோம். ஏந்தவொரு புதிய ஆய்வும், பதிய பார்வை...

இலங்கையில் கொரோனா தொற்றுகாவிகளாக படையினர் உள்ளனரா? -மித்ரசகி-

Image
உலகில் அனர்த்தகாலங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின் போது இராணுவத்தினரின் கடமைகள் முதன்மையாகின்றது. இலங்கை என்ற முழு தேசத்திலும் காலத்திற்கு காலம் இடம்பெற்றுள்ள அனர்த்த மற்றும் அவசரகால நிலைமைகளில் இராணுவத்தின் கடமைகள் முதன்மைபெற்றிருந்தன. முன்னர் 2004ஆம் ஆண்டிலே உலகை பெரும் அழிவிற்கு உட்படுத்திய சுனாமி அனர்த்த காலத்தில் இலங்கை மக்களுக்கான சேவையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ கட்டமைப்பும் இலங்கை இராணுவ கட்டமைப்பும் இணைந்து பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறானதொரு நிலைமையிலேயே இன்று உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் அனர்த்தத்திலிருந்து இலங்கையை மீட்க இலங்கையின் இராணுவ கட்டமைப்பு பணியாற்றுகின்றது. ஆயினும் இலங்கை இராணுவம் இலங்கையின் வடக்கிற்கும் தெற்கிற்கும் மாறுபட்ட உருவங்கள் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். மேலும் இராணுவத்தை மையப்படுத்தியே அண்மைக்காலத்தில் இலங்கையின் கொரோனா வைரஸ் பரவுகை அதிகரித்து செல்கின்றமையும் அவதானிக்க வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. இதனடிப்படையிலே இலங்கையின் கொரோனா பரவுகையும் இராணுவ பாதுகாப்பையும் மையப்படுத்தியே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ...

பெண்கள் மீதான புதிய பார்வை..! கொரோனா நடவடிக்கைகளால் உச்சத்தை தொட்டவர்கள். -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா தொற்று பரவல் பல மாற்றங்களையும் புதிய பார்வைகளையும் உலகுக்கு தினம் தினம் வழங்கி வருகின்றது. கொரோனாவினால் மக்கள் முடங்கி இருக்கையில் இயற்கை தன் அழகை மீளப்பெற்று வருவதும் மறுக்க முடியாத உண்மையாய் காணப்படுகின்றது. பெண்கள் வீட்டுக்குள் முடங்கிய காலம் மாறி அதிகாரத்தை நிலைநாட்டும் உச்சம் தொட்ட போதிலும் ஆட்சியதிகார திறமையானது பெண்களினிலும் ஆண்களிடமே அதிகமாய் உண்டு என்ற பார்வையே சமூகப்பரப்பில் அதிகமாக காணப்படுகின்றது. எனிலும் கொரோனா வைரஸ் பரவுகை பெண்கள் மீதான பார்வையிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசுகளையே கொரோனா வைரஸ் தொற்று கதிகலங்க செய்துள்ள சூழலில் பெண்கள் தலைமைதாங்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் உலகநாடுகளே வியந்து பார்க்கின்றன. இக்கட்டுரையும் உலக அரங்கில் பெண் தலைமைத்துவ நாடுகள் கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதால் ஏற்படுத்திய புதிய பார்வையையே விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் மெக்கின்டோசின்(1985) குறிப்பில், உறுதியான நடவடிக்கை குறித்த விவாதம் ஒன்றின் போது ஒரு பெண் உளவியலாள...

ட்ரம்ப் அரசியல்நலன் கருதி சீனா மீது குற்றஞ்சாட்டுகிறாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
முழு உலகையே முடக்கி போட்டுள்ள பேரவலமாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றது. கோரோனா வைரஸ் பரவுகையால் நோய் ஏற்படுகின்றது என்பதையும் தாண்டி கொரோனா வைரஸ் பரவுகையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகளாவிய போர் ஒன்றுக்கான முன்னாயரய்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.  2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தொற்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 2020ஆம் ஆண்டு சனவரி ஆரம்பத்தில் அடையாளங்காணப்பட்ட நாள்முதலேயே சர்ச்சைகள் மலிந்த விடயமாக கொரோனா வைரஸின் தோற்றுவாய் காணப்படுகின்றது. பொருளாதார போரில் ஈடுபட்டு வந்த சீனா மற்றும் அமெரிக்க கொரோனா வைரஸின் தோற்றுவாயை அடிப்படையாய் கொண்டு ஒருவோர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி ஏறத்தாழ நான்கு மாதங்களாக வார்த்தைகளால் போர் நிகழ்த்தி கொண்டுள்ளனர். ஒருபுறம் கொரோனாவின் இழப்பு அதிகரித்து கொண்டு செல்லும் அதேவேளை மறுபுறம் சர்ச்சைகளையும் அரசியல் நலன்சார்ந்து அரசியல் தலைவர்கள் தூவி விடுகின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலே மேற்குநலன்சார் ஊடகங்களும், விஞ்ஞானிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். இக்கட்டுரையும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாக சர்ச்சைகள் நிரப்பப்பட்டுள்ள வூஹான் நோய...

கொரோனா தொற்றும் அரசியல் தலைமைகளும் - ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா அபத்தம் முடிவற்ற அழிவாகவே நீண்டு கொண்டு செல்கின்றது. எனிலும் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவுகையின் விளைவால் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் தாக்கங்களை சீர்செய்ய ஆபத்தான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். முழுமையாய் கொரோனா வைரஸ் பரவுகை கட்டுக்குள் வராத போதிலும் சமூக நலனை புறந்தள்ளி ஊரடங்கு முடக்கத்தை தளர்த்தி  இயல்பு நிலைக்கு திரும்ப முற்படுகின்றனர். இலங்கை அரசாங்கமும் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படாத சூழலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கை பகலில் தளர்த்தி உள்ளனர். அத்துடன் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலாக்கப்பட்ட பிரதேசங்களிலும் ஏப்ரல் 27ஆம் திகதி காலை ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசியல் பரப்பிலும் அரசியல் கட்சிகளிடையே பாரளுமன்ற தேர்தலை பற்றிய உரையாடல் மேலோங்கி காணப்படுகின்றது. இது கொரோனா தடுப்பிலிருந்து அரசாங்கத்தின் பார்வை திசை திரும்புவதை வெளிப்படுத்துகின்றது. இதனடிப்படையிலேயே குறித்த கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் பார்வை கொரோனா தடுப்பில...

கொரோனாவின் கைகளிலேயே நாளைய உலக ஒழுங்கு; அதுவே இன்றைய யதார்த்தம். -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக அதிகாரத்தை பெற அரசியலிலும் பொருளாதாரத்திலும் நாடுகள் முட்டி மோதிக்கொண்டு இருக்கையில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர் உலக ஒழுங்கையே மாற்றி வருகின்றது. உலகளவில் 210 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களாய் இருபது லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கோவிட்19 நோயில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் இறந்துள்ளனர்.  சீனாவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோணா வைரஸ் 2020ஆம் ஆண்டின் பெப்ரவரி நடுப்பகுதிக்கு பின்னர் ஐரோப்பியா நாடுகளை தாக்கியதுடன் இன்று ஒற்றை மைய அரசியலின் சக்கரவர்த்தியான அமெரிக்காவினையும் திணறடித்துள்ளது. அமெரிக்காவின் மீள முடியாத இழப்பு 1989ஆம் ஆண்டுக்கு பிற்பட உலகில் நிலவும் ஒற்றை மைய அரசியலை தகர்த்துவிடும் நிலையே காணப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த கட்டுரையானது ஒற்றைமைய அரசியல் தகர்க்கப்பட்டு ஏற்பட இருக்கும் புதிய உலக ஒழுங்கு இருதுருவ அல்லது பல்துருவ அரசியல் ஒழுங்காய் அமைவதற்கான சாத்தியப்பாட்டை விளக்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை...

கொரோனாவின் துயரமும் உளவியல் தேவையும் -மித்ரசகி-

Image
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முழு உலகையும் போர்க்கால பீதிக்குள் தள்ளியுள்ளது கொரோனா வைரஸின் தாக்கம். போர்க்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் உடல்சார் மற்றும் பொருள்சார் இழப்புக்கள் நேரடியாக தெரியும் பிரச்சினையாக காணப்படுகின்றது. போரின் பின்னர் அவ்வடுக்களை களைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்சினை என்பது வெளிப்படையாக தெரியாத போதிலும் நீண்ட காலத்திற்கு மக்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கின்றது. போரின் நிறைவில் இலைமறை காயாகவே உளவியல் ஆற்றுகைள் மேற்கொள்ளப்படும். அவ்வாறே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் இனங்காணப்பட்டோருக்கான கோவிட்19 நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இயலுமானவரை உயிரை காக்க போரடப்படுகின்றது. ஆயினும் மறுதலையாய் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் உளவியல்ரீதியான பிரச்சினைகளுக்கு சரியான உளவள ஆற்றுகைக்கான முன்னாயர்த்த செயற்பாடுகள் இதுவரை எந்த தரப்பாலும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாகும். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற ஆயூத போராட்டம் மௌனிக்கப்பட்டு ஓர் தசாப்...

இலங்கை சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்தல் வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா வைரஸின் தாக்கம் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சூழலியலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றது. அண்மையில் நாசா வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் உலகில் காற்று மாசுபாடு கணிசமாக குறைவடைந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும் உலகளவில் நிகழும் அவசரகால சட்டத்தினூடாக சனநாயகம், சுதந்திரம் என்பன கேள்விக்குறியாக காணப்படுகின்றது. சமூக இடைவெளியை உறுதிபடுத்துவதற்கான ஊரடங்கு சட்டம் இயந்திரமாக சுழன்ற மனிதனை குடும்பத்தோடு அன்னியோன்னியத்தை உருவாக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. பொருளாதார ரீதியில் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி சூழலை கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலும் உலக நாடுகளினை சார்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினையே கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. அதனடிப்படையிலேயே கொரோனாவிற்கு பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சீர்செய்வதற்கான சிபார்சுகளை சுயசார்பு அரசியல் பொருளாதாரத்தை மையப்படுத்தி குறித்த கட்டுரை விபரிக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக அபத்தமானது உலகமயமாதல் எண்ணக்கருவின் விளைவுகளில் ஒன்றே ஆகும...

அமெரிக்காவின் உலக எஜமான் மகுடம் பறிபோகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் நீயா? நானா? என முட்டி மோதிக்கொண்டிருக்கையில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர் உங்கள் அனைவரிலும் நான் தான் சர்வவல்லமை பொருந்தியவன் என வெளிப்படுத்தி நிற்கின்றது. உலகளவில் 210 பிரதேசங்களினை படையெடுத்து ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ், இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான இருதுருவ அரசியல் ஒழுங்கிலும் 1989ஆம் ஆண்டுகளுக்கு பிற்பட்ட ஒற்றைமைய அரசியலிலும் வல்லரசாக திகழ்ந்து வரும் அமெரிக்கா பேரரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. அமெரிக்க பேரரசில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பிற்கு அமெரிக்க பேரரசன் டொனால்ட் ட்ரம்பின் பலவீனமான ஆட்சி இயல்பே காரணம் என அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள், மக்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் மாத்திரமின்றி உலக சுகாதார அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தல் ட்ரம்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதனடிப்படையிலேயே குறித்த கட்டுரையானது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமான ட்ரம்பின் பலவீனமான ஆட்சி இயல்பை விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவில் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது, ...